<$BlogRSDUrl$>

Tuesday, January 06, 2004

பெரும் அறிவியலாளர் ஆட்டோவான் கிரிக்

இரு வாரங்களுக்கு முன்னர் ஜெர்மனியின் கிழக்குப் பகுதியிலுள்ள மெக்டபர்க் என்ற நகருக்குச் சென்றிருந்தேன் ... அங்குள்ள நண்பர்களுடன் ஊரைச் சுற்றினோம் ... கடைசியாக ஒரு சிலையைக் காட்டினர் நண்பர்கள் ...





அந்தச் சிலையின் கீழே பக்கவாட்டுப்பகுதியில் பல குதிரைகள் இரு அரைக்கோள வடிமுள்ள கிண்ணங்களை பிரிக்க இழுப்பதைப் போல் செதுக்கப்பட்டிருந்தது .. அதை எங்கோ பார்த்த ஞாபகமாய் இருக்க அச்சிலை யாருடையது என்று கேட்டேன் ... அவர் சொன்ன தகவல்கள் சுவாரசியமாக இருந்தது ... நாங்கள் பார்த்த சிலை ஆட்டோ வான் கிரிக் என்ற அறிவியலாளரின் சிலை ... அவர் 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் ... உண்மையில் அவர் ஒரு பொறியியலாளர்.. அதுவும் ராணுவத்துக்கு தேவையான கருவிகளைச் செய்வதற்காகப் பணி புரிந்தவர் ...







அவர் சொல்ல ஆரம்பித்தவுடன் எனக்கு முழுவதும் நினைவுக்கு வந்ததுவிட்டது .. பள்ளி அறிவியல் புத்தகத்தில் படித்திருக்கிறேன் ... அவரின் திறமையால்,உழைப்பால் பதினாறாம் நூற்றாண்டில் பல கருவிகளைக் கண்டறிந்தவர்..... பின்னர் அவரின் கடைசிக் காலத்தில் மெக்டொபர்க் நகரின் மேயராகவே ஆகிவிட்டார் ..


முதன் முதலில் வளி மண்டலத்தின் அழுத்தத்தின் திறன் எவ்வளவு அதிகமானது என்பதைப் பெருந்திரளாய்க் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் கண்கூடாகச் செய்துகாட்டினார் ....

அவர் செய்தது இதுதான்...இரு அரைக்கோள வடிவக் கிண்ணங்களை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பின்னர் அந்தக் கிண்ணங்களுக்கு இடையேயுள்ள காற்றை வெளியேற்றினார் ... இப்போது அந்தக் கிண்ணங்களுக்கு இடையில் இருப்பது வெற்றிடம் ... அந்த வெற்றிடத்தை நிரப்ப சுற்றியுள்ள காற்று அந்தக் கோளங்களை அனைத்துப் புறங்களிலிருந்தும் அழுத்தும் .... அந்த அழுத்தத்தின் காரணமாய் அதை பிரிப்பது அவ்வளவு எளிதான வேலையில்லை ... பல குதிரைகளை இரண்டு புறமும் கட்டி இழுக்க முயற்சித்தும் அக்கோளங்களைப் பிரிக்க முடியவில்லை ... அதன் பின்னர்தான் அனைவருக்கும் வளிமண்டலத்தில் அழுத்தம் எத்தனை சக்தி வாய்ந்தது என்று தெரிந்தது ...







நண்பர்களிடம் சொன்னேன் ... ஒரு காலத்தில் இதைப் பள்ளி அறிவியல் புத்தகத்தில் படித்தபோது அந்த இடத்தை நேரடியாகப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை . அதற்கு சிரித்துக்கொண்டே அந்த நண்பர் சொன்னார்.. நீங்களாவது அந்த இடத்தைத்தான் பார்க்கிறீர்கள்.. நான் விரையில் இந்தச் சிலைக்குக் கீழேயே பட்டம் வாங்கப் போகிறேன், இதை நான் என்று எதிர்பார்த்தேன் என்றார் .. கொஞ்சம் விசாரித்தபோதுதான் தெரிந்தது ...

இன்றும் அவரின் நினைவைப் போற்றும் விதமாய் பல செயல்கள் அங்கு நடைபெற்று வருகின்றன .. உதாரணமாக ... ஒவ்வொரு வருடமும் மெக்டொபர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வு முடித்து பி.ஹெச்.டி பட்டம் பெருபவர்கள் அனைவரும் அந்த மெக்டொபர்க் நகரின் வீதி வழியாக அலங்கார வண்டியில் கொண்டு வரப்பட்டு மேலே நாம் காணும் அவரின் சிலையில் முன்னால்தான் அவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது .
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com