<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5693164</id><updated>2012-01-25T13:06:40.623+01:00</updated><title type='text'>முத்து வலைப்பூக்கள் - Muthu  Tamil Weblogs</title><subtitle type='html'>கட்டுரைகள், எண்ணங்கள், அலசல்கள் (Muthu's Unicode Tamil Blog)</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>229</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114839872980497903</id><published>2006-05-23T17:29:00.000+02:00</published><updated>2006-11-16T20:35:17.893+01:00</updated><title type='text'>ஹைடெக் எலக்ட்ரானிக் வழிபாடு</title><content type='html'>உலகமே எலக்ட்ரானிக் யுகத்தில் இருக்கிறது. சாமி கும்பிடுவதை மட்டும் ஏன் இன்னும் பாரம்பரிய முறையிலேயே நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைதான் இந்த பிளாஷ் உதவியுடன் &lt;a href="http://muthukmuthu.googlepages.com/Ganesh.exe"&gt;பிள்ளையார் வழிபாடு&lt;/a&gt;. இதை உருவாக்கிய புண்ணியவான் யாரோ தெரியவில்லை, ஆனால் ஒரு வடநாட்டவராகத்தான் இருக்க வேண்டும். புராக்ராம் பிழைச்செய்தி காட்டாமல் நன்றாக ஓடப்பிரார்த்தனை செய்வது முதல் பலவற்றுக்கு இதை உபயோகித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர் ஸ்டைலில் தேங்காய் உடைத்து விநாயகர் கும்பிடக்கூட பிளாஷ் கிடைப்பதாய்க் கேள்விப்பட்டேன், ஆனால் எனக்கு அது இதுவரை சிக்கவில்லை. அதை வைத்திருக்கும் மக்கள் யாராவது எனக்கு ஒரு பார்சல் அனுப்பினால் நன்றாய் இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114839872980497903?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114839872980497903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114839872980497903' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114839872980497903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114839872980497903'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_114839872980497903.html' title='ஹைடெக் எலக்ட்ரானிக் வழிபாடு'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114838383482945089</id><published>2006-05-23T13:26:00.000+02:00</published><updated>2007-02-19T02:40:22.886+01:00</updated><title type='text'>நான் ஒரு அரக்கன், தேவனும்கூட</title><content type='html'>வாழ்க்கையில் பலருக்கும் பல முக்கியம். சிலருக்கு சில முக்கியம். இன்னும் சிலருக்கு சில மட்டுமே வாழ்க்கை. இந்த சில, பல விஷயங்கள் வாழ்வில் சாதனைகளைத் தொடங்கிவைக்கின்றன. தவிரவும், எண்ணற்ற தொல்லைகளையும், துயரங்களையும்கூட அளிக்கவே செய்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;இவைகளில் மிகவும் முக்கியமானது 'நான்' என்ற எண்ணம். இது பெரும்பாலும் ஒரு மனிதனின் பலம், சில வேளைகளில் பலவீனமும் கூட. ஒரு வண்டி ஓடத்தேவையான எரிபொருளாக பெரும்பான்மையான நேரங்களில் 'நான்' இருந்தாலும் வாழ்க்கையென்ற வண்டியில் பிரச்சனை வருவதும் இதனால்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஈகோ பார்க்காமல் வாழ்க்கையில்லை. ஆனால், எல்லாரிடமும் ஈகோ பார்த்தால் வாழ்க்கையே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வைச் சந்தோஷமாக அனுபவிப்பவர்கள், சிலரிடம் 'நான்' என்ற அகங்காரத்தைக் காட்டுவதில்லை. குறைந்த பட்சம் மூவரிடம் அதைக் காட்டாதோருக்கு வாழ்வில் ரசிக்க, அள்ள அள்ளக் குறையாது எத்தனையோ காத்திருக்கிறது. அந்த மூவர் பெற்றோர், துணை, குழந்தைகள். &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பெற்றோரிடமும், உங்கள் துணையிடமும், உங்கள் குழந்தைகளிடமும்கூட உங்கள் அகங்காரத்துக்குத் தீனி தேட ஆரம்பித்தால் வாழ்க்கையில் பெரிதாகச் சறுக்குகிறீர்கள் என்றே பொருள். இதை அறிந்தோ, அறியாமலோ பல பெண்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள், சில ஆண்களும் உணர்ந்தே இருக்கிறார்கள். குடும்பவாழ்வு சின்னாபின்னமாய்ச் சிதைந்துபோன பலர் இதை அறியாதவர்களாகவும், புரியாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் மகிழ்ச்சியின் பேரழிவுக்கும் இதுவே ஆணிவேறாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மூவரிடமும் நெருங்கும்போது உங்கள் தன்மானத்தைக் கொஞ்சம் கழற்றித் தூரவைத்துவிடுங்கள். பெரும்பாலான குடும்பங்களில் இந்த அதீதத் தன்மானமே புயலை வீசச்செய்கிறது. அது புயலாக இருந்தால்கூடப் பரவாயில்லை, கொஞ்சம் சேதத்தோடு அமைதியாகிவிடும். பல நேரங்களில் அழியாத நெருப்பையே பற்ற வைக்கிறது. அது நீங்கள் வாழும்வரை, உடலில் கடைசிச் செல் சாம்பலாகும்வரை அணைவதேயில்லை. தன்னைப் பாதி கருக்கிய நிலையில்கூட பலரால் அதன் தன்மையை உணரமுடியாது போய்விடுகிறது என்பது எவ்வளவு பெரிய சோகம்?. அது உங்கள் வாழ்வை மட்டுமல்ல, உங்களைச் சார்ந்தோரின் வாழ்வையும் சேர்த்தே கருகச் செய்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் துணையிடம் பெண்ணியச் சிந்தனைகளையும், பிடித்தமான ஆணாதிக்கக் கருத்தியல்வாதங்களையும் அருகில்கூடக் கொண்டு செல்லாதீர்கள். அங்கே அது ஒரு எளிதில் பற்றும் தன்மைகொண்ட கொடிய தொற்றுநோய். &lt;br /&gt;&lt;br /&gt;தன்னிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடிக்கும் மகனிடமும் ஆணாதிக்கத்தைத் தேடும் பெண்கள் இல்லையென்று நினையாதீர்கள். தனது மகனிடமும், மகளிடமும், துணையிடமும் தன்மானம் பார்க்கும் ஆண்களும் உண்டு என்று தெரியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இவர்கள் வாழ்வின் இன்பங்கள் பலவற்றைத் தொலைத்துவிட்டவர்கள், இவர்களைத் திருத்துவது எளிதா இல்லையா என்பது பற்றித் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மறந்தும் அவர்களில் ஒருவராய் நீங்கள் இருந்துவிடாதீர்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114838383482945089?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114838383482945089/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114838383482945089' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114838383482945089'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114838383482945089'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_23.html' title='நான் ஒரு அரக்கன், தேவனும்கூட'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114773576409396733</id><published>2006-05-16T01:30:00.000+02:00</published><updated>2006-11-06T15:42:12.070+01:00</updated><title type='text'>வெடிகுண்டு - மகளிர் விடுதியில்</title><content type='html'>பக்கத்து விடுதியான மகளிர்விடுதியில், ஆடவர் சிலர் அணுகுண்டு வைத்தனர். அதிர்ச்சியாக இருக்கிறதா?. முழுவதும் தெரிந்தால் அதிர்ச்சியடையமாட்டீர்கள், ஒருவேளை நீங்கள் அவனை பாராட்டக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாலை நேரம். விடுதியில் தேநீர் குடித்துவிட்டு, உலகப் பிரச்சனைகளைத் தீர்ப்பது எப்படி என்று வழக்கம்போல மாணவர்கள் வம்பளந்துகொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பையன் மட்டும் எதையோ கையில் மறைத்துக்கொண்டு அவன் அறைக்கு கொண்டுசென்று கொண்டிருந்தான். அதை அவ்வளவாய் யாரும் கண்டுகொள்ளவில்லை. அன்று இரவு உணவை முடித்துவிட்டு, டிவி பார்த்துவிட்டு அந்தத் தொலைக்காட்சி அறையிலேயே  விவாதங்கள், கேலிகிண்டல்கள் என்று தொடர்ந்தது. நேரம் ஆனதும் எல்லாரும் இடத்தைக் காலி செய்துவிட்டு அவரரவர் அறைக்குப் போய்விட்டார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு. சரியாகப் பன்னிரண்டு மணிக்கு வெளியே சத்தம் கேட்டது. ஏதோ வெடித்தது போல இருந்தது. சத்தம் அருகிலுள்ள மகளிர்விடுதிப் பக்கத்தில் இருந்து வந்தது. அதைப் பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் தூங்கிவிட்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் உளவுத்துறை அறிக்கையைப் பார்த்தபின்தான் தெரிந்தது. சரியாக, இரவு 12 மணிக்கு மகளிர் விடுதியின் முன்னால் பட்டாசுகள் வெடித்திருக்கின்றன. சுவாரசியம் என்னவென்றால், அன்று மகளிர் விடுதியில் உள்ள ஒருவருக்குப் பிறந்தநாள். பொதுவாக, இரவு 12 மணிக்கு மகளிர் விடுதியை விட்டு யாரும் வெளியே வருவதில்லை. அப்படியானால், பட்டாசு வெடித்தது யார் என யாருக்கும் தெரியவில்லை. மெதுவாக, ஆடவர் விடுதியில் விசாரித்ததில் கொஞ்சம் விஷயம் கிடைத்தது. சரிதான். ஏன்கூடாது?. தலைவர்கள், நடிகர்கள் பிறந்த நாளை மட்டும் கொண்டாடும்போது, வேண்டியவர் பிறந்த நாளை அவன் கொண்டாடியதில் என்ன தவறு இருக்கிறது. புரியவில்லையா?. அன்று பிறந்த நாள் கொண்டாடியவருக்குப் பிடித்தமான தோழன் ஒருவர், சகாக்கள் சிலருடன் போய் மகளிர் விடுதிக்கு முன்பு சரியாக 12 மணிக்கு அணுகுண்டு பட்டாசு வெடித்து தன் அன்பைக் காட்டியிருக்கிறார்.  &lt;br /&gt;&lt;br /&gt;நீங்க யாராவது இதுபோல் ஏதும் செய்ததுண்டா?. :-)&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114773576409396733?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114773576409396733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114773576409396733' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114773576409396733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114773576409396733'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_16.html' title='வெடிகுண்டு - மகளிர் விடுதியில்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114766358832697350</id><published>2006-05-15T05:18:00.000+02:00</published><updated>2006-05-15T13:01:48.086+02:00</updated><title type='text'>மகளிர், ஆடவர் விடுதிகள்</title><content type='html'>எங்களின் பல்கலைக்கழக மகளிர், ஆடவர் விடுதிக்கும், அங்கிருப்போருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் பல வேறுபாடுகளும் இருந்தன என்பது கண்கூடு. இங்க நம்ம விடுதியில் 'தம்' ரொம்ப சாதாரண விஷயம், அப்பப்ப பீர் அடிக்கும் பசங்களும் கணிசமான அளவிலேயே இருந்தார்கள். இப்படியான பசங்களைப் பார்த்து பொண்ணுங்க யாரும் பெரிதாய்ப் பயப்படமாட்டாங்க, இது கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;ஆண்கள் விடுதியில் இருந்த சுதந்திரம் அங்கே பெண்களுக்கு இல்லை என்பது (பசங்களுக்குக்) கொஞ்சம் வருத்தமான விசயம்தான், அதேஅளவுக்கு அங்கிருந்த மகளிரும் வருத்தப்பட்டிருக்கக்கூடும் என்றே நினைக்கிறேன். இங்கே ஆண்கள் விடுதியில் பெரிதாய் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, எப்பவும் வரலாம் போகலாம், யாரும் வரலாம் போகலாம். ஆனால், பெண்கள் 8 மணிக்குள் அவர்கள் விடுதிக்கு வந்தாக வேண்டும், தாமதமானால் காரணம் சொல்ல வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் விடுதிக்குள்,  அறைகளுக்கும்கூடத் தோழியர் வரலாம்(எல்லாம் சமத்துவம், சுதந்திரம் மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம், வேறென்ன?) . ஆனால், பெண்கள் விடுதிக்குள் செல்ல மட்டும் எங்களுக்கு அனுமதி இல்லை(இந்த உலகத்தில் என்ன ஒரு பாரபட்சம் பாருங்கள்). இருந்தாலும் இதையல்லாம் பொறுத்துக்கொண்டுத்தான் எம்மக்கள் அடிக்கடி அங்கு சென்று வெளியில் இருந்தபடியே வெளியே வரச்சொல்லி நோட்ஸ், புத்தகங்கள் இன்ன பிறவற்றை வாங்கிக்கொண்டு வருவார்கள். அவ்வாறு வாங்கித் திரும்பும் முன்னர், சைக்கிள்கள் வரிசை வரிசையாய் நிற்கும் அந்த விடுதியின் வாசலுக்கு அருகில் நின்றுகொண்டு உலகின் மிகமுக்கியமான பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து பலசமயம் மணிக்கணக்கில் இருபாலரும் விவாதிப்பது என்பது வழமையான விஷயம். &lt;br /&gt;&lt;br /&gt;உரையாடல் நடந்துகொண்டிக்கும்போது அந்த வழியாய் எம்மக்கள் யாராவது கடந்து சென்றால் பல சுவாரசியச் சம்பவங்களைக் காணமுடியும். அன்று நான் பார்த்த ஒன்றைச் சொல்கிறேன். எனது நண்பர்களும், சில தோழியரும் அங்கே நின்றுகொண்டிருந்தபோது, அந்தச் சாலையின் வழியாய் சைக்கிளில் ஒரு பையன் வந்தார். அந்தப் பக்கம் யாரோ வருவதைக் கவனித்த தோழியர் அவர்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர். அவர்கள் சிரிக்கும் காரணம் கேட்டேன். '.. கொஞ்சம் பொறு, உனக்கே புரியும்..' என்று கோரஸாகப் பதில் வந்தது. சைக்கிளில் போனவர் சரியாய் எங்களைக் கடக்கும்போது ஹேண்ட் பாரில் இருந்து இருகைகளையும் எடுத்து ரஜினி ஸ்டைலில் தலையைக் கோதிவிட்டுக்கொண்டே ஓரக்கண்னால் பார்த்தபடி ஸ்டைலாய்க் கடந்துசென்றார். அதே சமயம் மெல்லிய குரலில் அம்மணிகளிடமிருந்து பல கமெண்டுகள் பறந்தன.&lt;br /&gt;&lt;br /&gt; '.. டேய்.. டேய்.. போடா.. உன்னை மாதிரி பந்தா காட்டுறவன் எத்தனை பேரை நாங்க தினம் தினம் பார்க்கிறோம்..' என்பது நான் கேட்ட, இப்போது வரை நன்றாய் எனக்கு நினைவிருக்கும் கமெண்டுகளில் ஒன்று. சைக்கிளில் போன அப்பாவிப் பையனுக்கு&lt;br /&gt;இதில் எதுவும் கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. அன்று எனக்குப் பலவிஷயங்கள் புரிந்தன. அன்றிலிருந்து கூட்டமாய் நிற்கும் அம்மணியரை கடந்துசெல்லும்போது என் நண்பர்கள் சிலர் ஓரக்கண்ணால் திரும்பிப் பார்க்கக்கூடத் தயங்க ஆரம்பித்தார்கள். அதற்கு முன்னால்கூட நான் அப்படித்தானுங்க, அதனால் என்னிடத்தில் பெரிதாய் எந்த மாற்றமும் இல்லை :-)&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114766358832697350?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114766358832697350/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114766358832697350' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114766358832697350'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114766358832697350'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_15.html' title='மகளிர், ஆடவர் விடுதிகள்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114750648140488330</id><published>2006-05-13T09:40:00.000+02:00</published><updated>2006-05-16T00:59:09.253+02:00</updated><title type='text'>லேடீஸ் ஹாஸ்டல் Vs ஆடவர் விடுதி</title><content type='html'>மகளிர் விடுதிச் சம்பங்கள் பெரும்பாலும் ஆடவர் விடுதியில் தலைப்புச் செய்தியாக இருக்கும். அதேபோல் ஆடவர் விடுதிச் சம்பங்கள் மகளிர் விடுதியிலும் முக்கியத் தலைப்புச் செய்தியே. அப்போது எனக்குக் கிடைத்துகொண்டிருந்த தகவல்களின்படி மகளிர் விடுதியிலுள்ளோர் ஆடவர் விடுதி மக்களிடமிருந்து அவ்வளவு பெரிதாய் வேறுபட்டவர்களே அல்லர். ஆனால், சில விஷயங்களில் சதவீதத்தில் பெரிய வேறுபாடு இருந்தது உண்மை. மகளிர் விடுதியில் நடக்கும் பெரிய சம்பவங்களை அறிந்துகொள்ளவெனத் தனியாக மினிஉளவுத்துறையே எனக்கு அவ்விடுதியில் அப்போது இருந்தது. என்ன நடந்தாலும் ஏஜண்டுகள் மூலம் உடனடியாய் வந்து சேர்ந்துவிடும் :-).  &lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழகத்தில் ஆண்கள் விடுதியும், பெண்கள் விடுதியும் கூப்பிடு தூரத்தில்தான் அருகருகே இருந்தன. அவ்வப்போது நோட்ஸ், புத்தகம் போன்றவைகளைப் பரிமாறிக்கொள்ள அங்கே செல்லவேண்டியிருந்ததால், விடுதிகள் அருகிலேயே இருந்தது வசதியாக இருக்கிறது என மக்கள் அடிக்கடி அபிப்பிராயப்படுவார்கள், நிஜமா அதுக்காகத்தாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து 3 வருடங்களைத் தவிர்த்து நான் படித்தது அத்தனையும் கோ-எஜுகேசன் தான். இதனாலேயே சின்ன வயதிலிருந்தே நான் பெரிதாய்ப் பாலின வேறுபாடு பார்த்ததே இல்லை. எனக்குச் சகவயதுடைய பையனும், பெண்ணும் 'கிட்டத்தட்ட' எனக்கு ஒன்றேதான். பசங்களிடம் பேசும் அத்தனையையும், பெரிதாய் எந்த வித்தியாசமும் இல்லாமல் அப்படியே தோழிகளிடமும் பேசுவது வழக்கம். தோழிகளும் கிட்டத்தட்ட அப்படியே. ஆனால், மற்ற பசங்களிடம் இதேபோல் பேசுவது இல்லை என்ற உண்மையே எனக்குக் கொஞ்சம் லேட்டாய்த்தான் தெரியவந்தது, இந்த உண்மை எனக்குத் தெரியவரும்போது சகதோழர்கள் பலர் எனக்குச் சகவிரோதிகளாய் மாறியிருந்தார்கள் :-). &lt;br /&gt;&lt;br /&gt;இருவிடுதிகளிலும் நடப்பவற்றைப் பலவிஷயங்களில் ஒப்பிட முடியும். கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு சகட்டு மேனிக்குத் திட்டிக்கொண்டு திரியும் பசங்கள் போலவே, அங்கே நைட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு ரவுடித்தனம் செய்யும் அம்மணிகள் அங்கும் உண்டு.  தம், பீர் என வெளுத்து வாங்கும் அரிதான அம்மணிகள்கூட உண்டென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்(ஏன் கூடாது?, சமத்துவம் வெறும் பேச்சில் மட்டும் இருந்தால் போதுமா?). அந்த மாதிரி ஆண்களுக்கிணையான அம்மணிகளுக்கு லேடீஸ் ஹாஸ்டலில் 'தாதா' அளவுக்கு மவுசு உண்டாம், நிறைய பொண்ணுங்க 'தாதா'க்களுடன் பேசவே பயப்படுவாங்களாம். நம் ஏஜண்டுகள் இந்த மாதிரித் தகவலைச் சொல்லும்போது கவனமாகக் காதில் வாங்கிக்கொள்வது வழக்கம், யாரெல்லாம் அப்படின்னு தெரிஞ்சா கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கலாமேன்னுதான், இது தெரியாமல் வீணாச் சிக்கலில் மாட்டிக்கக்கூடாது பாருங்க. &lt;br /&gt;(அடுத்த பகுதி விரைவில்)&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114750648140488330?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114750648140488330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114750648140488330' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114750648140488330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114750648140488330'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/vs.html' title='லேடீஸ் ஹாஸ்டல் Vs ஆடவர் விடுதி'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114734507439112310</id><published>2006-05-11T12:55:00.000+02:00</published><updated>2006-05-13T10:20:54.466+02:00</updated><title type='text'>சட்டமன்ற இறுதி முடிவுகள்</title><content type='html'>நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்-2006 ல் கட்சிகள் பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை பின்வருமாறு. முடிவு அறிவிக்கப்பட்டவை-234/234.