<$BlogRSDUrl$>

Wednesday, April 05, 2006

பாக்யராஜ் திமுகவில் சேர்ந்தார்

எம்ஜிஆர் காலத்தில் அவரின் தீவிர ஆதரவாளராய் இருந்தவர் பாக்கியராஜ். அதிமுகவில் அதிக ஈடுபாடுகொண்டவராக அப்போது இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பிறகு தனியாகக் கட்சி தொடங்கினார். தமிழகத்தில் எம்ஜிஆரைத் தவிர தனிக்கட்சி தொடங்கிய அத்தனை நடிகர்களுக்கும் ஏற்பட்ட முடிவே அவருக்கும் ஏற்பட்டது. பின்னர் பாக்யா என்ற பத்திரிக்கையை மட்டும் நடத்திக்கொண்டிருந்தார்.

இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அவர் தனது ஆதரவைத் தெரிவித்து திமுகவில் இணைந்திருக்கிறார். இன்னும் ஒரு மாதம் கழித்து எந்த நடிகராவது எந்தக் கட்சியிலாவது சேர்ந்தால் அது பெரிய விஷயமாகப்போகிறதா என்ன?. ஆனால் இப்போது எந்த நடிகர் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அது கவர்ச்சியான செய்திதான்.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com