<$BlogRSDUrl$>

Sunday, March 28, 2004

போறவங்களுக்கு வழி ..

காமராஜர் பற்றி பத்ரி எழுதியிருந்தார். அதைப் படித்தவுடன் காமராஜர் பற்றிக் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. காமாரஜர் தேர்தல் சமயத்தில் கூட இன்றைய அரசியல்வாதிகள் சொல்வதைப்போல இந்தத் தொகுதியை துபாய் ஆக்குவேன் , அந்தத் தொகுதியை சிங்கப்பூராக்குவேன் என்று சொன்னதில்லை. மக்கள் அவர்கள் ஊருக்குச் சில வசதிகள் செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்கும்போதுகூட "பார்க்கலாம்.... முயற்சிக்கிறேன்.." என்பதே அவரது பதிலாய் இருக்குமாம்.

அடிக்கடி மக்களைச் சந்திக்க சுற்றுப்பயணம் செல்வது அவரது வழக்கம் ... ஒரு முறை ஒரு ஊருக்குச் சென்றபோது அவ்வூர் மக்களில் ஒருவர்,

" அய்யா .... எங்கள் ஊரில் சுடுகாட்டுக்கு வழி சரியில்லை, நீங்கள்தான் நல்ல சாலை அமைத்துத் தரவேண்டும் ... " என்றார்.

காமராஜர் சொன்ன பதில்,

" அண்ணே ... நான் இருக்கறவங்களுக்கு வழி தேடுறேன்... நீங்க போறவங்களுக்கு வழி கேக்குறீங்களே ... ... சரி.. பார்க்கலாம் "

காமராஜரின் இப்பதிலைக் கேட்டவுடன் பக்கத்தில் இருந்த அனைவரும் சிரித்துவிட்டனராம்.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com