<$BlogRSDUrl$>

Friday, March 11, 2005

அழிவின் விளிம்பில் சில பொக்கிஷங்கள்


இது வரை எத்தனையோ இலக்கியச் செல்வங்களை இழந்திருக்கிறோம். தமிழிசை நூல்கள், ஐம்பெருங்காப்பியங்களில் சில, இலக்கண நூல்கள் எனப் பட்டியல் மிகப்பெரிதாய் நீளும். உ.வே.சா போன்ற பெருமக்களின் முயற்சியால் சில கருத்துப்பெட்டகங்கள் காப்பாற்றப்பட்டன. எத்தனையோ செல்வங்கள் காலவெள்ளத்தில் இதுபோல் காப்பாற்றுவார் இல்லாமல் சுவடற்றுப் போயிருக்கின்றன. இலக்கியங்கள் மட்டுமல்ல, வரலாற்றுச் சின்னங்கள் பலவும் காணாமல் போயிருக்கின்றன, போய்க்கொண்டிருக்கிறது. சிதைந்துகொண்டிருக்கும் ஒரு வரலாற்றுச் செல்வம் பற்றிய கவலையும்,அக்கறையும் தொனிக்கும் ஒரு கட்டுரை வரலாறு டாட் காம் இம்மாத இதழில் கவனத்தைக் கவர்ந்தது. முடிந்தால் நாமும் இதற்கு ஏதாவது செய்யலாம்.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com