<$BlogRSDUrl$>

Thursday, April 01, 2004

புற்றுநோய்க்கு ஒரு மிக எளிய மருந்து ...

மஞ்சள் மஞ்சளின் மருத்துகுணம் பற்றி பல நூற்றாண்டுகளாய் நம் ஊரில் சொல்லப்பட்டு வருவதுதான்.. விஞ்ஞானிகள் மஞ்சளின் மற்றொரு முக்கிய மருத்துவப் பண்பைக் கண்டறிந்துள்ளனர்.. மஞ்சள் புற்று நோயை எதிர்க்கும் தன்மை கொண்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.. இன்னும் கொஞ்சம் தெளிவாய்ச் சொல்வதானால் மஞ்சளின் மஞ்சள் நிறத்துக்குக் காரணம் அதில் இருக்கும் "கர்குமின் " என்ற வேதிப்பொருளாகும் .... இதன் பண்புகளை ஆராய்ந்தபோது இது புற்று நோயை எதிர்ப்பது தெரிய வந்துள்ளது.. இது விஞ்ஞானிகளை மிகக் கவர்ந்துள்ளதற்குக் காரணம், இதுபோன்ற உணவாய்ப் பயன்படும் பொருட்களை நோயைக் குணப்படுத்தப் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் எதுவும் இருப்பதில்லை .. , மஞ்சளில் உள்ள கர்குமினை அதிக அளவில் , நெடுநாள் சேர்த்து வந்தாலும் பக்கவிளைவு என்று சொல்லும்படியாய் எதுவும் நிகழ்வதில்லை. ஆங்கில மருத்துவத்தின் வேதிப்பொருட்களை உட்கொள்ளும்போது ஏற்படும் பக்கவிளைவுகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை ...

எனவே இதுபோல் உணவுப் பொருட்களையே மருந்தாக பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டுவருகிறார்கள்.மேலும் இந்தியக் கணடத்தில் இன்றுவரை சில குறிப்பிட்ட வகைப் புற்றுநோய்கள் காணப்படாததற்கு மக்கள் உணவில் அடிக்கடி மஞ்சளைச் சேர்த்துவந்திருப்பதே காரணம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com