<$BlogRSDUrl$>

Monday, March 01, 2004

திரும்பிப் பார்க்கிறேன் ...

கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது .. ஆறு மாதத்துக்கு முன்னால் எனக்கு வலைப்பூ என்று ஒன்று இருந்ததே தெரியாது .. முதன்முதலில் வலைப்பூ பற்றித் தெரிந்துகொண்டது திசைகள் இதழைப் பார்த்தா அல்லது வலைப்பூச் சஞ்சிகையைப் பார்த்தா என்பது நினைவில்லை ... ஆனால் அறிமுகப்படுத்தியது நம் கூகிள் அம்மன்தான் .. ஒரு முறை யுனிகோடு தமிழில் தட்டச்சு செய்து கூகிளில் எதையோ தேடினேன் .. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது வலைப்பதிவு என்ற ஒன்று இருப்பதைப் பற்றியே .. இன்று பெரும்பாலோனோர் ஆங்கில வலைப்பூக்களைப் பார்த்துவிட்டுத் தமிழுக்கு வந்தவர்கள் .. எனக்கு தமிழ் வலைப்பூக்கள் மூலமாகத்தான் ஆங்கில வலைப்பூக்களே அறிமுகமானது ... ஆனால் வலைப்பூவுக்கு வருவதற்கு முன்னரே சில வலைப்பக்கங்களை உருவாக்கி வைத்திருந்தேன் .. முதலில் ஆங்கிலத்தில் வலைப்பக்கங்கள் உருவாக்கிய பின்னர் தமிழில் அதுபோல் அமைக்க எண்ணி கஷ்டப்பட்டு ஒரு வழியாய் செய்துகொண்டிருந்தபோதுதான் வலைப்பூ பற்றித் தெரிந்தது .. இங்கு வந்தபின்னர் வலைப்பக்கத்தில் புதிதாய் ஏதாவது செய்வது மிகக் குறைந்துவிட்டது ...

இன்னொரு விஷயம்... ஒரு வருடத்துக்கு முன்னர் நான் கேள்விப்பட்டிருந்த, எனக்குத் தெரிந்த ஒரே ஒரு செய்தி என்னவென்றால் யாகூ ஜியோசிடியில் இலவசமாக நமக்கு ஒரு இணையப் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளமுடியும் என்பதுதான்... ஆனால் எப்படிச் செய்வது என்று தெரியாது .. ஆனால் அப்போதும்கூட யாகூவில் இரு குழுக்களை உருவாக்கி நடத்திவந்தேன்... ஒரு வழியாய் எப்படியோ முட்டி மோதி ஒரு பக்கத்தை உருவாக்கி, கிடைத்த நேரத்தில் முக்கால்வாசி அதற்கே செலவழித்து மனம் திருப்தியடையும்வரை வலைப்பக்கத்தை அழகுபடுத்தினேன் ...இங்கே வலைப்பூவுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது. வலைப்பக்கம் உருவாகுவதுபோல் கடினமானதில்லை .. இது மிக எளிது என்று.

முதன் முதலில் மிக எளிதாய் பிளாக்ஸ்பாட் கொடுத்திருந்த ஒரு டெம்ப்ளேட் .. பின்னர் யாராவது புதிதாய் அவர்கள் வலைப்பூவில் செய்திருந்தால் நாமும் அதுபோலச் செய்தாலென்ன என்று கொஞ்சம் அதுபோல மாற்ற ஆரம்பித்தேன்.. முழுதாய்த் தானியங்கி எழுத்தில் என் வலைப்பூ இயங்க ஆரம்பித்தே ஒரு மாதத்துக்கு முன்னர்தான். எங்கோ ஆங்கில வலைப்பூவில் பார்த்த அரட்டை பெட்டி ஒன்றையும் நண்பர்கள் யார் வேண்டுமானாலும் அரட்டை அடிப்பதற்காய்ச் சேர்த்துவிட்டேன் .. . இப்போது கடைசியாய் வலைப்பூவைப் படிக்கும்போது இசையைக்(?) கேட்டுக்கொண்டே படிக்க ஒரு டேப்ரிக்கார்டரைச் சேர்த்துவிட்டிருக்கிறேன்... இந்தத் தற்போதைய டேப்ரிக்கார்டரைப் பாரதியார் பாடலைப் பாடும் டேப்ரிக்கார்டராய் மாற்றினால் என்னவென்று இப்போது யோசித்துவருகிறேன்..
எப்படியோ .. இப்போது நான் புரிந்துகொண்டது இரு விஷயங்கள் ..

1. நான் கொஞ்சமாவது HTML, Java... etc படித்திருந்தால் இன்னும் பயனுள்ளதாய் இருந்திருக்கும் ..

2. HTML , Java ... போன்ற சமாச்சாரங்கள் கொஞ்சமும் தெரியாத என்னைப் போன்றவர்கள்கூட இன்று தமிழிலேலே எளிதாய் வலைப்பக்கத்தை உருவாக்க முடியும் .. வலைப்பூ ஆரம்பிக்க நினைத்தால் அது மிக எளிது .. கிட்டத்தட்ட நண்பன் ஒருவனுக்கு மின்னஞ்சல் அனுப்புவதுபோலவே, வலைப்பதிவதும் மிக மிக எளிதானது .
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com