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக கூட்டணி - 163&lt;br /&gt;*************&lt;br /&gt;திமுக - 95&lt;br /&gt;காங் - 35&lt;br /&gt;பாமக - 18&lt;br /&gt;கம்யூ(மா)- 9&lt;br /&gt;கம்யூ - 6&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுக கூட்டணி - 69&lt;br /&gt;*************&lt;br /&gt;அதிமுக - 61&lt;br /&gt;மதிமுக - 6&lt;br /&gt;வி.சி    - 2&lt;br /&gt;*************&lt;br /&gt;&lt;br /&gt;தேமுதிக - 1&lt;br /&gt;இதர - 1&lt;br /&gt;&lt;br /&gt;எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் திமுக கூட்டணி ஆட்சியமைக்க இருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114734507439112310?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114734507439112310/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114734507439112310' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114734507439112310'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114734507439112310'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_114734507439112310.html' title='சட்டமன்ற இறுதி முடிவுகள்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114732713348574943</id><published>2006-05-11T07:55:00.000+02:00</published><updated>2006-05-11T21:24:17.416+02:00</updated><title type='text'>கூட்டணி ஆட்சி தமிழகத்தில் வருது ??</title><content type='html'>தமிழக அரசியலைப் பொறுத்தவரை வெற்றி பெறப்போகும் கட்சிக்குத் தேவை இரு மிக முக்கியமான அம்சங்கள். அவை இரண்டும் இரு கண்கள் என்றே கூறலாம். இதில் முதலிடம் வகிப்பது, தோல்வி அடையப்போகும் கட்சிக்கெதிரான எதிர்ப்பலை. இங்கே ஒரு மேல்நாட்டு அறிஞரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. இதைச் சொன்னவரின் பெயர் நினைவில் இல்லை, ஆனால் அவர் சொன்னது இதுதான். "..ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற அக்கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக்காட்டிலும் எதிர்க்கட்சியின்மீது மக்கள் கொண்டிருக்கும் கோபமே முக்கியக் காரணமாய் இருக்கும்... ". இது பிற நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ எந்த அளவுக்குப் பொருந்தும் என்பது தெரியவில்லை என்றாலும் இது தமிழகத்துக்கு மிகப் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் உளவியலே வழக்கம்போல இங்கே தீர்மானிக்கிறது. எப்போதுமே ஒருவனின் அறிவினைத் தட்டிவிடுவதைக்காட்டிலும், அறிவுக்கண்ணைத் திறந்து அவனைச் செயல்பட வைப்பதைக் காட்டிலும், அவனின் உணர்ச்சிகளைத் தட்டிவிட்டு தமக்குச் சாதகமாய்ச் செயல்படவைப்பது மிக எளிது. இதில் பல அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்.  இதனாலேயே எதிரணியின் மீதான கோபம், எதிர்ப்பலை வெற்றிபெறப்போகும் கட்சிக்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாய்,  தமிழக அரசியலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது வலிமையான கூட்டணிகள். இதற்காய், கடந்த காலங்களில் நடந்த பல நிகழ்வுகளை, வெற்றி தோல்விகளை எடுத்துக்காட்டுகளாய்ச் சுட்ட முடியும். ஆனால், இந்தக் கூட்டணிகள் எதிரணியின் மீது தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையிலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. தீவிர எதிர்ப்பலையுள்ள கட்சியின் கூட்டணி வலிமையாய் இருந்தாலும் அது தோல்வியடையப் போவது உறுதி. ஏற்கனவே சொன்னபடி, தேர்தலைப் பொருத்தவரை மக்களின் அறிவைவிட, சிந்தனையைவிட அவர்களின் உணர்ச்சிகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஏதாவது ஒரு கட்சியே தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி புரிந்துவருவது நடந்துவருகிறது. அது இந்தத் தேர்தலிலும் தொடருமா என்பது கேள்விக்குறியே. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரம் இத்தேர்தலில் திமுக கட்சியால் அமைக்கப்பட்டுவிட்டது போன்றே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாகக் கருதுவது கீழ்க்காணும் சில அம்சங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;1. கடந்த அதிமுக அரசின் மீது இருந்ததைப்போல், தமிழக மக்களுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பலை இருப்பதாய்த் தோன்றவில்லை. ஜெயலலிதாவின் பல அதிதீவிர நடவடிக்கைகளைத் தலைமை கொண்டிருக்க வேண்டிய, இதுவரை இருந்த எந்த ஆட்சியாளர்களுக்கும் இல்லாத துணிச்சலான குணாதிசயமாக தமிழக மக்கள் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்பது கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;2. எந்தக் கட்சியின்மீதும் தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையில் முக்கியத்துவம் பெறப்போவது வலிமையான கூட்டணிகள். திமுக நல்ல கூட்டணி அமைத்திருந்தாலும், அதிமுகவின் கூட்டணி ஒன்றும் மோசமில்லை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சரியான போட்டி இத்தேர்தலில் இருக்கப்போவது உறுதி.  ஒருவேளை கடும்போட்டியில் அதிமுகவைவிட திமுக சில தொகுதிகள் அதிகம் வென்றாலும் தனியாக ஆட்சியைமைக்குமளவுக்கு அதிக இடங்களைப் பிடிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. திமுக ஒதுக்கியிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் பல தசாம்சங்களாய் அரசியல் விளையாட்டில் கைதேர்ந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியாமலிருக்க நியாயமில்லை. தமது கட்சி தற்போது கொண்டிருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் வைகோவின் நிலை கூட்டணி ஆட்சி என்று வரும்போது மிகவும் முக்கியத்துவம் பெறும். தனியாக ஆட்சியமைக்க முடியாமல் ஒருவேளை இக்கட்டான நிலை ஏற்பட்டால், வைகோவின் உதவிகூட திமுகவுக்குத் தேவைப்படலாம். இதைக் கருணாநிதி நன்றாக உணர்ந்துள்ளதாலேயே, எதிரணிக்குச் சென்றுவிட்ட வைகோவைக் கடுமையாக விமர்சித்து இதுவரை ஒருவார்த்தைகூடச் சொல்லாமல் தவிர்த்துவருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, இதுவரை இல்லாத ஒரு சுவாரசிய திருப்பம் தமிழக அரசியலில் மே 11 க்குப் பிறகு ஏற்படப்போவது உறுதி. வைகோ, ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான விடை அன்றே தோராயமாய்க் கிடைத்துவிடும்.&lt;br /&gt;(இப்பதிவு சரியாக &lt;a href="http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post.html"&gt;இரு மாதங்களுக்கு முன்னால்&lt;/a&gt; எழுதப்பட்டது)&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114732713348574943?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114732713348574943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114732713348574943' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114732713348574943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114732713348574943'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_114732713348574943.html' title='கூட்டணி ஆட்சி தமிழகத்தில் வருது ??'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114731860719689210</id><published>2006-05-11T05:18:00.000+02:00</published><updated>2006-05-11T10:55:47.536+02:00</updated><title type='text'>கருணாநிதி, ஜெயலலிதா,விஜய்காந்த் முன்னிலை</title><content type='html'>திமுக கூட்டணி - 160&lt;br /&gt;அதிமுக கூட்டணி - 72&lt;br /&gt;ஏனையோர் - 2&lt;br /&gt;&lt;br /&gt;கருணாநிதி, ஜெயலலிதா, ஸ்டாலின், விஜய்காந்த், துரைமுருகன், வளர்மதி உட்பட பலர் முன்னிலையில் இருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதா, ஸ்டாலின், பன்னீர்செல்வம், விஜய்காந்த் உட்பட பலர் வெற்றி பெற்றுவிட்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114731860719689210?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114731860719689210/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114731860719689210' title='51 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114731860719689210'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114731860719689210'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_114731860719689210.html' title='கருணாநிதி, ஜெயலலிதா,விஜய்காந்த் முன்னிலை'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>51</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114731698242214919</id><published>2006-05-11T05:08:00.000+02:00</published><updated>2006-05-11T05:09:42.693+02:00</updated><title type='text'>முன்னிலை நிலவரம்</title><content type='html'>தற்போது திமுக 64 தொகுதிகளிலும், அதிமுக 13 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாய் எமது இந்திய நிருபர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார். கடைசியாகக் கிடைத்த தகவலின்படி ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவும், சேப்பாக்கத்தில் கருணாநிதியும் வாக்குகளில் முன்னிலையில் இருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114731698242214919?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114731698242214919/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114731698242214919' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114731698242214919'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114731698242214919'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_114731698242214919.html' title='முன்னிலை நிலவரம்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114731417774155453</id><published>2006-05-11T04:30:00.000+02:00</published><updated>2006-05-11T05:25:54.630+02:00</updated><title type='text'>வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது</title><content type='html'>நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது. இன்னும் மூன்றே மணி நேரத்தில் அனைத்து முடிவுகளும் தெரிந்துவிடும். வெற்றி பெறப்போவது திமுகவா அல்லது அதிமுகவா ? கூட்டணி ஆட்சி தமிழகத்தில் முதன்முறையாக அமையுமா?, அல்லது வழக்கம்போல ஒரே கட்சி தனிப்பெரும்பான்மை பெறுமா?, விஜய்காந்த் அரசியல் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கப்போகிறது? போன்ற பல கேள்விகளுக்கு விடை தெரிய இன்னும் மூன்றே மணி நேரங்கள். தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் எனத் தெரிய வேண்டுமா? இன்னும் 3 மணி நேரங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114731417774155453?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114731417774155453/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114731417774155453' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114731417774155453'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114731417774155453'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_11.html' title='வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிட்டது'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114728195749957757</id><published>2006-05-10T19:25:00.000+02:00</published><updated>2006-08-07T20:30:45.386+02:00</updated><title type='text'>செம்பைத் தங்கமாக்க முடியுமா?</title><content type='html'>ரசவாதம் ஒரு கவர்ச்சியான விஷயம். பிற உலோகங்களைத் தங்கமாக்குதல் மனிதனுக்கு ஒரு கனவு. நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் அந்தக் காலத்தில் ரசவாத முயற்சிகள் மிகப் பிரபலம். ஜெர்மனியில் சொல்வார்கள், ரசவாத முயற்சிகளில் பிறந்ததுதான் வேதியியல் என்ற துறை என்று. சித்த வைத்தியம் படித்தவர்களுக்குத் தெரியும், இரசவாத வேதை என்பது சித்திய வைத்தியத்தில் மிக இயல்பான ஒன்று. இதுவரை அதனைச்செய்து வெற்றி பெற்றவர்கள யாராவது உண்டா என்று தெரியவில்லை. ஆனால், இன்னும் பலர் இது சாத்தியம் என்றே நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே சில மூலிகைகளையும், சில வேதிப்பொருட்களையும் சேர்த்து ஒரு உலோகத்தை உருக்கி எடுத்து அதை தங்கமாக மாற்றுதல் என்பது வேதியியல்படி கனவில்கூட நடவாத காரியம். ஒரு உலோகம் இன்னொன்றாக மாறும்போது எஞ்சியுள்ள மிகக்கொஞ்ச நிறை சக்தியாக மாறும் என்று அறிவியலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பார்த்தால், செம்பு தங்கமாகும்போது பெரிய அணுகுண்டு வெடித்தால் ஏற்படும் நிகழ்வு ஏற்பட வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;என் தந்தைக்கு சித்த வைத்தியத்தில் ஈடுபாடும், பரிச்சமும் உண்டென்பதால் இந்த ரசவாதம் பற்றி அவ்வப்போது பேசுவதுண்டு. நான் ஒரு முறை சொன்னேன். "..நீங்களை செம்பையோ அல்லது இரும்பையோ சித்த முறைகளின்படி தங்கமாக்க வேண்டியதில்லை, கொஞ்சம் தங்கத்தை இரும்பாகவோ, செம்பாகவோ மாற்றிக் காட்டினால்கூட உங்களுக்கு நோபல் பரிசு நிச்சயம்". இது உண்மைதான். ஆனால், இது சாத்தியமா?. இன்றைய அறிவியல் இது நடவாத ஒன்று என்றே மிகத்திடமாக நம்புகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களே, உங்கள் தனிப்பட்ட கருத்து மற்றும் இது சம்பந்தமான நம்பிக்கைகள், கேள்விப்பட்டவைகள் ஆகியவை ஏதாவது இருந்தால் அறிய ஆசைப்படுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114728195749957757?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114728195749957757/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114728195749957757' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114728195749957757'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114728195749957757'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_114728195749957757.html' title='செம்பைத் தங்கமாக்க முடியுமா?'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114725757212809052</id><published>2006-05-10T12:38:00.000+02:00</published><updated>2006-05-10T12:39:32.153+02:00</updated><title type='text'>முயற்சியின் விலை - 1 லட்ச ரூபாய்</title><content type='html'>சில நாட்களுக்கு முன்னால் ஜெர்மனியிலுள்ள முனிச் நகர நீதிமன்றம் ஒருவருக்கு அபராதம் 2,100 யூரோ விதித்தது. இதில் என்ன பெரிய விஷேசம் என்கிறீர்களா?. அபராதம் கட்டிய மனிதர் ரயிலைச் சேதப்படுத்தியதுடன், அந்த ரயில் ஓட்டுனரின் மனநிலை பாதிக்கும்விதத்தில் நடந்துகொண்டார் என்பதுதான் குற்றச்சாட்டு, ஆனால் பாவம், அந்த மனிதரின் நோக்கம் இரண்டுமே அல்ல, அவர் ஒன்றை செய்யப்போய் அது முடியாததால்தான் அபராதம் கட்டியிருக்கிறார். அவர் செய்ய முயன்றிருந்தது முடிந்திருந்தால் அவரிடம் உலகின் எந்தக் கோர்ட்டும் அபராதம் கேட்டிருக்கவே முடியாது. அப்படி என்னதான் செய்தார் என்கிறீர்களா?. தற்கொலைதான். ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றவர் கணநேரம் தப்பியதால் டிரைவர் இருக்கும் அறையில் சன்னல் வழியாய்ப் பாய்ந்துவிட்டார், தலையில் மட்டும் சின்ன காயம், வேறெங்கும் காயமில்லை. இதைப் பார்த்ததால் சில வாரங்களுக்கு என்னால் வேலையே செய்ய முடியவில்லை என டிரைவர் சொல்ல, விஷயம் கோர்ட்டுக்குப்போய் தற்கொலைக்கு முயன்றவர் அபராதம் கட்ட வேண்டியதாகிவிட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;அதுவாவது பரவாயில்லை. முதுகலைப் பொறியியல் படிக்கும் ஒரு இந்திய மாணவர் - ஆந்திராக்காரர், நான் இருக்கும் இடத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். சின்னப் பையன்தான், வயது கிட்டத்தட்ட 25 தான் இருக்கும். ரயில் வந்துகொண்டிருக்கும்போது ஓடிப்போய் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டார், தலையும் உடலும் துண்டாகிவிட்டது. காதல் தோல்வி என்கிறார்கள். உலகத்தில் வேறு பொண்ணா கிடைக்காது?. ஹ்ம்.. என்னத்த சொல்ல?.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114725757212809052?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114725757212809052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114725757212809052' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114725757212809052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114725757212809052'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/1.html' title='முயற்சியின் விலை - 1 லட்ச ரூபாய்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114724465827272704</id><published>2006-05-10T08:58:00.000+02:00</published><updated>2006-05-11T04:47:50.296+02:00</updated><title type='text'>மணிக்கணக்கும் நாள் கணக்கும்</title><content type='html'>வாக்கு எண்ணிக்கை என்பதே ஒரு காலத்தில்(?) பெரிய விஷயம். நாள்கணக்கில் எண்ணிக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் வாக்கு வித்தியாசத்தில் முன்னேறிக்கொண்டே வருவதும் இன்னொருவர் எண்ணிக்கையில் பின்னால் போவதும், பின்னர் அவரே முந்துவதும் என ஒரே களேபரமாய் இருக்கும். சில சமயம் ஒரு ஓட்டு, இரு ஓட்டு என வித்தியாசத்தில் வந்து நின்றால் திரும்ப எண்ணுவது என ஒரே த்ரிலிங்காக இருக்கும். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் கூட அவ்வளவு த்ரிங்காய் இராது. இந்த மின்னணு ஓட்டு இயந்திரம் வந்தாலும் வந்தது இந்த த்ரில்லே இல்லாமல் ஆக்கிவிட்டது. கிட்டத்தட்ட லாட்டரி விழுந்திருக்கா இல்லையா என்று பார்ப்பதுபோல ஆகிவிட்டது என்று சில நண்பர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள். இந்தச் சட்டமன்றத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மூன்றே மணிநேரத்தில் முடிந்துவிடுமாம். ஒரு தமிழ் சினிமா பார்க்கும் நேரம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இது இப்படி என்றால், தில்லுமுல்லு செய்பவர்களுக்கு வேறு மாதிரியான கவலை. ஓட்டுப் பெட்டியை மாற்றுவது, நினைத்த மாதிரி கள்ள ஓட்டுப் போடுவது இதெல்லாம் முடியாமல் போய்விட்டதே என்று அவர்களுக்கும் வருத்தம். சில நாட்களுக்கு முன்னால் எனது நண்பர் அவரது திறமையைப் பற்றிச் சொன்னார். ஓட்டு எண்ணும்போது ஓட்டுக் குத்தும் முத்திரையுடன் போய் எதிர்க்கட்சி ஆளுக்கான ஓட்டில் இன்னொரு முத்திரை குத்தி அதைச் செல்லாமல் ஆக்குவது. இதைச் செய்யத் தனித்திறமையும் ஒரு கும்பலும் அவசியமாம். கும்பலில் பாதிப்பேர் ஏதாவது களேபரத்தை உண்டாக்கி மற்றவரின் கவனத்தைச் சிதறடிக்கும்போது மீதிப்பாதிக் கும்பல் எதிரியின் ஓட்டுக்களில் கொஞ்சத்தைச் செல்லாமல் ஆக்கிவிடுமாம். கொஞ்சம் விபரமாய்க் கேட்டபின் சொல்கிறார், பஞ்சாயத்துத் தேர்தலில் அவருக்கே நேரடி அனுபவம் உண்டாம், கவனத்தைத் திருப்பும் கும்பலில் இருந்தாரோ, செல்லாமல் குத்தும் கும்பலில் இருந்தாரோ தெரியலை. ஆனால், சிக்கிவிட்டால் முதுகில் டின் கட்டிவிடுவார்கள் என்பது உறுதி என்பதால் கும்பலுடன்போய் எச்சரிக்கையாய்ச் செய்வதே உசிதம் என்று இன்னும் பல "மெகா பிளான்"  அந்த நண்பர் சொல்கிறார். இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் இல்லாமலே போய்விட்டது என்று கடைசியில் வருத்தப்பட்டார். (சொந்த அனுபவங்களை நண்பர் ஒருவர் சொன்னார் என்று சொல்வது சகஜம்தான்னு யாருப்பா அங்க குரல் கொடுக்கிறது ??, பிச்சுப் போடுவேன்.. சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.)