<$BlogRSDUrl$>

Saturday, March 13, 2004

குடித்துவிட்டு வண்டி ஓட்டலாமா... ?

ஜெர்மனியில் நான் இருக்கும் ஊருக்குப் பக்கத்து ஊரில் நடந்தது இது. நூற்றுக்கணக்கான பேர் வண்டியில் இருக்கும்போது குடித்துவிட்டு வண்டி ஓட்டலாமா..? இப்படி செய்வது மகாத் தப்பில்லையா.. ? குடிச்சிட்டு ஓட்டியிருக்கார் அப்படின்னு உறுதியானதால் ஓட்டுனவரை நம்ம ஊரு மதிப்புல 75,000 ரூபாய் அபராதம் கட்டச்சொல்லியிருக்காங்க. எந்த வண்டி டிரைவர் அப்படின்னு நினைக்கிறீங்களா... ? அது தரையில ஓடுற வண்டி இல்லைங்க.. வானத்துல போகும் வண்டி. போன புதன்கிழமை வடக்கு ஆப்பிரிக்க நாடு ஒன்றின் விமானத்தில் இது நடந்திருக்கிறது.

நடந்தது இதுதான். மொராக்கோவில் இருந்து டுசல்டார்ஃப் விமான நிலையத்தில் ஒரு விமானம் இறங்கியதும் , அதில் இருந்த பயணிகள் கிட்டத்தட்ட 150 பேர் போலீஸிடம் புகார் செய்திருக்கிறார்கள் ".....விமானி கொஞ்சமும் பொறுப்பில்லாமல் விமானத்தை ஓட்டினார்.. அத்தனை பேரும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டிருந்தோம்..." என்று ஒரே குரலில் சொல்லியிருக்கிறார்கள். நம்ம ஊருப்பக்கம் வாயை ஊதிக்காட்டச்சொல்லுவதுபோல இந்த ஜெர்மனி போலீஸ் சோதனை பண்ணிப்பார்த்திருக்காங்க போலத் தெரியுது.. விமானி குடித்திருக்கிறார் என்ற விஷயம் அப்பத்தான் தெரிஞ்சிருக்கு ...உடனே 1500 யூரோ அபராதம் கட்டச் சொல்லியிருக்காங்க. சில நாட்களாய் இங்க எங்க பார்த்தாலும் இதே பேச்சா இருக்குது. ஆனாலும் எந்த விமான நிறுவனம் என்று குறிப்பிட்டுத் தெளிவாய்ச் சொல்ல போலீஸார் மறுத்துவிட்டனர்.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com