<$BlogRSDUrl$>

Saturday, May 29, 2004

டை கட்டிய டாக்டரா .. ? உஷார் .. !


ஆபத்தான விஷக்கிருமிகள் தாக்கி நோய் வந்தால் மருத்துவரிடம் போகலாம். மருத்துவரே விஷக்கிருமிகளை வைத்திருத்தால் யாரிடம் போவது.. ? ( இதைத் தங்கப் பதக்கம் சிவாஜி ஸ்டைலில் வாசிக்கவும்). சில நாட்களுக்கு முன்னால் அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரியவந்த விஷயம் கொஞ்சம் யோசிக்க வேண்டியதாய் இருக்கிறது. நம்மூரில் பெரும்பாலான டாக்டர்கள் கழுத்தில் டை கட்டிக்கொண்டு வைத்தியம் பார்ப்பதாய்த் தெரியவில்லை. எனவே இந்த விஷயத்தில் நம்மூரில் யாரும் அந்தளவுக்குப் பயப்படவேண்டியதில்லை. விஷயத்தைச் சொல்லவே இல்லையோ .... விஷயம் இதுதான், மருத்துவர்கள் கட்டியிருக்கும் டையில் வழக்கமாய் இருக்கும் கிருமிகளின் அளவைவிட பலமடங்கு அதிகமாய் இருப்பதாய்த் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் வேலையில் பார்க்கும் செக்யூரிட்டி நபர்களின் டையுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட எட்டு மடங்கு அளவு கிருமிகள் அதிகமாய் இருக்கிறதாம். இதனால் சில நாடுகளின் மருத்துக் கழகங்கள் மருத்துவர்கள் பணியில் இருக்கும்போது டை கட்டுவதைத் தடை செய்ய முடிவு செய்திருக்கிறார்கள்.நோயாளிகளை மருத்துவர்கள் நெருங்கிச் சோதனை செய்யும்போது டை அவர்களை உரசுவதும் , நோயாளிகளைச் சோதனை செய்தபின் கையை டையில் தடவுவதும் இதற்குக் காரணம் என அறியப்பட்டுள்ளது.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com