<$BlogRSDUrl$>

Wednesday, January 28, 2004

தேடுங்கள் கிடைக்கும் .. ! (2)

"...இந்தப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பேரறிவுக்களஞ்சியம் உன்னிடத்திலேயே உள்ளது .. உன்னிடம் தேடிப்பார், அது உனக்குக் கிடைக்கும்.." என்று சொன்னார் விவேகானந்தர். இதைப் பற்றி இச்சிற்றறிவுக்குக்கு எட்டவில்லை. ஆனால் உலகின் அறிவுக் களஞ்சியம் இணையத்தில் குவிந்து வருகின்றது என்பது மட்டும் யாரும் மறுக்கமுடியாத உண்மை .. தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புதுபுதுப் பக்கங்கள் உருவாக்கப்படுகின்றன.. எத்தனையோ தகவல்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுவதுபோல இந்த இணையக் கடலில் நமக்குத் தேவையானதை எப்படித் தேடுவது..? நமக்குத் தேவையானதை மட்டும் எப்படிப் பெறுவது..? என்ற குழப்பம் இல்லாமல் இல்லை .. இன்று நமக்குத் தேடித்தர பல தேடு பொறிகள் வந்துவிட்டன .. தேடு இயந்திரம் எவ்வளவுதான் திறமைமிக்கதாய் இருந்தாலும் மனிதனுக்கு அதை எப்படித் திறம்படப் பயன்படுத்துவது என்று தெரிந்தால்தானே அது முழுமையாய்ப் பயன்படும் .. ?.. ஆக தேடு எந்திரங்களில் எப்படித் தேடுவது, தேடு எந்திரங்களை எப்படி முழுமையாய்ப் பயன்படுத்துவது என்று சுருக்கமாய்த் தெரிந்துகொள்வதே இத்தொடரின் நோக்கம் ..

" ஏய் ... எனக்குத் தெரியாததை என்ன புதிதாய்ச் சொல்லிவிடப் போகிறாய்.." என்று நீங்கள் சொல்வது எனக்கும் புரிகிறது .. இருந்தாலும் நான் விடப் போவதில்லை...
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com