&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114724465827272704?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114724465827272704/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114724465827272704' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114724465827272704'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114724465827272704'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_114724465827272704.html' title='மணிக்கணக்கும் நாள் கணக்கும்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114721994703271748</id><published>2006-05-10T02:10:00.000+02:00</published><updated>2006-05-10T08:43:40.730+02:00</updated><title type='text'>வாக்கு எண்ணிக்கை நிலவரம் - சுடச்சுட</title><content type='html'>நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல்-2006 ன் முடிவுகள் சுடச்சுட அறிவிக்கப்படும். மற்ற இணையத்தளங்கள், செய்தித் தாள்கள், வானொலிச் செய்திகள், தொலைக்காட்சிச் செய்திகள் ஆகியவை மூலமும் நிரவரம் அறியப்பட்டு இங்கு அளிக்கப்பட உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;நமது இந்தியத் தேர்தல் ஆணையமும் உடனுக்குடன் நிலவரங்களை இணையம் மூலம் அளிக்க உள்ளது. அந்த இணையத்தளம் &lt;a href="http://eci.gov.in/TAMILMay2006/pollupd/ac/states/s22/a_index.htm"&gt;யுனிக்கோடு தமிழில்&lt;/a&gt; இருக்கிறது என்பது ஒரு விஷேசம்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114721994703271748?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114721994703271748/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114721994703271748' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114721994703271748'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114721994703271748'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_10.html' title='வாக்கு எண்ணிக்கை நிலவரம் - சுடச்சுட'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114702161694045165</id><published>2006-05-07T20:02:00.000+02:00</published><updated>2006-05-09T10:17:30.950+02:00</updated><title type='text'>சோதிடம் என்னும் அற்புதக்கலை-2</title><content type='html'>சோதிடம் என்பது முழுவதும் புரட்டு, பிற்போக்கானது என்று கூறுவது மிக எளிதானது. இதைக் கூற எவருக்கும் முழு உரிமை உண்டு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் இதைக் கூறுவதற்கு முன்னர் அவருக்குச் சோதிடத்தின் அடிப்படைகள் , தன்மைகள், ஆகியவற்றைப் பற்றி அறிவுப் பூர்வமான பரிச்சயம் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முடிவையும் எடுப்பதற்கு முன்னால் எந்தப் பக்கமும் சாயாத தராசு முள்ளின் நடுநிலைத் தன்மை அவ்விஷயத்தைப் பற்றி மனதுக்கு இருக்கவேண்டும். அதன் தன்மைகள், அதைப் பற்றிய உங்களின் சொந்த அனுபவங்கள், அந்தச் சொந்த அனுபவங்களின் உண்மையான பின்புலம், இவற்றுடன் எதையும் ஆய்வு நோக்கில் சீர்தூக்கிப் பார்க்கும் தன்மை இவையனைத்தும் இருப்பின் ஒருவர் சோதிடம் என்பது முற்றிலும் மூடநம்பிக்கை, ஏமாற்றுப் புரட்டு என்று கூறவே மாட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;சோதிடம் புரட்டு என்ற முடிவை ஒருவர் தன்னுடைய முன்முடிவின் காரணமாகவோ, மெரினா பீச்சில் கையில் குச்சியுடன் குறி பார்க்கும் பெண்ணிடம் ஒரு தடவை பேசியதை வைத்தோ, தெருவில் போகும் கிளிஜோசியக்காரரிடம் சிறு வயதில் சோதிடம் பார்த்ததை வைத்தோ, தொலைக்காட்சியில் இப்போது அடிக்கடி வரும் பெயர் ராசி, அதிர்ஷ்டக்கல் என விதவிதப் பெயர்களில் அடுக்கடுக்காய் வரும் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்த்தோ, சுயலாபத்துக்காய்ப் பித்தலாட்டம் செய்யும் ஏமாற்றுப் பேர்வழிகளைப் பார்த்தோ ஒருவர் எடுப்பாரானால் அது எத்தகைய தவறான முடிவு என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் &lt;br /&gt;மெய்ப்பொருள் காண்பது அறிவு.   &lt;br /&gt;&lt;br /&gt;என்று வள்ளுவர் சொன்ன சொல் இங்கே நினைவு கூறத்தக்கது. அதற்காய் சோதிடம் என்பது ஒரு முழுமையான இயல், அனைத்தும் சரியே என்று சொல்ல வரவில்லை. முழுமையான துறை என்பதாய் உலகில் இதுவரை எதுவும் இல்லை. இன்றைய அறிவியலை எடுத்துக் கொண்டால் அதன் வளர்ச்சி தொடர்ந்ததாய், நீண்ட நெடுங்காலமாய் இருந்து வந்திருக்கிறது, அறிவியலை இன்னும் ஆயிரக்கணக்காணோர் வளர்த்துவருகிறார்கள். ஆனால் இன்றைய அறிவியலில் வளர்ச்சி, அதற்காய் செய்யப்படும் முயற்சிகளின் அளவு ஆகியவற்றை சோதிடத்துடன் ஒப்பிட்டால் சோதிடம் என்பது சில நிமிடங்களுக்கு முன்னர் பிறந்த குழந்தை. அதன் வளர்ச்சி என்பது சொல்லிக்கொடும்படியாய் எதுவுமே இல்லை. சோதிடத்தை அனைவரும் பயன்படுத்த மட்டுமே விரும்புகிறார்கள், சோதிடத்தின் வரம்புகள், அதன் குறைகள் ஆகியவற்றை மறைக்க விரும்புவோர், குறையை மட்டுமே காட்டிக் கேலி செய்து இந்தச் சமூகத்தைத் திருத்தமுயல்வதாய் நினைத்துக்கொள்வோர், அதைத் தங்கள் சொந்த லாபத்துக்காய்ப் பயன்படுத்த விரும்புவோர் இப்படியாய் இவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் சோதிடத்தை வளர்க்க, அதன் எல்லைகளை நீட்டிக்க ஆய்வுப் பூர்வமாய்ச் சிந்திப்பவர்களின் எண்ணிக்கை பல நூற்றாண்டுகளாய் மிகக் கொஞ்சமாகவே இருந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், சோதிடத்தைப் பல்கலைக்கழகப் பாடங்களில் ஒன்றாக பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகரித்தது சரியே எனச் சில நாட்களுக்கு முன்னால் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது சோதிடத்தைப் பற்றி ஆய்வுப் பூர்மாய்ச் சிந்திப்பவர்கள் இன்றும் கொஞ்சப் பேர் இருக்கவே செய்கிறார்கள் என்ற நம்பிக்கையை மனதில் எழுப்புகிறது. &lt;br /&gt;(இப்பதிவு இரு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வலைப்பதிவில் எழுதப்பட்டது)&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114702161694045165?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114702161694045165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114702161694045165' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114702161694045165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114702161694045165'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/2.html' title='சோதிடம் என்னும் அற்புதக்கலை-2'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114702044914157349</id><published>2006-05-07T18:50:00.000+02:00</published><updated>2006-05-09T05:46:16.470+02:00</updated><title type='text'>சோதிடமென்னும் அற்புதக்கலை</title><content type='html'>எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்&lt;br /&gt;மெய்ப்பொருள் காண்ப தறிவு.&lt;br /&gt;&lt;br /&gt;சமயங்களையும், முன்னோர்கள் கண்டுரைத்த அரிய, பயனுள்ள நெறிகளையும் எந்த தயக்கமும் இன்றி மூடநம்பிக்கைகள், பிற்போக்கானவை என்று கூறுபவர் சிலர், அதன் மூலம் தாங்கள் பகுத்தறிவுவாதிகள், முற்போக்கானவர்கள் என்று மாயப்பெருமை கொண்டு தங்களைத்தாமே ஏமாற்றிக் கொள்பவர்கள் சிலர். இவர்களைக்கண்டு  இந்த மாயக்கவர்ச்சியால் மயங்கி நிற்பவர் பலர். ஆனால் இவ்வுலகில் இதுவொன்றும் புதிதல்ல!.&lt;br /&gt;&lt;br /&gt;இருளும்-பகலும், உண்மையும்-பொய்மையும், வெற்றியும்-தோல்வியும், தீயோரும்-நல்லோரும், மேடும்-பள்ளமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு உண்மையை நம்புவோரும்-நம்பாதோரும் கூட அவ்வாறே. இவை இன்று நேற்றல்ல, பல கோடி ஆண்டுகளாக இருந்து வருபவை, இன்னும் தொடர்ந்து இருக்கும். சோதிடத்தை நம்பாதவர்களின் கருத்துக்கு எதிர்வாதம் செய்வதோ அல்லது சோதிடத்தை நியாயப்படுத்துவதோ இக்கட்டுரையின் நோக்கமல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;தேவைகள் கண்டுபிடிப்புக்களின் தாய் என்பர்.மனிதனுக்கு அவன் தோன்றியதிலிருந்து இன்றுவரை எத்தனையோ தேவைகள், அதனால் உருவானதே இத்தனைக் கண்டுபிடிப்புக்கள், கலைகள். மனிதனின் எதிர்காலத்தை அறிய வேண்டுமென்ற ஆவலால் உருவானதே இந்த சோதிடமென்ற ஒரு அற்புதக்கலை. ஆம் இது உண்மையென்பதை , அதன் அடிப்படையை உணர்ந்தோர் அறிவர். இக்கட்டுரையில்  சோதிடம் என்று குறிப்பிடுவது மனிதன் பிறந்தவுடன் அவன் பிறக்கும்போது இருக்கும் கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிக்கப்படும் சோதிட சாத்திரத்தைப்பற்றியதை மட்டுமே. &lt;br /&gt;&lt;br /&gt;தொடக்கத்திலிருந்தே ஒவ்வொரு மனிதனுக்கும் தன் எதிர்காலம் பற்றி முன்பே அறிந்துகொள்ள ஆசையும்,ஆர்வமும் உண்டு. இதனடிப்படையில் உருவானதே சோதிடம். ஒருவனின் ஜாதகம் எவ்வாறு எழுதப்படுகிறது என்றும், கோள்களின் நிலை எவ்வாறு கணிக்கப்பட்டது என்றும் அறிந்தவர்கள் வியப்புக் கொள்வது நியாயமானதே. ஏனென்றால் இவையெல்லாம் உருவாக்கப்பட்டது கணினி யுகமான இக்காலத்தில் அல்ல, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது. இன்று பழைய பஞ்சாங்கம் என்று கேலியாகச் சொல்லப்படும் அவைகள் இன்றும் கூட சூரிய, சந்திர கிரகணங்கள் முதல் கோள்களில் நிலையைத் துல்லியமாய்ச் சொல்கிறதே , எப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இக்கணிக்கும் கலையை உருவாக்கினார்கள் என்று அதைக் கேலிபேசுவோர் சிந்திப்பதில்லை. வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால்தான் கோள்களின் இயக்கம் பற்றிய முறையான அறிவியல் விதிகள் வந்தன, ஆனால் இது உருவாவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அந்த இயக்கங்களைத் துல்லியமாய்க் கணித்தே சோதிடத்துக்கான பழைய, புதிய பஞ்சாங்கள் உருவாக்கப்பட்டன/படுகின்றன. இன்னொன்றை முதலிலேயே கூறிக்கொள்ள விழைகிறேன், நான் முறையாய்ச் சோதிடம் கற்றவன் அல்லன். உண்மையில் எனக்கும் சோதிடத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை; சோதிடம்  என்றால் என்னவென்றும் அது எவ்வாறு  கணிக்கப்படுகிறது என்று அறிவியல் பூர்வமாய்ச் சில புத்தகங்களைப் படித்ததைத் தவிர. (இது இருவருடங்களுக்கு முன் எழுதப்பட்டது)&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114702044914157349?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114702044914157349/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114702044914157349' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114702044914157349'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114702044914157349'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post_07.html' title='சோதிடமென்னும் அற்புதக்கலை'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114692945444052646</id><published>2006-05-06T17:30:00.000+02:00</published><updated>2006-05-07T12:01:02.476+02:00</updated><title type='text'>முத்துவும் நாய்களும்</title><content type='html'>எனக்குப் பக்கத்துவீட்டில் ஒரு நாய் இருந்தது. அதை எப்போதாவது கல்லால் அடித்திருக்கிறேனா இல்லையா என்பது சரியாக நினைவில்லை. ரொம்ப சின்ன வயதில் இருந்தே ஜீவகாருண்யம் மீது எனக்கு நம்பிக்கை உண்டு, அதனால் அதைக் கல்லால் அடித்திருக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன். நான் மட்டுமல்ல, அந்த நாயும்கூட ஜீவகாருண்யத்தின் மீது நம்பிக்கைகொண்ட சாதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். அந்த நாய் திருடர்களிடம்கூட அதே கருணையைக் காட்டியது என்பதுதான் இங்கே விஷேசம். இன்னா செய்தாரை... என்ற குறள்தான் அந்த நாயின் போக்குக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். இதுவே, எனக்கு அந்தத் திருக்குறள் படித்தபின்தான் புரிந்தது. அந்தக் குறளுக்கு வாழும் இலக்கணமாக இருந்த நாய் நிச்சயம் மதிப்புக்குரியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது என் தாத்தா வீட்டில் ஒரு நாய் இருந்தது. அது மகா புத்திசாலி நாய். ஒருமுறை முன்னால் சென்றுகொண்டிருந்த பாம்பை மிதியாமல் இருக்க ஓடிச் சென்று குரைத்து எச்சரிக்கை செய்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். முதலில் குறிப்பிட்ட பக்கத்துவீட்டு நாயிடமிருந்து இந்த நாய் மிகவும் வேறுபட்டதுதான். வாய்ச்சண்டைக்கு வந்த ஒருவரைக் குறிப்பால் உணர்ந்து கடித்துக் குதறியிருக்கிறது. ஊரில் புதிதாக ஏதாவது ஒரு நாய் வந்து விட்டால் போதும், முதலில் வூடு கட்டும் நாய் இதுவாகத்தான் இருக்கும். ஊரில் உள்ள மற்ற நாய்களையெல்லாம் உசுப்பேத்தி அந்த நாயுடன் மோத வைத்துவிட்டு சத்தமே போடாமல் மெதுவாய்ப் பின்வாங்கி நல்ல பிள்ளையாய் வீட்டுக்கு வந்துவிடும். மற்ற நாய்கள் அப்பாவித்தனமாய் சண்டைக்குபோய் ரத்தக்காயத்துடன் வீட்டுக்கு வந்து வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டிருக்குங்கள் பாவம். அந்த நாயின் பிரதாபங்கள் இன்னும் பல இருக்கின்றன, எனக்கு நிறையவே மறந்துவிட்டது. இவ்வளவு புத்திசாலியான நாய் கடைசியில் வெறிபிடித்து இறந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோக, தெருவில் அவ்வப்போது மிரட்டிப்பார்க்கும் ஒரு சில நாய்களும் இருந்தன. அவை அவ்வளவு சுவாரசியமானவைகள் அல்ல. எங்கள் வீட்டிலும் ஒரு நாய் வளர்க்க வேண்டும் என்று எல்லாரையும்போல ஆறேழு வயதில் நான் ஆசைப்பட்டதுண்டு. ஒரு முறை நானும் என் தம்பிகளும் சேர்ந்து எங்க அம்மாவிடம் நாய் வேண்டும் என அடம்பிடித்ததுக்குக் கிடைத்த பதில், "...வீட்டில் ஏற்கனவே மூணு நாய் இருக்கு.. இதில் இன்னொன்னு தேவையா..?..". அந்தப் பதில் எங்களைக் கொஞ்சம் யோசிக்க வைத்ததோ என்னவோ மீண்டும் நாய் வேண்டும் என்று கேட்ட நினைவே இல்லை. அப்ப ஏற்கனவே உங்க வீட்டில் மூன்று நாய்கள் இருந்தனவா என்று கேட்க நினைக்கிறீர்கள். அதான் இல்லை, அன்று நானும் என்னுடைய இரு தம்பிகளும்தான் இருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, நாய்களுடன் எனக்கான பரிச்சயம் மிகவும் குறைவுதான். பினாத்தல் சுரேஷின் பதிவும், அதற்கு வந்த &lt;a href="http://penathal.blogspot.com/2006/05/blog-post.html#114667070861297504"&gt;உஷாவின் பின்னூட்டமும்&lt;/a&gt; இந்த நாய்ப் பிளாஷ்பேக்குக்கு என்னை இட்டுச் சென்றது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114692945444052646?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114692945444052646/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114692945444052646' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114692945444052646'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114692945444052646'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/05/blog-post.html' title='முத்துவும் நாய்களும்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114642191426134490</id><published>2006-04-30T20:30:00.000+02:00</published><updated>2006-05-06T13:26:54.393+02:00</updated><title type='text'>மனிதர்கள் ஜாக்கிரதை - தாவரங்கள்</title><content type='html'>பூச்சிகளைத் தின்னும் - அசைவம் சாப்பிடும் தாவரங்களைப் பற்றி ஒரு கட்டுரையை வலைப்பதிவில் படித்தேன். நண்பர் பாரதி நார்த்தமலைக்காட்டில் அந்த வகைத்தாவரங்களைப் பார்த்ததைப்பற்றிப் பின்னூட்டியிருந்தார். "இயற்கையை நேசி" (அட.. பெயர் நல்லா இருக்கே..!) அந்தப் பதிவை எழுதியிருந்தார். அந்த வகைத் தாவரங்களை நம்மூரில் நான் பார்த்ததில்லை. மனிதர்கள் அருகில் வந்தால் வேகமாகத் தன்னை ஆட்டி சலசலக்கும் நம்மூர் செடிகள் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. நேரில் நான் பார்த்ததில்லை. நண்பர்கள் யாராவது அதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?.&lt;br /&gt;&lt;br /&gt;சிலவருடங்களுக்கு முன்னால் இந்த வகைத்தாவரங்கள் பற்றி எனது இந்த வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அப்போது நமது தமிழ்மணம், தேன்கூடு போன்ற வலைப்பதிவுத் திரட்டிகள் இல்லை. காசி, வெங்கட் மற்றும் நான் போன்றோர் &lt;a href="http://muthukmuthu.blogspot.com/2004/02/blog-post_01.html"&gt;சிறிய மென்பொருள்&lt;/a&gt; ஒன்றை புதுஇடுகைகளைப் படிக்கப் பயன்படுத்த முயற்சி கொண்டிருந்தோம். அப்போது தமிழில் வலைப்பதிந்துகொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையே மிகக்குறைவுதான். ஐம்பதுபேரைவிட கொஞ்சம் அதிகமாய் இருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்று அது ஆயிரமாகியிருக்கிறது, இது பெரிய சாதனைதான். சரி..  சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறேன். கீழேயுள்ளது அன்று எழுதிய பதிவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt;கொ&lt;/span&gt;&lt;/span&gt;ஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஒரு காட்டின் வழியே நடந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். திடீரென பக்கத்திலிருந்த மரத்தின் கிளைகள் உங்களை நோக்கி நீளுகிறது. நீங்கள் சுதாரித்து விலகுவதற்குள் உங்களின் ஒரு கையைச் சுற்றிப் பிடித்துக் கொள்கிறது. இன்னொரு கையால் அதை விடுவிக்க நினைக்கிறீர்கள். ஆனால் பலனில்லை. காலம் கடந்துவிட்டது. உங்களின் இன்னொரு கையையும், இடுப்பையும் சுற்றிவளைத்துவிடுகிறது. அதன் கிளைகள் உங்களை மொத்தமாக ஆக்கிரமித்துவிடுகிறது. நினைப்பதற்கே கொஞ்சம் அச்சமாக இல்லை..? இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் கதைகளில் படித்திருக்கலாம். உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சி சாத்தியமா..? இதில் கொஞ்சம் உண்மை இருக்கத்தான் செய்கிறது ..!