<$BlogRSDUrl$>

Friday, May 14, 2004

யாகூவும் களத்தில் இறங்குகிறது ... !


மின்னஞ்சல் வசதியைப் பயன்படுத்திவரும் அனைவருக்கும் மற்றுமொரு நற்செய்தி.. யாகூ தற்போது வழங்கி வரும் இலவச மின்னஞ்சல் சேவையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. தற்போது அளித்து வரும் 6 MB மின்னஞ்சல் சேவையை 100 MB அளவுள்ளதாய் மாற்ற முடிவுசெய்துள்ளதாய்த் தெரிகிறது. ஒரு வருடத்துக்கு 50 டாலர் செலுத்தி இப்போது சேவையைப் பயன்படுத்திவரும் பயனாளர்கள் எத்தனை மெகாபைட் வேண்டுமானாலும் உபயோகிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஜிமெயில் 1 ஜிகாபைட் அளவுள்ள மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். நம் நண்பர்கள் பலரும் இப்போது ஜிமெயில்தான் பயன்படுத்துகிறார்கள்.என்றாலும் ஜிமெயில் இன்னும் அனைவரும் பயன்படுத்தும்படி பொதுவாக்கப்படவில்லை.அவ்வாறு வரும்போது அதற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதனால் ஏற்படும் போட்டியைச் சமாளிக்கவே யாகூ இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாய்த் தெரிகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. போகிற போக்கைப் பார்த்தால் இன்னும் சிலவருடத்தில் மெகாபைட்டில் எந்த மின்னஞ்சலும் இருக்காதோ .:)
| | |
Comments:
எங்கெ படிச்சீங்க இந்தெ சேதிய?
 

//எங்கெ படிச்சீங்க இந்தெ சேதிய?

# posted by Parimel : Saturday, May 15, 2004//

பரி .. என்ன இப்படிக் கேட்டுப்புட்டீங்க... ?
இதுதானே இப்ப ஹாட் நியூஸ் ..
உதாரணத்துக்கு ஒண்ணு ..
http://maccentral.macworld.com/news/2004/05/14/yahoo/
http://seattletimes.nwsource.com/html/businesstechnology/2001929752_yahoo15.html
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com