<$BlogRSDUrl$>

Thursday, March 23, 2006

விஜயகாந்த் - அதிமுக கூட்டு

வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார்.

ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் அவர் என்ன பேசுகிறார் என்பதை விட அவர் பேசுவதை போட்டோ பிடிப்பதிலேயே பாதிப் பேர் தீவிர கவனம் செலுத்தினர். ஓச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்ட கேப்டன், தொடர்ந்து நெமிலி, அரக்கோணம், சோளிங்கர், கலவை, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.

நிதிப் பிரச்சனையில் கேப்டன்:

இதற்கிடையே விஜய்காந்தின் கட்சி கடும் நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரையில் மாநாட்டை சில கோடிகள் செலவில் நடத்திய இதுவரை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செலவுகளுக்காகவும் சில கோடிகளை இழந்துவிட்டார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்தவர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் தேர்தல் செலவுக்கு பணம் திரட்டிக் கொள்ளுமாறு அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.

கட்சி ஆரம்பித்தது முதல் சில சொத்துக்களையும் விற்றுள்ளார் விஜய்காந்த். மேலும் சில சொத்துக்களையும் விலை பேசி வருவதாக செய்திகள் வருகின்றன.
சினிமா மூலம் இனியும் எந்த அளவுக்கு வருமானம் பார்க்க முடியும் என்பது சந்தேகமாக உள்ள நிலையில், சொத்துபணத்தை விற்க வேண்டுமா என்ற கேள்வி விஜய்காந்த் குடும்பத்தாரின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.

இதனால் அதிமுக அழைக்கிறதே.. அங்கு போய்விடலாம் என்று விஜய்காந்துக்கு அவர்கள் அட்வைஸ் தந்து வருகின்றனர். இதற்கிடையே விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவை சசிகலா நேரிலேயே சந்தித்துப் பேசியதாகவும், அப்போது 15 முதல் 18 தொகுதிகள் வரை தர அதிமுக தயார் என்று கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், வைகோவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என கேப்டன் தரப்பு கூறியுள்ளது. ஆனால், 20 தொகுதிகள் வரை தந்தாலே அதிமுக கூட்டணிக்குப் போய்விடுவார் விஜய்காந்த் என்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய்காந்த் தரப்பு மறுத்தாலும் திரைமறைவில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன.
| | |
Comments: Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com