&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;மாமிசத்தை உண்ணும் தாவரங்கள் நிறையவே இருக்கின்றன. மிகப் பிரபலமான உதாரணம் நெபந்தஸ் என்ற தாவரம். தாவரங்கள் என்பவை விலங்குகள் உண்பதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோமே. எப்படி சில தாவரங்கள் நான்-வெஜிடேரியனாக மாறிவிடுகின்றன. சிங்கம் , புலி போல இத்தாவரங்கள் சுத்தமான அசைவப் பிரியர்களா இவை... ? இதற்குப் பதில் என்னவென்றால் இல்லை என்பதுதான். பிறகு ஏன் இவை மாமிசம் சாப்பிடுகின்றன..? நமக்குப் போரடித்தால் வாரத்தில் ஒரு தடவை ஞாயிற்றுக் கிழமை சிக்கன் 65 சாப்பிடுகிறோமே அது போலவா..?&lt;/span&gt;&lt;img src="http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons/03.gif" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://www.ucalgary.ca/%7Edmjacobs/edts325/flytrap/trap2.jpg" alt="பூச்சி இரையாகப் போகுது" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;உண்மையில் மற்ற தாவரங்களைப் போலவே இத்தாவரங்களுக்கும் பச்சையம் உண்டு. இவை வாழ நீர் , சூரிய ஒளி , காற்று அவசியம். ஆனால் இவை தவிர சில முக்கியத் தனிமங்களும் இவற்றுக்குத் தேவைப்படுகின்றன. பெரும்பாலும் அத்தனிமங்கள் இவை வளரும் நிலத்தில் இருப்பதில்லை. அல்லது மிகக்குறைந்த அளவில் இருக்கும். எனவே இந்த நைட்ரஜன் போன்ற தனிமங்களுக்காகத்தான் பூச்சி போன்ற சிறிய விலங்குகளைத் தின்றுவிடுகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;சமீபத்தில் நெதர்லாந்து போயிருந்தபோது இந்த நெபந்தஸ் தாவரம் ஒன்றைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. சின்ன பூச்சட்டியில் முழுத்தாவரத்தையும் விற்பனைக்காகத் தொங்கவிட்டிருந்தார்கள். இத்தாவரம் பூச்சிகளைக் கவர அதற்கே உரிய ஒரு வாசனையைப் பரப்பும். இந்த வாசனையை நுகர்ந்து பூவுக்குள் பூச்சி நுழைந்தவுடன் தாவரம் தயாராக வைத்திருக்கும் மூடியைக்கொண்டு அப்பூவை மூடிவிடும். அப்புறமென்ன உள்ளே போன பூச்சியின் கதி அதோ கதிதான்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://i83.photobucket.com/albums/j291/muthublog/nepha.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://i83.photobucket.com/albums/j291/muthublog/nepha.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஆனால் நாம் பொங்கலுக்குக் கரும்பைக் கடித்து, அரைத்து தின்பதுபோல பூச்சியைத் தின்ன அத்தாவரத்துக்குப் பற்கள் இல்லை. ஆனால் மற்ற படி நாம் உணவைச் ஜீரணிப்பதுபோலத்தான் அதுவும் ஜீரணிக்கிறது. பூச்சியைப் பிடித்ததும் அந்தப் பூ ஒரு சின்ன வயிறு போலவே செயல்பட ஆரம்பிக்கிறது. மெதுவாக ஒரு திரவத்தைச் சுரக்கிறது. அந்தத் திரவம் பூச்சியின் முழு உடலையும் கரைத்த பின்னர் அதிலுள்ள , கனிமங்களை உறிஞ்சி எடுத்துக்கொள்கிறது. சரி, இது சின்னப் பூச்சிகளுடன் நிறுத்திக்கொள்கிறதா ? இல்லை, சிறிய தவளைகள், சில சமயம் எலிகள் கூட இத்தாவரத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மனிதனைத் தின்னுமளவுக்கு தாவரங்கள் இல்லை என்பதே உண்மை. இவ்வகைத்தாவரங்கள் மனிதனைக்கூடத் தின்னும் என்ற வதந்தி பரவக் காரணம். பல மீட்டர் வரை வளரும் அமர்போபாலஸ் டைட்டானியம் போன்ற அசைவத்தாவரங்களாக இருக்கலாம். இவை வளர்ந்தவுடன் பூச்சிகளை ஈர்க்க நம்மால் சகிக்கமுடியாத துர்நாற்ற்த்தைப் பரப்பும், கிட்டத்தட்ட அந்த நாற்றம் ஒரு மனிதன் அந்த பூவுக்குள் இறந்து,அழுகிக்கிடப்பதைப் போல் இருக்குமாம். இது போல் நிறையத் தாவரங்கள் இருக்கின்றன. இதனால் இத்தகைய கட்டுக்கதைகள் பரவியிருக்கலாம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;center&gt;&lt;img src="http://static.userland.com/manilasites/images/rainforrestManilaSitesCom/whatabigflowerrainforest.jpg" alt="துர்நாற்றம் வீசும் பூச்சித்திண்ணித் தாவரம்" /&gt;&lt;/center&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-style: italic;"&gt;ஒருவர் சொன்னது போல, அசைவத்தாவரங்களால் மனிதனுக்கு ஆபத்து என்பதை விட மனிதனால் அசைவத்தாவரங்களுக்கு ஆபத்து என்பதே பொருத்தமாக இருக்கும். இவற்றின் பிரபலத்தன்மையே அவற்றுக்கு ஆபத்தாகிவிட்டது. இதைக் கண்டவுடன் வேரோடு பிடுங்கி , விற்றுவிடுகின்றனர். இதனால் இப்போது இத்தாவரங்கள் அருகி வருகின்றன.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வமுடையவர்களுக்காக.&lt;br /&gt;&lt;a href="http://www.google.com/search?hl=en&amp;q=insect+eating+plants&amp;amp;btnG=Google+Search"&gt;கூகிள் தேடல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114642191426134490?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114642191426134490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114642191426134490' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114642191426134490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114642191426134490'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_30.html' title='மனிதர்கள் ஜாக்கிரதை - தாவரங்கள்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114432438640861079</id><published>2006-04-06T19:00:00.000+02:00</published><updated>2006-04-20T21:49:17.570+02:00</updated><title type='text'>டோக்குலவ் தெரியுமா?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4379/219/1600/tokelau.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 194px; height: 207px;" src="http://photos1.blogger.com/blogger/4379/219/200/tokelau.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;இது ஒரு சின்ன தீவுக்கூட்டம். நியூசிலாந்துக்குப் பக்கத்தில் இருக்கிறது. இதன் மொத்த மக்கள் தொகையே சுமார் ஆயிரம் பேர்தான். பிரிட்டிஷ் கையில் இருந்தது. இப்போது நியூசிலாந்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. கிட்டத்தட்ட பத்துவருஷத்துக்கு முன்னால் அதிகாரப்பூர்வமாய் நியூசிலாந்தின் கையில் வந்துவிட்டாலும் தன்னாட்சி கொண்ட ஒரு பிரதேசமாய் இருந்துவருகிறது. முக்கியத் தொழில் தேங்காய், அஞ்சல்தலை சேகரிப்பு, மீன்பிடித்தல் போன்றவை. மொத்த நிலப்ப்பரப்பு பத்து சதுரகிலோமீட்டர்கள். கடல் எல்லை சுமார் நூறு கிலோமீட்டர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனை நாடுகள் இருக்கும்போது ஏன் இதைப்பற்றிச் சொல்கிறேன் என்று நீங்கள் யாராவது நினைக்கலாம். காரணம் இதன் இணைய அடையாளம் .TK. இப்போது தெரிகிறதா? ஏன் சொல்கிறேனென்று?. இவர்கள் நாட்டின் அரசாங்கம் .tk என்று முடியும் டொமைன் பெயரை &lt;a href="http://www0.dot.tk/"&gt;இலவசமாகத்&lt;/a&gt; தர ஸ்பான்ஸர் செய்கிறார்கள். உங்கள்பெயர்.tk இருக்கிறதா அல்லது யாராவது எடுத்துக்கொண்டு விட்டார்களா பார்த்து இன்னும் மிச்சமிருந்தால் உங்களுக்காய் பதிவு செய்துகொள்ளலாம். எனக்குத் தெரிந்து பலர் காசு கொடுத்துத்தான் இப்படி டொமைன் பெயரை வாங்கி வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு 90 நாட்களிலும் குறைந்தது 25 தடவையாவது பதிவு செய்யப்பட்ட பெயர் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் அத்தளபெயர் பயன்படுத்தும் உரிமை ரத்தாகி அடுத்தவர் யாராவது விரும்பினால் அவருக்குக் கொடுக்கப்பட்டுவிடும், மீண்டும் நீங்களேகூட பதிவு செய்துகொள்ளலாம். இல்லையென்றால் இதே பெயரை காசு கொடுத்தும் வாங்கிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே ஒரு தடவை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனது டொமைன் பெயர் &lt;a href="http://muthu.tk"&gt;http://muthu.tk&lt;/a&gt; . இதே முத்து வலைப்பூவின் முகவரிதான் இது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114432438640861079?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114432438640861079/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114432438640861079' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114432438640861079'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114432438640861079'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_114432438640861079.html' title='டோக்குலவ் தெரியுமா?'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114432763644409354</id><published>2006-04-06T14:45:00.000+02:00</published><updated>2006-04-09T10:00:04.866+02:00</updated><title type='text'>கார்த்திக் - ஜெ நேரடி மோதல்</title><content type='html'>கார்த்திக் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிப்பட்டியில் நிற்கப்போவதாய் அறிவித்துள்ளார். இதே செய்தி முன்பே வெளியானது, ஆனால் அவ்வாறு தான் நிற்கப்போவதில்லை, ஒரு அரசியல் தலைவரை எதிர்த்து இன்னொரு தலைவர் நிற்பது நாகரீகமில்லை என்று முன்பு மறுத்தார் கார்த்திக். இப்போது தான் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவைத் தோற்கடிக்கப்போவதாய்க் கூறியுள்ளார். அவ்வாறு நிற்கும்பட்சத்தில் திமுக கூட்டணி மறைமுகமாய் கார்த்திக்குக்கு உதவக்கூடும். கார்த்திக்கை அதிமுகவினர் மிரட்டியதால் கடுப்பாகி இம்முடிவை அவர் எடுத்ததாய்க் கூறப்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114432763644409354?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114432763644409354/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114432763644409354' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114432763644409354'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114432763644409354'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_114432763644409354.html' title='கார்த்திக் - ஜெ நேரடி மோதல்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114429967200194706</id><published>2006-04-06T06:50:00.000+02:00</published><updated>2006-04-06T09:42:32.216+02:00</updated><title type='text'>ஒரு கழுதை, மனைவி, அரசியல்வாதி</title><content type='html'>நண்பர் &lt;a href="http://manaosai.blogspot.com/2006/04/blog-post_05.html"&gt;சந்திரவதனா&lt;/a&gt; ஜெர்மன் இதழில் வந்த ஒரு செய்தியை மேற்கோள் காட்டி ஒரு பதிவு எழுதியிருந்தார். இன்று தினகரன் இ-பேப்பரில் அதே செய்தி வந்திருந்தது. பகிர்ந்துகொள்ளலாமே என்று நினைத்து அதை அப்படியே கொடுத்திருக்கிறேன்.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4379/219/1600/wife%20and%20donkey.0.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4379/219/400/wife%20and%20donkey.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114429967200194706?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114429967200194706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114429967200194706' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114429967200194706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114429967200194706'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_06.html' title='ஒரு கழுதை, மனைவி, அரசியல்வாதி'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114427259515125511</id><published>2006-04-05T23:27:00.000+02:00</published><updated>2006-04-06T01:34:19.056+02:00</updated><title type='text'>பாக்யராஜ் திமுகவில் சேர்ந்தார்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.chennaionline.com/reeltalk/images/24bakyaraj01.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 81px; height: 81px;" src="http://www.chennaionline.com/reeltalk/images/24bakyaraj01.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;எம்ஜிஆர் காலத்தில் அவரின் தீவிர ஆதரவாளராய் இருந்தவர் பாக்கியராஜ். அதிமுகவில் அதிக ஈடுபாடுகொண்டவராக அப்போது இருந்தார். எம்ஜிஆர் மறைந்த பிறகு தனியாகக் கட்சி தொடங்கினார். தமிழகத்தில் எம்ஜிஆரைத் தவிர தனிக்கட்சி தொடங்கிய அத்தனை நடிகர்களுக்கும் ஏற்பட்ட முடிவே அவருக்கும் ஏற்பட்டது. பின்னர் பாக்யா என்ற பத்திரிக்கையை மட்டும் நடத்திக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்த அவர் தனது ஆதரவைத் தெரிவித்து திமுகவில் இணைந்திருக்கிறார். இன்னும் ஒரு மாதம் கழித்து எந்த நடிகராவது எந்தக் கட்சியிலாவது சேர்ந்தால் அது பெரிய விஷயமாகப்போகிறதா என்ன?. ஆனால் இப்போது எந்த நடிகர் எந்தக் கட்சியில் சேர்ந்தாலும் அது கவர்ச்சியான செய்திதான்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114427259515125511?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114427259515125511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114427259515125511' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114427259515125511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114427259515125511'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_114427259515125511.html' title='பாக்யராஜ் திமுகவில் சேர்ந்தார்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114421956440111641</id><published>2006-04-05T09:07:00.000+02:00</published><updated>2006-04-06T07:53:03.036+02:00</updated><title type='text'>கூண்டோடு நீக்கம் - ஜெ அதிரடி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.dalitstan.org/journal/images/people/jayalali.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 116px; height: 107px;" src="http://www.dalitstan.org/journal/images/people/jayalali.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் எப்போதும் அதிரடியாகவே இருக்கும் என்பது அவரின் தனிச்சிறப்பு. பாண்டிச்சேரி உருளையன் பேட்டையில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் நேரு. பின்னர் அவர் மாற்றப்பட்டு நடிகர் ஆனந்தராஜ் போட்டியிடுவதாய் அறிவிக்கப்பட்டது. இது அத்தொகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது. நேருவின் ஆதரவாளர்கள் ஆதரவாளர்கள் ஆனந்தராஜுக்கு எதிராய் கலாட்டாவில் ஈடுபட்டனர். இது வேறு கட்சியில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்குமோ தெரியாது, அதிமுகவில் நடந்தால் நடவடிக்கை எப்படி இருக்குமென்று பாருங்கள். இந்தக் கிளர்ச்சியில் ஈடுபட்ட அத்தனைபேரும் கூண்டோடு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதில் அத்தொகுதியின் செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மட்டுமல்ல, முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் அடக்கம். சில நாட்களுக்கு முன்னால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், இன்று கட்சியில்கூட இல்லை. இது எப்படி இருக்கு..?(ரஜினி ஸ்டைலில் வாசிக்க).&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114421956440111641?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114421956440111641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114421956440111641' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114421956440111641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114421956440111641'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_114421956440111641.html' title='கூண்டோடு நீக்கம் - ஜெ அதிரடி'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114420824221751334</id><published>2006-04-05T05:40:00.000+02:00</published><updated>2006-06-15T20:17:54.633+02:00</updated><title type='text'>கடலை போடுதல் - சிறு குறிப்பு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img.alibaba.com/photo/50427066/Groundnut.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 133px; height: 133px;" src="http://img.alibaba.com/photo/50427066/Groundnut.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://static.flickr.com/7/6409815_1dee2b4818.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 222px; height: 142px;" src="http://static.flickr.com/7/6409815_1dee2b4818.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;உலகில் பலரும் பலவற்றைச் செய்தாலும், அனைவருக்கும் தாம் செய்பவற்றின் பெயர் தெரிவதில்லை. அந்த வகையில் இந்தக் "கடலை போடுதல்" அல்லது "வறுத்தல்" பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் இருந்துவந்தாலும் இந்தச் சொல்லாடல் மிகச் சமீபத்தில் உதித்ததாகவே இருக்குமென்று தோன்றுகிறது. அதிகபட்சம் 20 வருடம். அனுபவமானவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். "கடலை" -க்கு இணையான சொற்கள் ஏதாவது பழந்தமிழ் இலக்கியத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை, சங்க இலக்கியத்தில் இருக்கக்கூடும் என்று சந்தேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே "கடலை" பற்றித் தெரியாத அப்பாவிகளுக்காக ஒரு சிறு அறிமுகம். இளைஞர்களும், இளைஞிகளும் தனக்குப் பிடித்த எதிர்பாலருடன் காரணம் எதுவும் இல்லாமல் பேசிக்கொண்டிருப்பதே கடலையெனப்படுவதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான பெயர்க்காரணம். மெரீனா பீச்சிலோ அல்லது தெருக்களிலோ கடலை விற்பவர்களைப் பார்த்ததுண்டா?. வெறும் டப்பாக்களில் விற்பவர்களல்ல ஈண்டு குறிப்பது. சுடச்சுட மணலுடன் முழுநிலக்கடலையை வறுத்து தள்ளுவண்டியில் இண்ஸ்டண்ட் வியாபாரம் செய்வோர்களே இப்பெயருக்குக் காரணமானார்கள். இவர்கள் வறுக்கும் கடலைக்கும் மக்களின் "கடலைக்கும்" என்ன சம்பந்தம் என்று புரியவில்லையா?. இதோ விளக்கம். கடலை வறுப்பவர்கள் யாராவது பக்கத்தில் குறைந்த பட்சம் அரைகிலோ மீட்டர் சுற்றளவில் எங்காவது இருக்கிறார்களா என்பதை எளிதாய் உணரமுடியும். பல நேரங்களில் கடலை வறுக்கும் வாணலியில் வெறும் மணலைத்தவிர ஏதும் இராது, ஆனால் ஏதோ இருப்பதுபோல் சீரியஸாய் வறுத்துக்கொண்டே இருப்பார்கள். யாராவது மக்கள் அந்த வழியாப்போனால் அவர்களின் கவனத்தைக் கவர்வதற்காகத்தான் இந்த ஏற்பாடு. சும்மா வறுத்தால் பிறர் கவனத்தைக் கவருமளவுக்குச் சத்தம் கேட்காது எனவே வாணலியின் நாலாப்பக்கத்திலும் டிரம்ஸ் போல டங் டங் என்று அவ்வப்போது ஒலியும் எழுப்புவார்கள். ஆனால், வறுப்பதற்கு நிலக்கடலையே அதில் இராது. ஆனாலும் வறுப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது புரிந்திருக்குமே. பெயர்க்காரணம் மிகப் பொருத்தமானதுதான். ஆங்கிலத்தின் இதற்கு இணையான சொல்லாய் "sweet nothing" என்பதைச் சொல்லலாமா?. எதுவுமே இல்லை ஆனாலும் இனிமையாய் இருப்பதே கடலை.