<$BlogRSDUrl$>

Wednesday, April 14, 2004

சில்லறை கேட்ட பெண்மணி கைது ...

தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ தினத்தந்தி செய்தி மாதிரி இருக்குதா..?. போன மாதம் அமெரிக்காவில் நடந்தது இது. ஒரு பெண்மணியை சில்லறை கேட்ட குற்றத்துக்காக கைது செய்திருக்கிறார்கள். சில்லறை கேட்பது ஒரு குற்றமா என முதலில் தோன்றலாம், முழுவதையும் படித்துவிட்டு முடிவுக்கு வரலாம். போன மாதம் ஒரு பெண்மணி அமெரிக்காவில் வால்மார்டில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் செலுத்துவதற்காக 1 மில்லியன் அமெரிக்க டாலரைக் கொடுத்தார் எனக் கூறப்படுகிறது. இதில் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் அமெரிக்காவில் அந்தளவுக்குப் பெரிய நோட்டையெல்லாம் வெளியிடுவதே இல்லை. அந்தப் பெண்மணி சொல்வது என்னவென்றால்

".... நான் இரண்டு டாலருக்கு வாழ்த்து அட்டை வாங்கினேன் , பணம் செலுத்துமிடத்தில் என்னிடம் இருப்பது இதுதான் எனறு சொல்லி இந்த நோட்டைக் காட்டினேன்... என்னைக் கைது செய்துவிட்டார்கள்.. இது பைத்தியக்காரத்தனமாய் இருக்கிறது"

பெரிய நோட்டு


போலீஸ் காவலில் இருக்கும் அவரிடம் அமெரிக்கா 1 மில்லியன் டாலர் நோட்டை வெளியிடுவதில்லையே ... உங்களுக்குத் தெரியாதா எனக் கேட்டதற்கு,

"..... அரசாங்கம் எந்த எந்த நோட்டை வெளியிடுகிறது என்று தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கமுடியாது..." என்கிறாராம்.

காவல்துறை 1 மில்லியன் டாலர் நோட்டுக்குச் சில்லறை கேட்டதாய் வழக்குப் பதிந்திருக்கிறதாம் .. :)
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com