<$BlogRSDUrl$>

Wednesday, April 21, 2004

காந்தள் மலர்

கார்த்திகைப் பூ என்ற காந்தள்மலர்காந்தள் மலர் என்ற கார்த்திகைப் பூ பற்றிச் சுந்தரவடிவேல் எழுதியிருந்தார். அதன் மருத்துவ குணங்கள் மற்றும் இதர பண்புகளைப் பற்றிச் சிரத்தையுடன் தேடிச் சொல்லியிருந்தார். அந்தப் பூவைப் பார்த்தவுடன் எனக்குப் பழைய பள்ளி ஞாபகங்கள் வருது. நான் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாவது வரை படித்த பள்ளிக்கு அருகில் இந்தப் பூக்கள் நிறைய இருக்கும். சிலர் அதைப் பறித்து விளையாடுவதும் உண்டு.. "மெட்ராஸ் ஐ" என்ற கண்வலி சீஸனில் பள்ளிச் சிறுவர்கள் இந்த மெட்ராஸ் ஐ வருவதற்கு ஏகப்பட்ட கதைகள் சொல்வார்கள் . எனது மூன்றாம் வகுப்பு கிளாஸ்மேட் அப்போ ஒரு தடவை சொன்னது நல்லா ஞாபகம் இருக்குது.

".......இந்தப் பூவைப் பார்த்துக்கிட்டே இருந்தால் நாளைக்கு உனக்கு மெட்ராஸ் ஐ வந்துரும்.. சந்தேகமிருந்தால் சோதனை பண்ணிப் பாரு ..."

அப்போதுதான் "மெட்ராஸ் ஐ" கண்வலியால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவன் அவனுடன் சேர்ந்து கொண்டு சாட்சி சொன்னான்,

"......நேத்து இந்தப் பூவை வச்சு விளையாண்டதால்தான் இன்னைக்கு எனக்குக் கண்வலி வந்துவிட்டது.. "

அன்றைக்குத் தற்செயலாய் இந்தப் பூவைப் பார்த்தால்கூடக் கண்களைக் கையால் மூடிக்கொண்டு போய்க்கொண்டிருந்தேன். எனக்குப் பயமெல்லாம் இல்லை.. நானாவது பயப்படுறதாவது.. இருந்தாலும் ஒரு பாதுகாப்புக்காகத்தான்.. :) :)
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com