&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114420824221751334?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114420824221751334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114420824221751334' title='30 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114420824221751334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114420824221751334'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_05.html' title='கடலை போடுதல் - சிறு குறிப்பு'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>30</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114399744416696982</id><published>2006-04-02T19:20:00.000+02:00</published><updated>2006-04-04T19:34:26.716+02:00</updated><title type='text'>சரத்குமார் திமுகவுக்கு எதிராகிறார் ??</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.behindwoods.com/features/News/News29/14-9-05e/images/tamil-cinema-movies-news-sarathkumar.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 104px; height: 154px;" src="http://www.behindwoods.com/features/News/News29/14-9-05e/images/tamil-cinema-movies-news-sarathkumar.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;ஒரு பக்கம் அதிமுக நட்சத்திரக்கூட்டத்தை ஒவ்வொன்றாய் அதிகரித்துக்கொண்டிருக்க திமுகவில் இருந்து நட்சத்திரங்கள் ஒவ்வொருவராய் குறைந்துகொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது. சினிமா நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் எந்த அளவுக்கு ஓட்டுக்களை அவர் சேர்ந்த கட்சிக்கு அதிகரிப்பார்கள் என்பதே கொஞ்சம் கேள்விதான். இதில் ரஜினி, விஜய்காந்த் போன்ற கொஞ்சம் மவுசுள்ள பார்ட்டிகள் தாம் சார்ந்த கட்சிக்கு ஓட்டுக்களை அதிகமாக்குவார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். மற்றபடி செந்தில், குண்டு கல்யாணம், முரளி போன்ற நடிகர்களின் செல்வாக்கு, அவர்களின் தனிப்பட்ட ரசிகர் பட்டாளத்தின் செல்வாக்கு ஆகியவை முதலில் சொன்ன நடிகர்கள் அளவுக்கு இராது என்பது கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;சரத்குமார் ஒருவகையில் முதலில் சொன்ன வகையைச் சார்ந்தவர்தான். அவருக்கு என தென்மாவட்டங்களில் கொஞ்சம் ஓட்டு வங்கிகள் உண்டு. அதனால்தானோ என்னவோ திமுகவில் அவரால் எம்பி வரை ஆக முடிந்தது. தனது ரசிகர் செல்வாக்கைக் காட்டி மத்திய அமைச்சர் ஆகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தவருக்கு அது முடியாமல் போனதில் கொஞ்சம் ஏமாற்றம். நாடார் சமூகத்தினருக்குத் திமுகவில் சரியான பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்று வெளிப்படையாய்ச் சொல்லிப் பார்த்தும் பலனில்லை. இந்தக் கோபத்தில் கடந்த தேர்தலில் முன்பு செய்ததுபோல் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலாது என்று சொல்லியது திமுக தலைகளை கொஞ்சம் எரிச்சல்படுத்தியிருக்கலாம். தன்னை தொடர்ந்து கண்டுகொள்ளாமல் இருப்பதாய்க் காரணம் காட்டி தனிக்கட்சி தொடங்கவோ அல்லது எதிரணிப்பக்கம் சாயவோகூட அவர் செய்யக்கூடும் போலத்தெரிகிறது. இனிமேல் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவது அவ்வள்வு எளிதல்ல, எனவே எதிரணிப்பக்கம் சாய்ந்தாலும் சாயக்கூடும். ஏற்கனவே கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் ஜெயித்தாலும் தனிப்பெரும்பான்மை அமைக்கத் தேவையான அளவைவிடக் குறைந்த அளவு தொகுதிகள் வந்துவிடுமோ என்று திமுக கவலை கொண்டிருக்க, அதற்குப் புதுப்புதுச் சோதனைகள் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் திமுகவிற்கு இப்போதிருப்பதுபோல் அதிமுகவிற்குக் கவலைகள் குறைவு.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்திய தகவல்களின்படி, சரத்குமார் உடனடியாக திமுகவிட்டு விலக வேண்டும் என்று ரசிகர்கள்(உண்மையாகவா?) அழுத்தம் கொடுக்கிறார்களாம். இன்னும் ஓரிரு நாட்களில் என்ன செய்யப் போகிறார் என்று தெரிந்துவிடும்போலத் தெரிகிறது. அவ்வாறு சரத் வெளியேறும்பட்சத்தில் தென்மாவட்டங்களில் திமுகவிற்கு அது கொஞ்சம் பின்னடைவாகவும், மதிமுக உள்ளிட்ட அதிமுக கூட்டணிக்கு சாதகமாகவும் அமையும்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114399744416696982?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114399744416696982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114399744416696982' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114399744416696982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114399744416696982'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_114399744416696982.html' title='சரத்குமார் திமுகவுக்கு எதிராகிறார் ??'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114396927374007649</id><published>2006-04-02T11:08:00.000+02:00</published><updated>2006-04-05T21:46:04.880+02:00</updated><title type='text'>சிம்ரன் பிரச்சாரம் அதிமுகவுக்கு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4379/219/1600/simran.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4379/219/320/simran.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;அதிமுகவுக்கு ஆதரவாக மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே கிளம்பியுள்ளது ஏற்கனவே நாம் அறிந்ததே. இப்போது புதிதாய் இருவர் அந்த ஜோதியில் ஐக்கியமாகியுள்ளனர். ஒருவர் தமிழ் சினிமாவின் முன்னாள் நம்பர் ஒன் சிம்ரன். மற்றொருவர் விந்தியா. இவர்களில் விந்தியா விஜயகாந்த் கட்சியில் சேர முயன்று முடியாமல் போனவர். எனவே அதிமுகவுக்கு வந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிமுகவுக்கு ஆதரவாய் சிம்ரனின் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இதுவரை அதிமுகவில் சேர்ந்துள்ள நட்சத்திரங்கள்  முரளி, விஜயகுமார், செந்தில், ராதாரவி, எஸ்.எஸ்.சந்திரன், குண்டு கல்யாணம் மற்றும் பலர். ஆக, ஒன்று மட்டும் உறுதி. திமுகவின் பிரச்சாரத்தைவிட அதிமுகவின் பிரச்சாரம் கவர்ச்சியாக, வண்ணமயமாக இருக்கப்போகிறது.&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114396927374007649?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114396927374007649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114396927374007649' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114396927374007649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114396927374007649'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post_02.html' title='சிம்ரன் பிரச்சாரம் அதிமுகவுக்கு'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114392727786966614</id><published>2006-04-01T23:33:00.000+02:00</published><updated>2006-04-02T08:02:17.796+02:00</updated><title type='text'>சிரிக்க மட்டும் - வீடியோ</title><content type='html'>ஜப்பானிய அழகு. இப்படி உலகில் ஏமாந்தவர்கள் எத்தனை பேரோ ?. நீங்களும் ஒருவராய் இருக்க வேண்டாம் என்று ஒரு எச்சரிக்கைக்காகத்தான் இது. :-).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/0o6Ut_ceoXo"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/0o6Ut_ceoXo" type="application/x-shockwave-flash" width="425" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114392727786966614?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114392727786966614/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114392727786966614' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114392727786966614'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114392727786966614'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/04/blog-post.html' title='சிரிக்க மட்டும் - வீடியோ'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114383524430950334</id><published>2006-03-31T21:59:00.000+02:00</published><updated>2006-04-09T03:34:14.466+02:00</updated><title type='text'>சிரிங்க - வீடியோ</title><content type='html'>டைம் என்ன ஆகுது என்று கேட்டவனை இப்படியா குழப்புவது?.  இப்படித்தான் மணி சொன்னேன் எனக் கொஞ்சம் விளக்கமாய்ச் சொல்லக்கூடாதா?. இதென்னடா புது டெக்னிக் என்று குழம்பியல்லவா போனேன். :-))&lt;br /&gt;&lt;object width="425" height="350"&gt;&lt;param name="movie" value="http://www.youtube.com/v/nY-6MKaafdU"&gt;&lt;/param&gt;&lt;embed src="http://www.youtube.com/v/nY-6MKaafdU" type="application/x-shockwave-flash" width="600" height="350"&gt;&lt;/embed&gt;&lt;/object&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114383524430950334?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114383524430950334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114383524430950334' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114383524430950334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114383524430950334'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114383524430950334.html' title='சிரிங்க - வீடியோ'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114365157043617516</id><published>2006-03-29T18:56:00.000+02:00</published><updated>2006-03-31T23:38:55.846+02:00</updated><title type='text'>கார்த்திக் - விஜய்காந்த் கூட்டு</title><content type='html'>தனியாகப் போட்டியிடப்போவதாய்க் கூறிவந்த விஜய்காந்த், பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டு வைக்கப்போவதாய்த் தெரிகிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டுமே வலிமையான நிலையில் உள்ளதால் தனியாய்த் தேர்தலைச் சந்திப்பது அந்தளவுக்கு நல்லதல்ல எனப் பிறர் நினைப்பதாய்க் கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;திமுக, அதிமுக என எந்தக் கட்சிக்கூட்டணியில் சேர்வது எனக் கடைசிவரை குழப்பத்துடன் இருந்து, அதிமுக அழைப்பார்கள் என நம்பியிருந்து நடக்காமல் போனதால்  விஜயகாந்த் கட்சியுடனாவது கூட்டுவைப்பது என்ற முடிவுக்குக் கார்த்திக் வந்துள்ளார். இவர்தவிர இத்தேர்தலில் இலவுகாத்த கிளிகளான திண்டிவனம், விஜய டி.ராஜேந்தர் போன்ற சிலரும் கூட்டணியில் சேரக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயலலிதாவை எதிர்த்துக் கார்த்திக் ஆண்டிபட்டித் தொகுதியில் போட்டியிட உள்ளதால் இந்தக் கூட்டணி அதிக முக்கியத்துவம் பெறும், அல்லது குறைந்தபட்சம் சுவாரசியத்தை அதிகமாக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114365157043617516?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114365157043617516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114365157043617516' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114365157043617516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114365157043617516'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_29.html' title='கார்த்திக் - விஜய்காந்த் கூட்டு'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114335133827355995</id><published>2006-03-26T07:29:00.000+02:00</published><updated>2006-03-29T23:54:16.846+02:00</updated><title type='text'>"ரஜினி கட்சி" உதயம்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/images32/optimized/rajinei-70.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 87px; height: 92px;" src="http://thatstamil.oneindia.in/images32/optimized/rajinei-70.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;"ரஜினி மக்கள் கட்சி" என்ற புதிய கட்சி உதயமாகி உள்ளது. இது அதிமுக விற்கு ஆதரவளிக்கப்போவதாகத் தெரிகிறது. ஒவ்வொரு தேர்தலில் வாய்ஸ் கொடுத்துவந்த ரஜினி இந்தத் தேர்தலில் ஒதுங்கி இருந்ததால் சோர்வடைந்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது புத்துணர்வு கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;காரைக்குடியில் இன்று காலை 10 மணியளவில் மாநில அளவிலான ரஜினிகாந்த் ரசிகர்மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ரசிகர் மன்றத்தினர் காரைக்குடி வந்துள்ளனர். கூட்டத்தில், `ரஜினி மக்கள் கழகம்' என்ற புதிய கட்சியினை தொடங்கி, அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலே நீல வண்ணமும், நடுவில் வெள்ளை நிறமும், கீழே சிவப்பு நிறமும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இக்கொடியின் நடுவில் இந்தியாவின் வரைபடமும், அதில் ஐந்து நதிகள் தமிழகத்தை நோக்கி பாய்வது போலவும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதி பசுமை நிறைந்ததாகவும், அதனை ஒரு கை சுட்டிக் காட்டுவது போலவும் காட்டப்பட்டுள்ளது. நீல நிறம் பரந்த மனதையும், வெள்ளை நிறம் தூய்மையையும், சிவப்பு நிறம் தியாகத்தையும் குறிப்பதாக கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கட்சியின் முதல் தீர்மானமாக வரும் சட்ட மன்றத் தேர்தலில் ர.ம.க அதிமுகவை ஆதரிப்பதாய்த் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. எது எப்படியோ இந்தச் சட்ட மன்றத் தேர்தலுக்கு இன்னொரு கட்சி, தேர்தல் நிலவரம் நன்றாகச் சூடுபிடித்துள்ளது. திமுக கூட்டணிகளின் நடவடிக்கை, ரஜினியின் நடவடிக்கை எப்படி இருக்குமெனப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;a href="http://technorati.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114335133827355995?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114335133827355995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114335133827355995' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114335133827355995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114335133827355995'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_26.html' title='&quot;ரஜினி கட்சி&quot; உதயம்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114332673992461817</id><published>2006-03-25T23:41:00.000+01:00</published><updated>2006-03-26T07:28:51.143+02:00</updated><title type='text'>சிரிக்க மட்டும்..</title><content type='html'>என்னங்க உங்களுக்கு இத்தனை வயசாச்சு.. இன்னும் இப்படிச் சின்னப் புள்ளைங்க போல இப்படி விளையாடுறீங்க..&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://i83.photobucket.com/albums/j291/muthublog/monkey.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://i83.photobucket.com/albums/j291/muthublog/monkey.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114332673992461817?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114332673992461817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114332673992461817' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114332673992461817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114332673992461817'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_25.html' title='சிரிக்க மட்டும்..'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114321379249802540</id><published>2006-03-24T16:12:00.000+01:00</published><updated>2006-04-05T10:43:27.633+02:00</updated><title type='text'>வீரப்பன் மனைவி போட்டி</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://underthefirestar.blogspot.com/photos-04/veerappan.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 122px; height: 140px;" src="http://underthefirestar.blogspot.com/photos-04/veerappan.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;வீரப்பன் மனைவி முத்துலட்சுமி, பாமக சார்பில் பெண்ணாகரம் தொகுதியில் நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிகிறது. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அதை தட்ட மாட்டேன் என்று முத்துலட்சுமியும் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தனக் கடத்தல் வீரப்பனின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி வீரப்பன் மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் என்ற அமைப்பை தொடங்கினார். வீரப்பன் வேட்டையின்போது அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை ஒன்று திரட்டி வந்தார். வீரப்பன் உயிருடன் இருந்தபோதே அவனை பாமகவில் சேர்க்க அக்கட்சி தீவிரமாக முயன்றது. வீரப்பனும் வன்னியர் என்பதால், ஜாதி அடிப்படையில் வீரப்பனை கட்சியில் சேர்க்க பாமக தலைமை முயன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக சரணடைய வருமாறும் வீரப்பனுக்கு தூது விடப்பட்டது. ஆனால் முதலில் இதை ஏற்றுக் கொண்ட வீரப்பன் பின்னர் மனம் மாறி விட்டான். இந் நிலையில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியை பாமகவில் சேர்க்க முயற்சிகள் நடக்கின்றன. சமீபத்தில் திண்டிவனத்தில் நடந்த பாமக மாநாட்டில் முத்துலட்சுமியும் கலந்து கொண்டார். அவரை பெண்ணாகரம் அல்லது மேட்டூர் சட்டசபைத் தொகுதியில் பாமக சார்பில் நிறுத்தவும் முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.