<$BlogRSDUrl$>

Thursday, February 24, 2005

சென்னை - மெட்ராஸ் - 3000 கி.மீ


ஊர்ப்பெயரை மாற்றுவதால் என்னென்ன கூத்துகள் நடக்கலாமென்பதற்கு ஒரு சாம்பிள். ஒரு பார்ட்டிக்குப் போனபோது ஜெர்மன் நண்பர் சோகத்துடன்/அசடு வழிய சொன்னது. அவர் ஒரு கன்சல்டண்ட். இரும்புத் தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான வல்லுனர். இந்தியாவில் அவருக்கு பல வாடிக்கையாளர்கள். அவரின் நிறுவனம் இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் உள்ளதாம். ஒருநாள் இவர் மெட்ராஸில் இருந்தபோது ஒரு சென்னை வாடிக்கையாளர் தொழிற்சாலைத் தயாரிப்புத் தொடர்பாகச் சந்திக்க விரும்பியிருக்கிறார்.

கண்ஸல்டண்ட், ".. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்..? "
"... சென்னையில் இருக்கிறேன்..", வாடிக்கையாளர் பதில்.
"....அப்படியா நான் இப்போது வேறு நகரத்தில் இருக்கிறேன், நாளை நாம் இருவரும் டெல்லி கிளை அலுவலகத்தில் சந்திக்கலாம்... ."

இருவரும் ஒரு நாள் காத்திருந்து விமானம் மூலம் டெல்லி சென்று அங்குள்ள கிளையில் சந்தித்தபோதுதான் உண்மை புரிந்திருக்கிறது. இருவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி எந்த விமானத்தில் வந்தோம் எனப் பரிமாறிக்கொண்டார்கள். ஆனாலும் அன்று ஒரு சின்ன சந்தோசம் - இருவரும் ஒரே விமானத்தில் வரவில்லை :~).
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com