<$BlogRSDUrl$>

Wednesday, May 10, 2006

முயற்சியின் விலை - 1 லட்ச ரூபாய்

சில நாட்களுக்கு முன்னால் ஜெர்மனியிலுள்ள முனிச் நகர நீதிமன்றம் ஒருவருக்கு அபராதம் 2,100 யூரோ விதித்தது. இதில் என்ன பெரிய விஷேசம் என்கிறீர்களா?. அபராதம் கட்டிய மனிதர் ரயிலைச் சேதப்படுத்தியதுடன், அந்த ரயில் ஓட்டுனரின் மனநிலை பாதிக்கும்விதத்தில் நடந்துகொண்டார் என்பதுதான் குற்றச்சாட்டு, ஆனால் பாவம், அந்த மனிதரின் நோக்கம் இரண்டுமே அல்ல, அவர் ஒன்றை செய்யப்போய் அது முடியாததால்தான் அபராதம் கட்டியிருக்கிறார். அவர் செய்ய முயன்றிருந்தது முடிந்திருந்தால் அவரிடம் உலகின் எந்தக் கோர்ட்டும் அபராதம் கேட்டிருக்கவே முடியாது. அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா?. தற்கொலைதான். ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவர் கணநேரம் தப்பியதால் டிரைவர் இருக்கும் அறையில் சன்னல் வழியாய்ப் பாய்ந்துவிட்டார், தலையில் மட்டும் சின்ன காயம், வேறெங்கும் காயமில்லை. இதைப் பார்த்ததால் சில வாரங்களுக்கு என்னால் வேலையே செய்ய முடியவில்லை என டிரைவர் சொல்ல, விஷயம் கோர்ட்டுக்குப்போய் தற்கொலைக்கு முயன்றவர் அபராதம் கட்ட வேண்டியதாகிவிட்டது.

அதுவாவது பரவாயில்லை. முதுகலைப் பொறியியல் படிக்கும் ஒரு இந்திய மாணவர் - ஆந்திராக்காரர், நான் இருக்கும் இடத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். சின்னப் பையன்தான், வயது கிட்டத்தட்ட 25 தான் இருக்கும். ரயில் வந்துகொண்டிருக்கும்போது ஓடிப்போய் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார், தலையும் உடலும் துண்டாகிவிட்டது. காதல் தோல்வி என்கிறார்கள். உலகத்தில் வேறு பொண்ணா கிடைக்காது?. ஹ்ம்.. என்னத்த சொல்ல?.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com