<$BlogRSDUrl$>

Wednesday, May 04, 2005

இந்தியா - இரட்டைக் குடியுரிமை - ஸ்மார்ட் கார்டு


தற்போது 16 நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கு அமலில் உள்ள இரட்டைக் குடியுரிமை, எல்லா நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கும் நீட்டிக்கப்படுகிறது. விரைவில் இவர்களுக்கு வசதியாக "ஸ்மார்ட் கார்டு' முறையையும் அமல்படுத்த திட்டமிட்டுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

உலகின் பல நாடுகளிலும் இந்தியர்கள், பன்னெடுங்காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் எல்லாரும் தாங்கள் இருக்கும் நாட்டில், குடியுரிமை பெற்று உள்ளனர். அவர்களுக்கு இந்தியா வந்து செல்வதென்றால் விசா பெறுவது போன்ற நடைமுறைகள் உள்ளன. இந்தியாவில் சொத்து வாங்குவது போன்ற விஷயங்களிலும் சிக்கல் இருந்து வந்தது.

தங்களுக்கு இரட்டை குடியுரிமை தந்து விட்டால், பல பிரச்னைகள் தீரும் என்று அவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர். கடந்த 2002ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் வாஜ்பாய், முதன்முதலாக இரட்டை குடியுரிமை முறையை கொண்டு வந்தார்மேலும் வாசிக்க....
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com