<$BlogRSDUrl$>

Sunday, February 01, 2004

தேடுங்கள் கிடைக்கும் .. ! (4) - கூகிள்

அவர்கள் இருவரும் அதுவரை இருந்த தேடுதல் உத்தியை விட்டுவிட்டு புதிதாய்ச் சிந்தித்தார்கள் ... ஒரு பக்கத்தின் முக்கியத்துவத்தை நேரடியாய்ப் பார்த்துத் தெரிந்துகொள்வதைவிட, அதன் பின்புலத்தை வைத்து கணக்கிடுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைத்தார்கள் .. அதுவே கூகிளின் வெற்றிக்கு முக்கியக் காரணமாய் அமைந்தது .. அவர்கள் ஸ்டேன்போர்டு பல்கழைக்கழகத்தில் படிக்கும்போது தொடங்கிய இத்திட்டத்துக்கு முதலில் backrub என்று பெயர் வைத்திருந்தார்கள் ..இதுவும் பொருத்தமான பெயர்தானே .. அவர்கள் "பேஜ் ரேங்க்" என்ற ஒரு தத்துவத்தைப் பின்பற்றினார்கள் .. இதன்படி ஒரு பக்கம் ஒரு நாளைக்கு எத்தனை தடவை மற்றவர்களால் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தவிரவும் , அத்தளத்துடன் எத்தனை பேர் இணைந்திருக்கிறார்கள், தேடும் சொற்களுடன் அப்பக்கத்திலுள்ள விஷயம் எந்த அளவுக்குப் பொருந்துகிறது என்று பல விஷயங்களை இணைத்து புதுத் தேடும் தொழில்நுட்பத்தை உருவாக்கினர்...சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் வெங்கட் அவருடைய வலைப்பூவில் கூகிள் ஒரு மனிதனைப் போலவே தேடுகிறது என்று அருமையாக ஒரு கட்டுரைத் தொடர் எழுதியிருந்தார் ..

இன்று கூகிள் இந்த அளவுக்கு வேகமாகத் தகவல்களைத் தேடிக் கண்ணிமைக்கும் நேரத்தில் தருகிறது என்பதற்குக் காரணம் அவர்கள் பயன்படுத்தும் நவீன தேடுதல் தொழில்நுட்பமும் , வலைப்பின்னலில் இணைக்கப்பட்டுப் பயன்படுத்தும் அவர்களின் ஆயிரக்கணக்கான கணினிகளும்தான் காரணம் .. இன்றும் தினமும் பல கணினிப் பொறியாளர்கள் கூகிள் நிறுவனத்தில் தங்களின் தொழில்நுட்பத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆராய்ந்து செயல்பட்டுவருகிறார்கள் ...

கூகிளில் தகவல்களைத் தேடுவதைபோலவே இன்னும் பலவற்றைத் தேடலாம் .. பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம் .. செய்திகளை உடனடியாகப் படிக்கலாம் .. தேவையான படங்களை மட்டும் தேடி எடுக்கலாம் .. கணக்குப்போடக் கால்குலேட்டாராக கூகிளைப் பயன்படுத்தலாம் ... அது இலவசமாய்த் தரும் கூகிள் பாரைப் பயன்படுத்தி அடிக்கடி நமக்குத் தொல்லைதரும் பாப்-அப் சன்னல்களை வரவிடாமல் தடுத்துவிடலாம் .. எத்தனையோ மொழிகளுக்கு மொழிபெயர்ப்பாளராய்ப் ப்யன்படுத்தலாம் ... இதுதவிர இன்னும் பல பயன்பாடுகள் உள்ளன...

சரி .. கூகிள் திறமையான , உயர்தர தேடுüபொறியாக இருந்தாலும் நாம் எப்படித் தேடுகிறோம் என்பதும் முக்கியம்தானே...? பலதடவை தேடும்போது தேடியதை விட்டுவிட்டு வேறு எதையோ பார்த்து போய்க்கொண்டிருப்போம் .. கடைசியில் வேட்டைக்குக் காட்டுக்குப்போய் பாதை தெரியாமல் காட்டின் நடுவில் சிக்கிக்கொண்ட கதையாகிவிடுமே ...

( வளரும் ... )
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com