இந் நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணியை சமீபத்தில் முத்துலட்சுமி சந்தித்துப் பேசியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து முத்துலட்சுமி கூறுகையில், நான் கொளத்தூரில் ஜி.கே.மணியை சந்தித்தது உண்மைதான். ஆனால் தேர்தலில் நிற்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. எனது குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யுமாறுதான் மணியிடம் கோரிக்கை வைத்தேன். அவரும் செய்வதாக கூறினார். ஆனால் இப்போது தேர்தலில் தீவிர கவனம் செலுத்தி வருவதால் அதுகுறித்து அவர் நினைக்க நேரமிருக்காது என நினைக்கிறேன். நான் தேர்தலில் நிற்க பாமகவிடம் சீட் கேட்கவில்லை. அவர்களும் என்னை அணுகவில்லை. தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை. யோசித்து வருகிறேன். ஆனால் என்னை சந்திக்கும் பொதுமக்கள் தேர்தலில் நிற்க வற்புறுத்துகிறார்கள். பாமக சார்பில் பெண்ணாகரம் அல்லது மேட்டூரில் நிற்கும் வாய்ப்பு வந்தால் அதுகுறித்து அறிவிப்பேன் என்றார் முத்துலட்சுமி.&lt;br /&gt;&lt;br /&gt;வீரப்பன் வேட்டை என்ற பெயரில் அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதல்கள், விசாரணை என்ற பெயரில் நடந்த கொடுமைகளால் பாதிப்படைந்த மக்கள் முத்துலட்சுமியை தேர்தலில் நிற்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். அவர்களது ஓட்டுக்களை அப்படியே அள்ளி எடுக்கும் முயற்சியாக முத்துலட்சுமியை பாமகவிற்குள் இழுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114321379249802540?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114321379249802540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114321379249802540' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114321379249802540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114321379249802540'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_24.html' title='வீரப்பன் மனைவி போட்டி'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114314689254244637</id><published>2006-03-23T21:39:00.000+01:00</published><updated>2006-03-24T18:26:49.126+01:00</updated><title type='text'>சிரிக்க வாங்க</title><content type='html'>எங்க ரெண்டு பேருக்கும் பொழுதுபோகலைன்னா இப்படித்தான் விளையாடுவோம். இதற்காகவே பல இடங்களில் பள்ளம் தோண்டி வைத்திருக்கிறோம். நீங்க யாராவது சேர்ந்துவிளையாட வர்றீங்களா?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://i83.photobucket.com/albums/j291/muthublog/road.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://i83.photobucket.com/albums/j291/muthublog/road.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a href="http://technorati.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D" rel="tag"&gt;தமிழ்ப்பதிவுகள்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114314689254244637?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114314689254244637/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114314689254244637' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114314689254244637'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114314689254244637'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114314689254244637.html' title='சிரிக்க வாங்க'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114312372561153585</id><published>2006-03-23T15:12:00.000+01:00</published><updated>2006-04-05T10:44:15.026+02:00</updated><title type='text'>விஜயகாந்த் - அதிமுக கூட்டு</title><content type='html'>வேலூர் மாவட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள விஜயகாந்த், தனது கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததால் அப்செட் ஆகியுள்ளார். வழக்கமாக விஜய்காந்த் கூட்டங்களுக்கு மக்கள் கூட்டம் கூடி வந்த நிலையில் சில நாட்களாகவே அதில் பெரிய மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. பாமக பெல்ட் எனப்படும் வேலூர் மாவட்டத்தில் 3 நாள் பிரசாரத்தை விஜயகாந்த் புதன்கிழமை காலை தொடங்கினார். முதலில் ஓச்சேரி என்ற இடத்தில் அவர் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவருக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அங்கு பெரிய அளவில் கூட்டம் சேரவில்லை. ரசிகர்கள் மட்டுமே அதிக அளவில் திரண்டிருந்தனர். பொது மக்களில் யாரையும் காணவில்லை. இதனால் விஜயகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். இருந்தாலும் அதை மறைத்துக் கொண்ட அவர் மிக வேகமாக பேசி முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் அவர் என்ன பேசுகிறார் என்பதை விட அவர் பேசுவதை போட்டோ பிடிப்பதிலேயே பாதிப் பேர் தீவிர கவனம் செலுத்தினர். ஓச்சேரி பிரசாரத்தை முடித்துக் கொண்ட கேப்டன், தொடர்ந்து நெமிலி, அரக்கோணம், சோளிங்கர், கலவை, வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிதிப் பிரச்சனையில் கேப்டன்:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே விஜய்காந்தின் கட்சி கடும் நிதிப் பிரச்சனையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மதுரையில் மாநாட்டை சில கோடிகள் செலவில் நடத்திய இதுவரை தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செலவுகளுக்காகவும் சில கோடிகளை இழந்துவிட்டார். இதையடுத்து தேர்தலில் போட்டியிட விரும்பி மனு செய்தவர்களிடமும் மாவட்டச் செயலாளர்களிடமும் தேர்தல் செலவுக்கு பணம் திரட்டிக் கொள்ளுமாறு அவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கட்சி ஆரம்பித்தது முதல் சில சொத்துக்களையும் விற்றுள்ளார் விஜய்காந்த். மேலும் சில சொத்துக்களையும் விலை பேசி வருவதாக செய்திகள் வருகின்றன.&lt;br /&gt;சினிமா மூலம் இனியும் எந்த அளவுக்கு வருமானம் பார்க்க முடியும் என்பது சந்தேகமாக உள்ள நிலையில், சொத்துபணத்தை விற்க வேண்டுமா என்ற கேள்வி விஜய்காந்த் குடும்பத்தாரின் மனதில் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அதிமுக அழைக்கிறதே.. அங்கு போய்விடலாம் என்று விஜய்காந்துக்கு அவர்கள் அட்வைஸ் தந்து வருகின்றனர். இதற்கிடையே விஜய்காந்தின் மனைவி பிரேமலதாவை சசிகலா நேரிலேயே சந்தித்துப் பேசியதாகவும், அப்போது 15 முதல் 18 தொகுதிகள் வரை தர அதிமுக தயார் என்று கூறியதாகவும் தெரிகிறது. ஆனால், வைகோவை விட ஒரு தொகுதியாவது அதிகம் வேண்டும் என கேப்டன் தரப்பு கூறியுள்ளது. ஆனால், 20 தொகுதிகள் வரை தந்தாலே அதிமுக கூட்டணிக்குப் போய்விடுவார் விஜய்காந்த் என்கிறார்கள். அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று விஜய்காந்த் தரப்பு மறுத்தாலும் திரைமறைவில் ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டுள்ளன.&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://thatstamil.oneindia.in/news/2006/03/23/vijaykanth.html"&gt;&lt;br /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114312372561153585?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114312372561153585/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114312372561153585' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114312372561153585'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114312372561153585'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114312372561153585.html' title='விஜயகாந்த் - அதிமுக கூட்டு'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114308882504882844</id><published>2006-03-23T05:38:00.000+01:00</published><updated>2006-04-08T17:42:16.340+02:00</updated><title type='text'>உளவியல் கொஞ்சம்</title><content type='html'>உளவியல் மீது பலருக்கும் ஆர்வம் இருக்கும். நான் சின்ன வயதில் நினைத்ததுண்டு, சைக்காலஜி படித்தவர்களால் அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொல்லிவிடமுடியும், அதனால் நாமும் அதைப் படிக்க வேண்டும் என்று அந்த வயதில் நினைத்ததுண்டு. கொஞ்சம் உளவியல் பற்றிப் படித்த பிறகுதான் தெரிந்தது, அது எவ்வளவு பெரிய தவறான புரிதல் என்று. ஆனாலும் படிக்கும் இயற்பியல், வேதியியலைவிட அது வாழ்க்கைக்கு நேரடியாய் அதைக் கற்றவருக்கு உதவும் என்பது மிகவும் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;உடலில் வரும் நோய்களின் எண்ணிக்கைக்குக் கணக்கே இல்லை. அதுபோல்தான் மனதுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கையும்.  இந்த இருநோய்களையும் நேரடியாகவே ஒப்பிட முடியும். சாதாரண தலைவலி, காய்ச்சல் போன்ற சில அடிக்கடிவரும் ஆபத்தில்லா மனநோய்களும் உண்டு. நமக்கு அடிக்கடிவரும் டென்சன், கோபம் அதனால் வரும் உடல் தளர்வு ஆகியவை எல்லாம் இந்த வகையைச் சார்ந்ததுதான். உடல் நோயாய் இருந்தாலும், மனநோயாய் இருந்தாலும் அது நம் உடலையும், இயல்பு வாழ்க்கையும் வெகுவாகவே பாதிக்கிறது. ஆனால், உடலில் நோய் இருந்தால் அது ஒருவர் புத்திசாலியாய் இருப்பதை எவ்வாறு நேரடியாய்ப் பாதிப்பதில்லையோ அதேபோல் மனநோயாளிகளும் புத்திசாலிகளாயும், அதிபுத்திசாலிகளாயும், வெற்றிபெற்ற மனிதர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம் சொல்லும் முன்னர் சுதந்திரம் பற்றிய ஒரு பொன்மொழியைச் சொல்லியாக வேண்டும். "நீ சொல்வதை நான் ஏற்கவில்லை, ஆனால் அதை சொல்வதற்கான உனது உரிமையைக் காக்க என் உயிரையும் கொடுப்பேன்". இதைச் சொன்னவர் பெரிய சிந்தனையாளர். அடுத்தவர் சொல்லும் ஒன்று தன்னால் ஏற்கமுடியாதது என்றாலும் அதைச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்று ஒத்துக்கொள்வது, அத்துடன் நில்லாமல் அவரின் அந்த உரிமையைக் காக்க உயிரையையும் கொடுக்கத் தயாராக இருப்பது. இது மிக உயர்ந்த வகைச் சிந்தனை, செயல்பாடு.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரணமாய், அடுத்தவர் சொல்வது நமக்கு ஒப்பில்லையென்றால், அதை அவ்வளவாய்க் கண்டுகொள்வதில்லை, இது சாதாரண வகை. இன்னொரு வகை உண்டு, அது கொஞ்சம் தீவிரமானது. ஒருவர் சொல்வதில் ஒப்பில்லையென்றால் அவருடன் பகைமை பாராட்டுவது, தமக்கு நெருங்கியவர்களிடம் அந்த ஒப்புமை இல்லாத நபரிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாதீர்கள் என்று சொல்வது, இன்னும் நெருங்கியவராயிருந்தால் தொடர்பே கூடாதென கட்டாயப்படுத்துவது. இது ஒரு அப்பட்டமான வன்முறை. ஆனால், இதை இந்த வன்முறையை எல்லாரிடமும் செய்ய இயலாது, மிக நெருங்கியவர்களிடம் மட்டுமே இதைச் செய்ய இயலும், கட்டாயப்படுத்த முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அடுத்த கட்டத்துக்கு வருகிறேன். இது ஒருவகை மனநோய். இதன் துல்லியமான சைக்கலாஜிகல் டெர்மினாலஜிகல் பெயர் நினைவில்லை, ஏதோ சிண்ரோம் அல்லது டிஸார்டர் என்று வரும். உங்களில் பலருக்கு இந்த நோயை நம்பவே இயலாது. மேலே கூறிய வன்முறையைவிடக் கொடுமையானது. ஒருவர் சொல்வதில் அல்லது செய்வதில் தமக்கு ஒப்புமை இல்லாவிட்டாவிட்டால் அவருக்குத் தீங்கு செய்வது. இது மனநோயின் ஆரம்பக்கட்டம். கொஞ்சம் முற்றிய நோயாய் இருந்தால் - சில ஆண்டுகள் பழைய நோயாய் இருந்தால், ஒப்புமையில்லாத நபருடன் தமக்கு நெருங்கியவர் தொடர்பு வைத்திருப்பதற்காக அவரிடம் பேசுவதைக் குறைத்துக் கொள்வார், நிறுத்திக்கொள்வார், சில நேரம் நெருங்கியவருக்கேத் தீங்கும் செய்வார். இதை நம்பமுடியாது என்று நினைக்காதீர்கள். முற்றிய நோயாளியாய் இருந்தால், முன்னால் சொன்னதைப் போல் நெருங்கியவருடன் அது நிற்காது. இது அதையும் தாண்டிக்..... கொடூடூடூ...ரமானது. தமக்கு முகமே தெரியாதவர்களிடமும் இது நீளும். தமக்கு ஒப்புமை இல்லாத ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தால் நோயாளியால் கொஞ்சமும் தாங்கிக்கொள்ள இயலாது. நெருங்கியவராய் இருந்தால் நேரடியாய்ச் சொல்லிவிடுவார். எனக்குச் ஜான் கொஞ்சமும் பிடிக்காது. அவனுடன் எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளாதே என. யாரெனத் தெரியாதவர்களிடமும் இதை நீட்டிப்பார். முகந்தெரியாதவர்களிடம் முதலில் மறைமுகத்தாக்குதல் செய்வார். ஒருநாள் அவர் தனியாய் வந்தால் இருட்டில் இருந்து கல்லால் அடிப்பார். முடியாவிட்டால் வேறு மறைமுகமான முறையில், தான் யாரென்பதைக் காட்டாமல் தாக்குதலில் ஈடுபடுவார். எதுவெல்லாம் தான் யாரென்பதைக் காட்டாமல் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அது அத்தனையையும் செய்வார். இத்தனைக்கும் அவருக்கும் இவருக்கும் எந்தச் சம்பந்தமும் இராது, முன்பகையும் இராது. எதுவும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மொட்டைக் கடுதாசியாவது போடுவார். ஆனால், அதனால் வரும் பின்விளைவுகள் பற்றிக் கொஞ்சம் கவனமாய் இருப்பார், அச்சப்படுவார். அதனால் தான் யாரெனக் காட்டிக்கொள்ளவே மாட்டார். தாக்கப்படுபவர் கருப்பா சிவப்பா என்றுகூட அந்த மனநோயாளிக்குத் தெரிந்திராது, அதுபற்றியெல்லாம் அவருக்குக் கவலை இல்லை, அந்த ஒப்புமையில்லாதவருடன் தொடர்பு வைத்தது கொலைக்குற்றம் போலவே நமது மனநோயாளி கருதுவார். ஆனால் அதன் பின்விளைவு பற்றிய உணர்வு இருக்கும். உங்களால் நம்ப முடிகிறதா?. இதற்கே அசந்துவிடாதீர்கள், குணப்படுத்தமுடியாத அளவுக்கு முற்றிய நிலையும் உண்டு. அதைக் கேட்டால் மயங்கியே விழுந்துவிடுவீர்கள். இக்காரணத்துக்காய் முகந்தெரியாதவரிடம் தான் யாரென்பதைக் காட்டியே நேரடியாகத் தாக்குவார். அதன் பின் விளைவைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படமாட்டார். கத்தியையோ அல்லது துப்பாக்கி எடுத்து அறிமுகமில்லாத ஒருவரை நேருக்கு நேராய்த் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது நினைத்துப்பார்க்க முடிகிறதா?. அறிமுகமில்லாத ஒருவரை, நெருங்கிய ஒருவரை உப்புச்சப்பில்லாத காரணத்துக்காய் கொலை செய்த மனநோயாளிகள் எத்தனையோ பேர் உண்டு. காரணம் என்னவென்று பார்த்தால் இதுபோல் குணப்படுத்த முடியாத அளவுக்கு ஒரு டிஸார்டரால் பாதிக்கப்பட்டிருந்திருப்பார். அவர் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு உள்ளாக்கியிருந்தால் அந்த அளவுக்குப் போயிராது.&lt;br /&gt;&lt;br /&gt;பொன்மொழி சொல்லும் வகையைச் சார்ந்தவர்கள் அதிகம் உள்ள சமுதாயம் மிக ஆரோக்கியமானது. நாத்திகப் பெரியாரும், தீவிர ஆத்திக ராஜாஜியும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தது இதனால்தான். காந்தியும், ஜின்னாவும் கூட நல்ல நண்பர்களே. இது மிக ஆரோக்கியமான ஒன்று. கடைசியில் உள்ள வகையைச் சேர்ந்தவர்கள் தனியாகப் பிரித்துவைக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் பெரும்பாலும் அதிக எண்ணிக்கையில் இருப்பதில்லை. சங்கிலியால் கட்டிப் போட்டிருப்பார்களே அந்த வகை. எளிதாய்க் கண்டுணர முடியும். அதற்கும் கொஞ்சம் முன்னால் உள்ள மனநோயாளிகள் சுதந்திரமாக உலாவிக்கொண்டிருப்பவர்கள். எளிதாய் உணர முடியாதவர்கள். இவர்களும் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதில்லை, அரிதாகத் தட்டுப்படுபவர்களாய் இருப்பார்கள். ஆனாலும் விபத்துபோல அவர்களிடம் சிக்கிக் காயம்பட்டவர்களும், உயிரைவிட்டவர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இதில் எந்த வகை மனிதர்களையெல்லாம் பார்த்திருக்கிறீர்கள்?. உங்கள் நண்பர்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114308882504882844?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114308882504882844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114308882504882844' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114308882504882844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114308882504882844'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114308882504882844.html' title='உளவியல் கொஞ்சம்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114305316157004096</id><published>2006-03-22T19:45:00.000+01:00</published><updated>2006-03-31T15:21:22.690+02:00</updated><title type='text'>பிரஷர் குக்கர் பாம்-பயப்படாதீங்க</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4379/219/1600/Cooker.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4379/219/320/Cooker.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இங்கே வரும்போது மறக்காமல் கொண்டு வந்த ஒரு பொருள் நம்ம ஊரு "பிரஸ்டீஜ்" பிரஷர் குக்கர். தமிழ் மக்கள் யாருக்கும் ஒரு வாரம் சோறு கொடுக்காம வெறும் ரொட்டி, பீஸா, பிரட்.... இப்படியே கொடுத்தால் அவரின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இங்கே வரும்போது இதைக் கருத்தில்கொண்டே கைவசம் பிரஷர் குக்கருடன் இறங்கினேன். கிட்டத்தட்ட தினமும் பயன்படுத்தும் பொருட்களில் இதுக்குத்தான் முதலிடம், மூளையெல்லாம் கூட அடுத்துத்தான் :-).&lt;br /&gt;&lt;br /&gt;பிரஷர் குக்கர் வச்சு சமைக்குறதுல நமக்கு நிறைய வசதி இருந்தாலும் இந்த ஊர் மக்கள் ஏன் இப்படிப் பயப்படுறாங்கன்னு தெரியலை. கிட்டத்தட்ட எல்லோருமே பயப்படுறாங்க. நான் சமைக்க குக்கரைத் தொட்டாலே "டைம் பாம்" லெவலுக்குப் பயப்படுறாங்க ஏனென்றே புரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நான் குக்கரை அடுப்பில் வைத்திருப்பதைக் கவனிக்காமல் அந்த சீனத்தோழி பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கும்ப்போதுதானா திடீரென எனது பிரஷ்டீஜ் குக்கர் விசில் அடித்துத் தொலைக்க வேண்டும்?. அடுத்தவிநாடி என் பக்கத்தில் யாருமே இல்லை. குறைந்தது 20 அடிதூரத்துக்கு ஒரு ஆளையும் காணோம்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114305316157004096?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114305316157004096/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114305316157004096' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114305316157004096'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114305316157004096'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114305316157004096.html' title='பிரஷர் குக்கர் பாம்-பயப்படாதீங்க'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114295259825289702</id><published>2006-03-21T15:42:00.000+01:00</published><updated>2006-03-21T17:35:21.973+01:00</updated><title type='text'>கொஞ்சம் சிரிங்க</title><content type='html'>மிஸ்டர் லிட்டில் சிக்கன், உங்க ஷூ் சைஸ் என்ன?. உங்களுக்கு என ஸ்பெஷலா ஆர்டர் கொடுத்துச் செய்தீர்களோ?