<$BlogRSDUrl$>

Friday, March 05, 2004

தலைப்பில்லை ...

கடந்த இரு வாரமாக வலைப்பூ இதழில் ஆசிரியராய் இருப்பதால் இங்கு அவ்வளவாய் எழுதமுடியவில்லை .. அங்கும் நான் பெரிதாய் எதுவும் எழுதவில்லை என்பது வேறு விஷயம் . நான் திருக்குறள் பற்றி ஏதோ நினைத்ததைச் சொல்லப் போய் ஒருவர் என்னைத் "திருக்குறளில் முதல் எதிரி" என்றே சொல்லிவிட்டார் . நாளையுடன் எனது வலைப்பூ - ஆசிரியர் பணி இனிதே நிறைவடைகிறது. இங்கும் , அங்கும் நிறைய எழுதவேண்டும் என்று நினைத்தாலும் நேரம் ஒத்துழைக்காததால் அவ்வளவாய் முடியவில்லை .. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் நிறைய ஆங்கில வலைப்பூக்களுக்கு அவ்வப்போது விசிட் அடித்துப் பார்க்கிறேன். நண்பர்கள் சிலர் புதிதாய் ஆங்கிலத்தில் வலைப்பூ துவங்கபோவதாய் சொல்லியிருக்கிறார்கள்.. இன்னும் சில நண்பர்கள் தமிழில் இந்த வாரம் ஆரம்பித்திருக்கிறார்கள் ... விரைவில் அவர்கள் தமிழ் வலைப்பூக்கள் பட்டியலில் இணைந்துவிடுவார்கள் .. 2004 இறுதிக்குள் பல நூறு பூக்கள் தமிழில் பூத்துவிடும் என்பதே பலரின் கணிப்பு .. கணிப்பு மெய்யாகட்டும்.

( இப்பதிவினைப் பதித்தவுடன் track back பற்றி பாலாஜி இங்கே comments பகுதியில் சொல்லியிருந்தார் .. மேலும் என்னுடைய back blog இலவசமாய் பயன்படுத்துவதால் 5 கருத்துக்களுக்கு மேல் பதிவு செய்யமுடிவதில்லை .. எனவே ஒன்றுக்கு இரண்டாய் இருக்கட்டுமே என நினைத்து ஒரு ஹேலோஸ்கேன் கருத்துப் பெட்டியையும் , டிராக் பேக்கையும் சேர்த்துவிட்டிருக்கிறேன் .. நன்றி பாலாஜி .. )
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com