<$BlogRSDUrl$>

Sunday, May 08, 2005

அணுஆய்வில் புதுஉயரம் தொடப்பட்டிருக்கிறது


இந்தியா உள்நாட்டில் வடிவமைத்த மீக்கடத்தும் சைக்ளோட்ரான் கருவி வேலைகள் உயர்நிலையை அடைந்துள்ளன. இந்த வகை சைக்ளோட்ரான்கள் மிக உயர்நிலை அணுஆய்விற்கு இன்றியமையாதவை. இத்தகைய சைக்ளோட்ரான்கள் உலகில் மொத்தம் ஏழு மட்டுமே உள்ளன. அவற்றில் 3 அமெரிக்காவிலும், கனடா, இத்தாலி மற்றும் நெதர்லாந்தில் தலா ஒன்றும் உள்ளன.

இன்னும் இரு ஆண்டுகளில் இக்கருவி செயல்படத் துவங்கும். ஆசியாவில் முதன்முதலாய் இந்த வகை சைக்ளோட்ரானை வைத்திருக்கும் நாடாய் இந்தியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மேற்கத்திய நாடுகள் மட்டுமே இதனைக் கொண்டிருந்தன. K500 எனப் பெயரிடப்பட்டிருக்கும் இக்கருவியின் மீக்கடத்துச் சுருள்கள் உட்பட பெரும்பான்மையானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என்பது இதன் சிறப்பம்சம்.

சர்வதேச அணுஇயற்பியல் கழகம் இக்கருவியைத் தங்கள் கூட்டாய்விற்குப் பயன்படுத்திக்கொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளது. அணுக்கரு ஆய்வுகள் தவிர காந்த அதிர்வுப் படமாக்கி (MRI), சக்தி சேமிப்பான்கள் மற்றும் கிரையோஜெனிக் துறை ஆய்வுகள் பலவற்றுக்கும் இக்கருவி பயனுள்ளதாய் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்பானவை

Breaking news in Science Daily
Times of India
Washington Times
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com