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://i83.photobucket.com/albums/j291/muthublog/shoesize.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://i83.photobucket.com/albums/j291/muthublog/shoesize.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;உங்களோட ஒன்றுவிட்ட தாத்தாவுக்கு ஜுரம் என்று சொன்னார்களே. இப்ப சரியாகி விட்டதா?. கவனமா இருக்கச் சொல்லுங்க, பறவைக்காய்ச்சலா இருக்கப்போகுது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114295259825289702?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114295259825289702/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114295259825289702' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114295259825289702'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114295259825289702'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114295259825289702.html' title='கொஞ்சம் சிரிங்க'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114293768833189465</id><published>2006-03-21T11:36:00.000+01:00</published><updated>2006-03-21T14:30:32.183+01:00</updated><title type='text'>பாரதியாரும் நானும்</title><content type='html'>நான் படித்த பெரும்பாலான புத்தகங்கள் 15 வயதுக்குள் படித்தவையாகத்தான் இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. எனக்கு எழுதப்படிக்கத் தெரிந்ததிலிருந்து பதினாறு பதினேழு வயது வரை புத்தகங்கள் மீது அப்படி ஒரு பைத்தியம். எங்கள் ஊரில் நூலகம் என்று எதுவும் இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்திலிருந்த அந்தப் பக்கத்து ஊர் நூலகம் உலகிலேயே மிகப்பிடித்தமான இடங்களுள் ஒன்றாக அந்த வயதில் இருந்தது (அந்த வயதில் உலகில் வேறு எந்த இடத்துக்குப் போயிருக்கிறாய் என்று யாரும் தயவு செய்துகேட்காதீர்கள்). &lt;br /&gt;&lt;br /&gt;முதன்முதலில் அந்த நூலகத்துக்குப் போகும்போது எனக்கு ஒரு எட்டு வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வயதில் அந்த நூலகம் மீது அப்படி ஒரு ஈர்ப்பு எப்படி வந்ததோ தெரியவில்லை. அன்றைக்கு அந்த நூலகத்தில் இருந்த புத்தகங்கள் ஆறாயிரத்துக்கும் குறைவாய் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்றாவது ஒருநாள் அங்குள்ள அத்தனை புத்தகத்தையும் படித்துவிட வேண்டும் என்பதே அந்தக்காலத்திய லட்சியமாய் இருந்தது. ஆனால் முடியவில்லை :-(. எப்படியும் ஒரு ஆயிரத்தைத் தாண்டியிருப்பேன் என்று நினைக்கிறேன். எனக்குக் கிடைத்த பெரிய அதிர்ஷ்டங்களுள் ஒன்றாய் அந்த நூலக அறிமுகம் கிடைத்ததைக் கருதுவேன்.  பையன் பாடப்புத்தகத்தைப் படிக்காமல் இப்படி உருப்படாமல் கதைப் புத்தகங்களைப் படிக்கிறானே என்று வீட்டில் அம்மாவிடம் வாங்கிய திட்டுகளுக்குக் கணக்கே இல்லை. பக்கவீட்டுப் பையன்களுடன் விளையாடும் எனது தம்பிகளுக்கு அதற்காய் அவ்வளவாய்த் திட்டுகிடைத்ததேயில்லை, புத்தகம் படித்த எனக்கு மட்டும்தான் எதிர்ப்பு. விடுமுறையாய் இருந்தால் சாப்பிடும் நேரத்தில் மட்டுமே என்னை வீட்டில் பார்க்க முடியும், எப்படியாவது வீட்டில் அனைவருக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு நைஸாய் நழுவிவிடுவது அப்போது எனக்குக் கைவந்தகலை.&lt;br /&gt;&lt;br /&gt;எந்தப் புத்தகத்தை எடுத்தாலும் முழுமையாக வாசிக்காமல் விடுவதில்லை என்பது அன்று பழக்கமாகவே இருந்தது. அந்த வயதில் சில புத்தகங்களைப் படித்தபோது மிகவிநோதமாகத் தோன்றும், பாரதியாரின் கண்ணன் பாட்டு அதில் ஒன்று,  பாரதியார் ஏன் இப்படிக் கொஞ்சமும் அர்த்தமில்லாமல் எழுதியிருக்கிறார், நாம் எழுதியிருந்தால் இதைக் கொஞ்சம் நன்றாய் எழுதியிருப்போமே என்று அந்தப் பன்னிரண்டு வயதில் நினைத்ததுண்டு, (யாரும் டென்சனாகிவிடாதீர்கள், சின்னப்பையன்தானே மன்னித்துவிட்டுவிடுங்கள் :-) ). நான் முதன்முதலாய்க் கவிதை எழுதியபோது பத்து வயதிருக்கும் என்று நினைக்கிறேன், (யாரும் வெண்பா, வஞ்சிப்பா வகையாய் இருந்திருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள், "புதுக்கவிதை"தான், அந்த வயதில் எனக்கே அது வெகுசுமாரான ஒன்றாய்த்தான் தெரிந்தது, அந்தக் காகிதமெல்லாம் இப்போது எங்கே போனதோ தெரியவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைக்கு வலைப்பூவில் ஏதோ நாலு வரி தமிழில் எழுதமுடிகிறது என்றால் அதற்கு அந்த வயதில் படித்த புத்தகங்களே காரணம். ஆனால் தமிழ்ப்புத்தகங்கள் என்ற சின்ன வட்டத்துக்குள்ளேயே அன்று நின்றிருந்தது இப்போது நினைத்தால் கொஞ்சம் வருத்தமான விஷயமாய்த்தான் இப்போது தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114293768833189465?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114293768833189465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114293768833189465' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114293768833189465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114293768833189465'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114293768833189465.html' title='பாரதியாரும் நானும்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114292782093280773</id><published>2006-03-21T08:50:00.000+01:00</published><updated>2006-03-22T20:46:16.223+01:00</updated><title type='text'>பாருங்க... சிரிங்க...</title><content type='html'>இவ்வளவு வேகமாப் போகாத போகாதன்னு படிச்சுப் படிச்சுச் சொன்னாலும் இந்த டிரைவர் கேட்டாத்தான.., இப்ப பாதி வண்டி எங்க விழுந்துச்சோ தெரியலையேஏஏஏஏ...&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://i83.photobucket.com/albums/j291/muthublog/van.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://i83.photobucket.com/albums/j291/muthublog/van.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114292782093280773?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114292782093280773/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114292782093280773' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114292782093280773'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114292782093280773'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114292782093280773.html' title='பாருங்க... சிரிங்க...'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114288280411865221</id><published>2006-03-21T05:49:00.000+01:00</published><updated>2006-03-21T08:24:10.750+01:00</updated><title type='text'>புதுசு.. இது புதுசு...</title><content type='html'>"முத்து" என்ற பெயரில் ஒரு தளப்பெயரைப் பதிவு செய்யனும் அப்படின்னு ரொம்ப நாளா நினைச்சுக்கிட்டே இருந்தேன்.  ஆனால் எங்க போனாலும் அந்தப் பெயரை வேற யாராவது ஏற்கனவே எடுத்திருக்காங்க. மின்னஞ்சல் முகவரிகூட அதுபோல் உருவாக்கிக்க முடியலை. கூகிள் மெயில் ஆரம்பிச்சப்ப அப்பெயரில் ஐடி வச்சுக்கலாமேன்னு போனா பேரு ரொம்ப சின்னதா இருக்கு முடியாது அப்படிங்குது. ஒருவழியாய் இலவசமாகவே முத்து அப்படிங்கற பெயரில் ஒரு தளத்தைப் பதிவு செய்திருக்கிறேன். எப்படி இவ்வளவு நாளா மக்கள் விட்டிருந்தாங்கன்னு தெரியலை. இனிமே என்னோட வலைப்பதிவுக்கு &lt;a href="http://muthu.tk"&gt;www.muthu.tk&lt;/a&gt; என்ற முகவரியிலும் வரலாம், அதுக்காக பழைய பிளாக் ஸ்பாட் முகவரியை மாற்றிவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். அதுபாட்டுக்கு அது, புதுசா இது. அதுமட்டுமில்லாம இனிமே எனக்கு மின்னஞ்சல் அனுப்ப comments@muthu.tk என்ற எனது சொந்த முகவரிக்கே நீங்கள் அனுப்பலாம். பாருங்க...  ஞாபகம் வச்சுக்க எவ்வளவு ஈசி. உங்க யாருக்காவது இதுபோல் உங்கள் பெயரிலோ அல்லது விருப்பமான பெயரிலோ தளப்பெயர் வேண்டுமென்று நினைத்தால் .tk யில் இலவசமாகவே உருவாக்கிக்கொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114288280411865221?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114288280411865221/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114288280411865221' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114288280411865221'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114288280411865221'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_21.html' title='புதுசு.. இது புதுசு...'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114288065736080132</id><published>2006-03-20T19:47:00.000+01:00</published><updated>2006-03-21T17:01:43.490+01:00</updated><title type='text'>திருட்டு  "தம்"  தப்புங்க..</title><content type='html'>புகைத்தல் உடலுக்குக் கெடுதி. மனிதர்களுக்கு மட்டுமல்ல.. பூனையாரே உங்களுக்கும்தான். ஆனா இப்படி நீங்க திருட்டு தம் அடிக்கிறது &lt;a href="http://thulasidhalam.blogspot.com/"&gt;துளசியக்காவுக்கு&lt;/a&gt; எப்பவுமே தெரியாதுன்னு தப்பா நினைக்காதீங்க, ஒருநாள் கையும் களவுமா சிக்கப்போறீங்க.&lt;br /&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://i83.photobucket.com/albums/j291/muthublog/smoker.gif"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px;" src="http://i83.photobucket.com/albums/j291/muthublog/smoker.gif" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114288065736080132?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114288065736080132/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114288065736080132' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114288065736080132'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114288065736080132'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_114288065736080132.html' title='திருட்டு  &quot;தம்&quot;  தப்புங்க..'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114283695409716781</id><published>2006-03-20T07:30:00.000+01:00</published><updated>2006-03-20T09:03:06.953+01:00</updated><title type='text'>உங்களுக்கும் பிடித்திருக்கலாம்</title><content type='html'>உலகத்தில் பலருக்கும் பல விஷயங்கள் பிடிக்கின்றன. பல விஷயங்களிலும் சில பிடிக்கின்றன. காரணமே இல்லாமல் சில பிடிக்காமல் போவதுமுண்டு. எனக்கு மிகவும் பிடித்த சில.&lt;br /&gt;&lt;br /&gt;நகைச்சுவை, சிரிப்பு, புன்னகை&lt;br /&gt;குழந்தைகள்&lt;br /&gt;நண்பர்கள்&lt;br /&gt;புத்தகங்கள், கலைகள்&lt;br /&gt;&lt;br /&gt;பிடித்தவை என்று பட்டியல் போட்டால் மிகப் பெரிதாய் வரும், குறைந்த பட்சம் மேலே உள்ளதை மட்டுமாவது சொல்ல முயற்சிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவரை மனம் மகிழ்ந்து சிரிக்க வைக்கும் அனைவரும், அனைத்துமே எனக்குப் பிடிக்கும். சிரிக்கச் சிரிக்கப் பேசும் நண்பர்கள் ( நண்பிகளும்தான் ;-) ). நகைச்சுவைத் துணுக்குகள், கடிகள், கார்ட்டூன்கள்,  நகைச்சுவைக் கதைகள்,  என&lt;br /&gt;அனைத்துமே பிடித்தமான வகையைச் சார்ந்தவைதான். தெனாலி ராமன், பீர்பால், முல்லா என அனைத்து நகைச்சுவைக்கதைகளும் பிடிக்குமெனச் சொல்லவே வேண்டியதில்லை. படங்களில்கூட நகைச்சுவைப் படங்களே எனது முதல் சாய்ஸ்.  இதேபோல் அலைவரிசை ஒத்த நண்பர்களுடன் பேசும்போது யாரும் அருகில் இருந்தால் அவர்கள் கதி அதோ கதிதான். நானும் என் நண்பனும் ஒரு நாள் பேசிப் பேசி சிரித்ததைக் கேட்டு, எனது  பக்கத்துவீட்டுக்காரர் நடுங்கியதே இதற்குச் சாட்சி, இரவு பத்து மணிக்குமேல்  தான் வீட்டில் தனியாக இருக்கும்போது திடீர் திடீர் என வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்டால் பாவம் அவர் வேறு என்ன செய்வார் ?.&lt;br /&gt;&lt;br /&gt;என்னடா இவன் திடீரென இவனுக்குப் பிடித்தது என ஆரம்பிக்கிறானே என யாரும் குழம்பமாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். நண்பர் &lt;a href="http://kozhundu.blogspot.com/"&gt;சாம்&lt;/a&gt; சங்கிலித் தொடருக்கு என்னை அழைத்திருக்கிறார். அவருக்கு நன்றி. மற்ற பிடித்த விஷயங்களையும் சீக்கிரமே எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114283695409716781?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114283695409716781/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114283695409716781' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114283695409716781'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114283695409716781'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_20.html' title='உங்களுக்கும் பிடித்திருக்கலாம்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114261068575776367</id><published>2006-03-17T16:42:00.000+01:00</published><updated>2006-03-27T07:29:18.690+02:00</updated><title type='text'>அமானுஷ்யங்கள்</title><content type='html'>சின்ன வயதிலிருந்தே எனக்கு அறிவியல் மீது எவ்வளவு ஆர்வம் உண்டோ அதே அளவுக்கு அறிவியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் மீதும் ஆர்வம் உண்டு. நேரடியாய்ப் பெரியது ஒன்றையும் கண்டதில்லை, சோதிடத்தை அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று முழுவதுமாய் ஒதுக்க முடியுமா என்று தெரியவில்லை, அதில் சில அனுபவங்கள் உண்டு,  சின்ன வயதில் - ஒரு 15 வயதிருக்கும் அப்போது. எனது ஜாதகத்தை வைத்து அவர் எனக்கு, எனது மாமாவுக்கு, என்னுடைய தாத்தாவின் அப்பாவுக்கு, எனது வீடு தாண்டி 6 ஆம் வீட்டிலிருப்பவருக்கு என ஆச்சரியப்படும், யூகிக்க முடியாத கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என பலவற்றைச் சொன்னார். கொஞ்சமும் நம்பமுடியாத, எனக்குத் தெரிந்த அறிவியல்படி புரிந்துகொள்ள முடியாத நிகழ்வு அது.  ஆனால் அது முழுக்க உண்மை. சோதிடத்தை அமானுஷ்யம் என்று சொன்னால் சோதிடர்கள் பலர் கோபங்கொண்டு சண்டைக்கு வரலாம், சரி இருக்கட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர கிட்டத்தட்ட அதே 15 வயதில் சில நண்பர்களுடன் சேர்ந்து ஆவிகளுடன் பேச முயன்ற எனது முயற்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் அது பற்றி நேரடி அனுபவங்களைப் பலரிடம் கேட்டதுண்டு. நமது &lt;a href="http://etamil.blogspot.com/2004/03/blog-post_108059810895335700.html"&gt;பாஸ்டன் பாலா&lt;/a&gt;  மற்றும் பக்கா பகுத்தறிவு பேசும் நண்பர் காஞ்சிபிலிம்ஸ் (அவர் அந்த வலைப்பதிவை மூடிவிட்டார்) ஆகியோரும் இதில் அடக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைத் தவிர சம்பந்தமேயில்லாமல் திடீரெனத் தோன்றிய விசித்திர எண்ணங்கள், அப்படியே கொஞ்சநேரத்தில் நடந்து ஆச்சரியப்படுத்தியதுண்டு. மேலும் இது நடக்கப்போகிறது என  நெருக்கமானவர்கள் சொன்னவை பல அப்படியே நடந்ததுண்டு, சில தவறியதுமுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நமது நண்பர் &lt;a href="http://murugapoopathi.weblogs.us/archives/37"&gt;முருகபூபதி&lt;/a&gt;  கொஞ்ச நாளைக்கு முன்னால் அவருக்கு நிகந்த நிகழ்வொன்றைச் சொல்லியிருக்கிறார். நான் இதுபோல் கேள்விப்படுவது முதல் முறையல்ல, இதை நான் இரண்டாம் முறையாகக் கேள்விப்படுகிறேன். கொஞ்ச நாளைக்கு முன்னால்வரை ஜெர்மனியில் எனக்கு அருகில் இருந்த எனது நண்பரொருவருக்கு இதே அனுபவம் அப்படியே ஏற்பட்டது,  சம்பவம் நடந்தபோது அவர் அருகில் நான் இல்லை, அவர் சொல்லித்தான் நடந்தது எனக்குத் தெரியும். கிட்டத்தட்ட முருகபூபதிக்கு ஏற்பட்டது அப்படியே நடந்தது, அவர் யாரென சொல்லிக்கொள்ளவே இல்லை. மிகவும் வற்புறுத்திக் கேட்டபோது ஏதோ பெயர் சொன்னாராம், முருகபூபதி சொன்ன அதே பெயர்போல்தான் இருந்தது, ( நண்பர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார், திரும்பவும் அவரிடம் அந்தப் பெயரைக் கேட்டுச் சொல்கிறேன்). இதில் விஷேசம் என்னவென்றால் எனது நண்பர் சென்றது புனைப்பெயரில், அவரின் அந்தப் புனைப்பெயர் பற்றி அவருக்குத் தெரிந்த நண்பர்கள் யாருக்கும் தெரியாது. ஒருவேளை தெரிந்தவராக இருந்துவிட்டாலும் நண்பருக்கு மட்டும் தெரிந்தவற்றை அவரால் எப்படிக்கூறமுடியும்??. ஆனால், அந்த மர்மநபர் சொன்ன அனைத்தும் உண்மை, அத்தனை பேரில் ஏன் அந்த நண்பரை மட்டும் தெர்ந்தெடுத்துப் பேசினார் என்று ஆரம்பித்து வரும் பல கேள்விகளுக்கும் பதிலே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் உலகத்தில் அதுவும் அறிவியல் ஆய்வில் இருக்கும் ஒருவனே,  இதுபோல்  &lt;a href="http://muthukmuthu.blogspot.com/2005/04/blog-post.html"&gt;பகுத்தறிவுக்குச் சம்பந்தமில்லாத&lt;/a&gt; மூடநம்பிக்கைகளைப் பரப்புவதா என்று நம் நண்பர்கள் சிலர் என்மேல் பாயக்கூடும் என்பதை நன்றாக அறிந்தே இதைப் பதிக்கிறேன் :-)).&lt;br /&gt;&lt;br /&gt;சரி. இதேபோல் நம் நண்பர்கள் யாருக்காவது மிக அதிசயமான நிகழ்வுகள், அறிவியல்படி புரிந்துகொள்ள முடியாத நிகழ்வுகள் நடந்ததுண்டா ? என்று அறிந்துகொள்ளவும் ஆசை.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114261068575776367?