<$BlogRSDUrl$>

Wednesday, June 02, 2004

கல்யாணமாம் கல்யாணம் ... !


திருமணத்தைப் பற்றி வேடிக்கையான பொன்மொழிகளை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவற்றில் சில புன்முறுவலை வரவழைக்கும்படியாய் இருந்தன.

"... மகிழ்ச்சி மட்டுமே வாழ்க்கை அல்ல .. எனவே திருமணம் செய்து கொள்ளுங்கள் .."

".. ஆர்க்கியாலஜிஸ்ட் ஒரு பெண்ணுக்குக் கணவனாய் வர மிகப் பொருத்தமானவர், ஏனென்றால் அவருக்குத்தான் ஒரு பொருளின் வயது அதிகமாக அதிகமாக அதன் மீது ஆர்வம் கூடிக்கொண்டே இருக்கும்..."

"..பெண்துணை இல்லாத மனிதன் சைக்கிள் இல்லாத மீனுக்கு ஒப்பாவான்.."

"...அன்றுதான் கல்யாணமானவன் சிரித்துக்கொண்டே இருப்பது ஏனென்று எல்லாருக்கும் தெரியும், ஆனால் கல்யாணமாகி பத்து வருடம் ஆன ஒருவன் சிரித்தால் இவன் ஏன் சிரிக்கிறான் என்று எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்.."

"..காதலுக்குக் கண் இல்லைதான் ஆனால் திருமணம் கண்ணைத் திறந்து வைக்கும் .. "

இன்னும் திருமணம் ஆகாதவர்கள் இதுபோல் பொன்மொழிகளை இப்போதே படித்து ரசித்து சிரித்துக் கொள்ளவும். :)

பின்குறிப்பு :
பெண்கள் யாரும் இதற்காய் சண்டைக்கு வர வேண்டாம், இதைப் படித்து யாருக்காவது கோபம் வந்தால் அவர்களுக்கு இந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பியவரின் முகவரியைத் தருகிறேன் ... :)
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com