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114261068575776367/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114261068575776367' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114261068575776367'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114261068575776367'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_17.html' title='அமானுஷ்யங்கள்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114252952060101615</id><published>2006-03-16T18:16:00.000+01:00</published><updated>2006-03-17T17:33:29.003+01:00</updated><title type='text'>பிறப்பு விகிதம் - அபாயத்தில்</title><content type='html'>எதிர்பார்த்ததைவிடவும் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருகிறது. இது கவலைதரும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளதாய்ச் செய்திகள் கூறுகின்றன. மக்கள்தொகை பற்றி சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்று இதை வெளிப்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் 2050 ல் இன்று இருக்கும் குழந்தைகளைப்போல் பாதிதான் அன்று இருக்குமாம். உடனே அவசரப்பட்டு இது இந்தியாவிலா என்று நினைத்துவிட வேண்டாம். இது ஜெர்மனியைப் பற்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.spiegel.de/wirtschaft/0,1518,406190,00.html"&gt;ஸ்பீகல்&lt;/a&gt; என்ற இணைய இதழில் வந்த கட்டுரை இங்கே. இது ஜெர்மனில் இருப்பதால் &lt;a href="http://translate.google.com/translate?u=http%3A%2F%2Fwww.spiegel.de%2Fwirtschaft%2F0%2C1518%2Cdruck-406190%2C00.html&amp;langpair=de%7Cen&amp;amp;amp;hl=en&amp;ie=UTF-8&amp;amp;oe=UTF-8&amp;amp;prev=%2Flanguage_tools"&gt;ஆங்கிலத்துக்கு மாற்றிக்கொள்ள&lt;/a&gt; விரும்புவர்கள் கூகிள்துணையுடன் படிக்கலாம். சில மாநிலங்களில் பிறப்புவிகிதம் உலகிலேயே மிகக் குறைவான அளவாய் உள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ளும் விருப்பமுடைய பெண்களும், பெற்றோர்களும் குறைந்துகொண்டே வருவதற்கு வேலையில்லாத் திண்டாண்ட விகிதம் அதிகரித்துவருவதே முக்கியக் காரணம் என்று கருதுகிறார்கள் ( அப்படிப் பார்த்தால் இந்தியாவில்...?). நிலையான மக்கள்தொகை இருக்க குறைந்தபட்சம் 2.1 பிறப்பு விகிதம் இருந்தாக வேண்டும். ஜெர்மனியில் அதைவிடவும் மிகக்குறைந்த பிறப்புவிகிதம் இருப்பதே கவலைப்படும் நிலையை உருவாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டுரையில் இல்லாத, எனது சொந்தக் கருத்து ஒன்று இங்கே. இந்த அளவுக்குப் பிறப்பு விகிதம் இருப்பதற்குக்கூட துருக்கி மக்கள் இங்கே அதிகம் பேர் குடியுரிமை பெற்றிருப்பது காரணமாய் இருக்கலாம், இல்லாவிட்டால் இதைவிடவும் குறைவாகவே பிறப்புவிகிதம் இருந்திருக்கும். இதைப் பற்றி இன்னொரு முறை எழுத நினைத்திருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114252952060101615?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114252952060101615/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114252952060101615' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114252952060101615'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114252952060101615'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_16.html' title='பிறப்பு விகிதம் - அபாயத்தில்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114239377382930074</id><published>2006-03-15T04:35:00.000+01:00</published><updated>2006-04-02T17:17:00.400+02:00</updated><title type='text'>செந்தில் - கருணாநிதி போட்டி ??</title><content type='html'>நடிகர் செந்தில் கருணாநிதிக்குச் சவால் விட்டுள்ளார். அவரை எதிர்த்து கருணாநிதி போட்டியிட்டால் என்ன நடக்குமென்று சொல்லியுள்ளார். டெபாசிட் போய்விடுமென்று தெளிவாகவே சொல்லியுள்ளார், ஆனால் யாருக்கு என்று சரியாக சொல்லவில்லை. எது எப்படியோ, செந்தில் நல்ல நகைச்சுவை நடிகர்தான், ஆனால் அதற்காய் தேர்தல் பிரச்சாரத்தில் தனது நகைச்சுவை உணர்வை &lt;a href="http://thatstamil.oneindia.in/news/2006/03/14/senthil.html"&gt;இப்படிக்காட்டுவது &lt;/a&gt;நன்றாகவா இருக்கிறது :-).&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114239377382930074?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114239377382930074/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114239377382930074' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114239377382930074'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114239377382930074'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post_15.html' title='செந்தில் - கருணாநிதி போட்டி ??'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114210736330387745</id><published>2006-03-11T21:00:00.000+01:00</published><updated>2006-03-11T21:02:43.320+01:00</updated><title type='text'>தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வருது..?</title><content type='html'>தமிழக அரசியலைப் பொறுத்தவரை வெற்றி பெறப்போகும் கட்சிக்குத் தேவை இரு மிக முக்கியமான அம்சங்கள். அவை இரண்டும் இரு கண்கள் என்றே கூறலாம். இதில் முதலிடம் வகிப்பது, தோல்வி அடையப்போகும் கட்சிக்கெதிரான எதிர்ப்பலை. இங்கே ஒரு மேல்நாட்டு அறிஞரின் பொன்மொழி நினைவுக்கு வருகிறது. இதைச் சொன்னவரின் பெயர் நினைவில் இல்லை, ஆனால் அவர் சொன்னது இதுதான். "..ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற அக்கட்சிக்கு மக்கள் அளிக்கும் ஆதரவைக்காட்டிலும் எதிர்க்கட்சியின்மீது மக்கள் கொண்டிருக்கும் கோபமே முக்கியக் காரணமாய் இருக்கும்... ". இது பிற நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ எந்த அளவுக்குப் பொருந்தும் என்பது தெரியவில்லை என்றாலும் இது தமிழகத்துக்கு மிகப் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களின் உளவியலே வழக்கம்போல இங்கே தீர்மானிக்கிறது. எப்போதுமே ஒருவனின் அறிவினைத் தட்டிவிடுவதைக்காட்டிலும், அறிவுக்கண்ணைத் திறந்து அவனைச் செயல்பட வைப்பதைக் காட்டிலும், அவனின் உணர்ச்சிகளைத் தட்டிவிட்டு தமக்குச் சாதகமாய்ச் செயல்படவைப்பது மிக எளிது. இதில் பல அரசியல்வாதிகள் கைதேர்ந்தவர்கள்.  இதனாலேயே எதிரணியின் மீதான கோபம், எதிர்ப்பலை வெற்றிபெறப்போகும் கட்சிக்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாய்,  தமிழக அரசியலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பது வலிமையான கூட்டணிகள். இதற்காய், கடந்த காலங்களில் நடந்த பல நிகழ்வுகளை, வெற்றி தோல்விகளை எடுத்துக்காட்டுகளாய்ச் சுட்ட முடியும். ஆனால், இந்தக் கூட்டணிகள் எதிரணியின் மீது தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையிலேயே முக்கியத்துவம் பெறுகின்றன. தீவிர எதிர்ப்பலையுள்ள கட்சியின் கூட்டணி வலிமையாய் இருந்தாலும் அது தோல்வியடையப் போவது உறுதி. ஏற்கனவே சொன்னபடி, தேர்தலைப் பொருத்தவரை மக்களின் அறிவைவிட, சிந்தனையைவிட அவர்களின் உணர்ச்சிகளே வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஏதாவது ஒரு கட்சியே தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி புரிந்துவருவது நடந்துவருகிறது. அது இந்தத் தேர்தலிலும் தொடருமா என்பது கேள்விக்குறியே. தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அஸ்திவாரம் இத்தேர்தலில் திமுக கட்சியால் அமைக்கப்பட்டுவிட்டது போன்றே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு வலிமை சேர்ப்பதாகக் கருதுவது கீழ்க்காணும் சில அம்சங்களை.&lt;br /&gt;&lt;br /&gt;1. கடந்த அதிமுக அரசின் மீது இருந்ததைப்போல், தமிழக மக்களுக்குப் பெரிய அளவில் எதிர்ப்பலை இருப்பதாய்த் தோன்றவில்லை. ஜெயலலிதாவின் பல அதிதீவிர நடவடிக்கைகளைத் தலைமை கொண்டிருக்க வேண்டிய, இதுவரை இருந்த எந்த ஆட்சியாளர்களுக்கும் இல்லாத துணிச்சலான குணாதிசயமாக தமிழக மக்கள் பலர் எண்ணத் தொடங்கிவிட்டனர் என்பது கண்கூடு.&lt;br /&gt;&lt;br /&gt;2. எந்தக் கட்சியின்மீதும் தீவிர எதிர்ப்பலை இல்லாத நிலையில் முக்கியத்துவம் பெறப்போவது வலிமையான கூட்டணிகள். திமுக நல்ல கூட்டணி அமைத்திருந்தாலும், அதிமுகவின் கூட்டணி ஒன்றும் மோசமில்லை. திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு சரியான போட்டி இத்தேர்தலில் இருக்கப்போவது உறுதி.  ஒருவேளை கடும்போட்டியில் அதிமுகவைவிட திமுக சில தொகுதிகள் அதிகம் வென்றாலும் தனியாக ஆட்சியைமைக்குமளவுக்கு அதிக இடங்களைப் பிடிக்குமா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. திமுக ஒதுக்கியிருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவையெல்லாம் பல தசாம்சங்களாய் அரசியல் விளையாட்டில் கைதேர்ந்த கருணாநிதிக்கும், ஜெயலலிதாவுக்கும் தெரியாமலிருக்க நியாயமில்லை. தமது கட்சி தற்போது கொண்டிருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டும்தான் என்று வெளிப்படையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் வைகோவின் நிலை கூட்டணி ஆட்சி என்று வரும்போது மிகவும் முக்கியத்துவம் பெறும். தனியாக ஆட்சியமைக்க முடியாமல் ஒருவேளை இக்கட்டான நிலை ஏற்பட்டால், வைகோவின் உதவிகூட திமுகவுக்குத் தேவைப்படலாம். இதைக் கருணாநிதி நன்றாக உணர்ந்துள்ளதாலேயே, எதிரணிக்குச் சென்றுவிட்ட வைகோவைக் கடுமையாக விமர்சித்து இதுவரை ஒருவார்த்தைகூடச் சொல்லாமல் தவிர்த்துவருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;எது எப்படியோ, இதுவரை இல்லாத ஒரு சுவாரசிய திருப்பம் தமிழக அரசியலில் மே 11 க்குப் பிறகு ஏற்படப்போவது உறுதி. வைகோ, ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதற்கான விடை அன்றே தோராயமாய்க் கிடைத்துவிடும்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114210736330387745?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114210736330387745/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114210736330387745' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114210736330387745'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114210736330387745'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/03/blog-post.html' title='தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வருது..?'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114054204092564112</id><published>2006-02-21T18:13:00.000+01:00</published><updated>2006-03-08T10:36:19.373+01:00</updated><title type='text'>எடைக்கு எடை தங்கம்</title><content type='html'>நண்பரிடமிருந்து யாகூ மெசேஞ்சரில் ஒரு செய்தி வந்தது.&lt;br /&gt;"...பிரேக்கிங் நியூஸ்... அசின் வீட்டில் சி.பி.ஐ சோதனை..... பாத் ரூமில் 20 லட்சம் பணம்... ஸ்டோர் ரூமில் 50 கிலோ தங்கம்..... பெட் ரூமில் முழுவதும் எனது போட்டோ... சில்லி கேர்ள் ...  கிரேசி அபட் மீ....".&lt;br /&gt;&lt;br /&gt;நான் முதல் இரு வரியைப் படித்துவிட்டு செய்தி உண்மையோ என்று நினைத்துவிட்டேன். 50 கிலோ தங்கமா ஒருத்தர் வச்சிருப்பாங்க என்று ஒரே ஆச்சரியம். அப்புறம் திரும்பவும் படித்தபோதுதான் நண்பரின் குறும்பு புரிந்தது. இருந்தாலும் நண்பருக்கு ஆசை அதிகம்தான் :-).&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114054204092564112?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114054204092564112/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114054204092564112' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114054204092564112'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114054204092564112'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_21.html' title='எடைக்கு எடை தங்கம்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-114004641219243042</id><published>2006-02-16T00:25:00.000+01:00</published><updated>2006-03-24T20:44:35.860+01:00</updated><title type='text'>உலகம் தோன்றி இதுவரை....</title><content type='html'>மனிதன் தோன்றி 6,000 வருடங்கள் ஆகின்றன. நான் சொல்லவில்லை, கொஞ்ச நாட்களுக்கு முன்னால் என்னுடன் வாதிட்ட கிருத்துவ போதகர் சொன்னார். அவ்வப்போது சிலர் இதுபோல் வீடுதேடிவந்து போதனை செய்வதுண்டு. அன்று வந்தவர் தமிழர். அவருடன் பேசியது சுவாரசியமாகவே இருந்தது. போதனை செய்ய வந்து இப்படி வாதம் செய்ய வேண்டியதாகிவிட்டதே என்று அவர் வருத்தப்பட்டாரோ என்னவோ தெரியவில்லை, அதன் பின்னர் அவரை மீண்டும் பார்க்கவே இல்லை. ஆதாம் ஏவாளில் இருந்து இன்றைய மனிதர்கள்வரை கணக்கிட்டால் கடவுள் மனிதனைப் படைத்து ஆறாயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று உறுதியாகச் சொன்னார். மொஹஞ்சதாரோ, ஹராப்பா நாகரிகத்தின் காலமே 5,000 ஆயிரம் வருடத்துக்கு மேல் ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கும் ஆயிரம் வருடத்துக்கு முன்னால்தான் இறைவன் மனிதனைப் படைத்தார் என்றார். இது கொஞ்சமும் ஏற்கும்படி இல்லையென்று சொன்னேன். இப்படியே விவாதம் ஒருமணி நேரத்துக்கு மேல் தொடர்ந்தது. அது சரியோ, தவறோ ஒரு புறமிருக்கட்டும். புராதன இந்தியக் காலண்டரைக் கொஞ்சம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;60 தற்பரை - 1 விநாடி&lt;br /&gt;60 விநாடி  - 1 நாடி&lt;br /&gt;60 நாடி       - 1 நாள்&lt;br /&gt;29-32 நாள் - 1 மாதம்&lt;br /&gt;12 மாதம்   - 1 வருடம் (365 நாள், 15 நாடி, 31 விநாடி, 15 தற்பரை)&lt;br /&gt;யுகம்-&lt;br /&gt;கிருதயுகம்      4 X 4,32,000    = 17,28,000    &lt;br /&gt;திரேதாயுகம்      3 X 4,32,000    = 12,96,000    &lt;br /&gt;துவாபரயுகம்      2 X 4,32,000    = 8,64,000    &lt;br /&gt;கலியுகம்      1 X 4,32,000     = 4,32,000&lt;br /&gt;&lt;br /&gt;யுகங்களில் கலியுகம் குறைந்த வருடங்களைக் கொண்டது. இப்போது நாம் கலியுகத்தில் இருக்கிறோம். கலியுகம் பிறந்தது பெப்ரவரி 18, 3102 BCE ல், ஆக இந்த 2006 ஆம் வருடம் கலியுகத்தில் 5106 ஆம் வருடம் ஆகின்றது. கலியுகம் முடிய இன்னும் சுமார் 4,30,000 வருடம் இருக்கின்றது. கலியுகம் முடிந்ததும் மீண்டும் கிருதயுகம் ஆரம்பிக்கும், அடுத்து திரேதாயுகம், துவாபரயுகம், மீண்டும் கலியுகம் இவ்வாறு மீண்டும் மீண்டும் வந்துகொண்டேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு யுகமும் சேர்ந்தால் ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் = 4.32 மில்லியன் வருடங்கள்.&lt;br /&gt;71 மகாயுகம் = 1 மன்வந்திரம்&lt;br /&gt;14 மன்வந்திரம் = 1 கற்பம் (994 மகாயுகம்)&lt;br /&gt;2 கற்பம் = பிரம்மாவின் 1 நாள்&lt;br /&gt;இப்படியே பிரம்மாவுக்கு 100 வயது ஆனால் அவரின் ஆயுள் முடிந்து அடுத்த பிரம்மா ஆட்சிக்கு வருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, இதன்படி உலகம் தோன்றி எத்தனை வருடம் ஆனதோ?, இப்போது இருக்கும் பிரம்மா எத்தனையாவது பிரம்மாவோ தெரியவில்லை. எனக்கு இப்போது கொஞ்சம் தலைசுற்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-114004641219243042?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/114004641219243042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=114004641219243042' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114004641219243042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/114004641219243042'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_16.html' title='உலகம் தோன்றி இதுவரை....'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113986704434104545</id><published>2006-02-13T22:38:00.000+01:00</published><updated>2006-02-15T05:24:42.120+01:00</updated><title type='text'>நம் சிந்தனை எந்த மொழி?</title><content type='html'>வாழ்வில் நாம் பல மொழிகளைக் கற்க வாய்ப்புக் கிடைக்கலாம். பல மொழிகளை சரளமாகப் பேசலாம். ஆனால் நமக்கு அவசரத்தில் சரளமாக வருவது முதலில் கற்ற தாய்மொழியே. &lt;a href="http://dondu.blogspot.com/2006/02/italics.html"&gt;டோண்டு&lt;/a&gt;  இன்று இதுபற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். வலி, வேதனை, பயம் ஆகியவை திடீரென வரும்போது வாயில் வருவது தாய்மொழியாகத்தான் இருக்கும். இதனால் நாம் சிந்திப்பதே தாய்மொழியில்தான் என்று கருதுபவர்கள் பலருண்டு. உண்மையில் சிந்தனைக்கு மொழி இல்லை என்றே கூறலாம். மொழிகளைக் கடந்த நிலையிலேதான் சிந்தனை பிறக்கிறது. அதைச் சேமிக்கவோ, அடுத்தவருக்குச் சொல்லவோ நமக்கு மொழி என்ற கருவி முக்கியத் தேவை. இதனாலேயே உண்மையில் நாம் எண்ண நினைக்கிறோம் என்பதை அப்படியே நம்மால் பிறருக்கு வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலுவதில்லை. தாய்மொழியில் தோராயமாய் வெளிப்படுத்தலாம், ஆனால் பிறமொழியில் இன்னும் மோசம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அறிவியல் ஆய்வுக்கட்டுரை சில வருடங்களுக்கு முன்னால் வெளியானது. அதன் முக்கியக் கருத்து "...மொழி நாம் எண்ண நினைக்கிறோம் என்பதை அடுத்தவருக்கு முழுவதுமாகச் சொல்ல உதவுவதில்லை...". சில அறிவியல் சோதனைகள்கூட இது தொடர்பாய் நடந்துவருகின்றன. ஒரு கணினியிலிருந்து மற்றொரு கணினிக்குத் தகவலைக் கடத்துவதுபோல மனிதர்கள் மொழியின் உதவியில்லாமல் தங்கள் எண்ணங்களைத் துளியும் பிசகாமல் துல்லியமாய் அடுத்தவருக்குத் தெரிவிக்க முடியும் என்பதற்குச் சாத்தியங்கள் உள்ளதாக அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன (சிந்தனை----&gt;சிந்தனை).&lt;br /&gt;&lt;br /&gt;உங்களைப் போலவே சிந்திக்கும் ஒருவர் உங்களுக்கு நண்பராக இருந்தால் அவரின் ஒரு சொல்கூட அவர் உங்களிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தெளிவாக உணர்த்தும். நம்மிடையே எத்தனை பேருக்கு அந்த மாதிரியான அனுபவம் உண்டு என்று தெரியவில்லை. காதலர்கள் கண்களால் பேசிக்கொள்வதையும் இங்கே கருத்தில் கொள்ளலாம். இவைகள் கிட்டத்தட்ட மொழிகளில்லா சிந்தனை----&gt;சிந்தனை உயர்பரிமாற்றத்துக்கு அருகில் உள்ளவை.&lt;br /&gt;&lt;br /&gt;சிந்தனை என்பது சொற்களில்லாப் பரப்பிலேயே ஆரம்பிக்கிறது. அப்பரப்பிலிருந்து நேரிடையாய் எளிதாய் வரும் சொற்கள் தாய்மொழிச் சொற்களாகவே இருக்கும் (சிந்தனை----&gt;தாய்மொழி). ஒருவர் தாய்மொழியைத் தவிர மற்ற மொழியிலும் சரளமான பயன்பாட்டுத் திறனை உடையவர் என்றால் தனது சிந்தனையை நேரடியாய் அந்த மொழியிலும் தெரிவிக்க இயலும் (சிந்தனை----&gt;பிறமொழி). அவ்வாறு இல்லாதபோது தாய்மொழி மற்ற மொழிகளுக்கு இடைமுகமாய் ஊன்றுகோல் போல நம்மையறியாமல் நின்று உதவும். சாதாரணமாய் நடப்பதற்கும் ஊன்றுகோலூன்றி நடப்பதற்கும் உள்ள வித்தியாசம் நாம் அறிந்ததுதானே?. நம்மிடையே பலர் தாய்மொழியிலுள்ள சரளம் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் வராமைக்குக் காரணம் இதுவேதான். மொழிகளற்ற சிந்தனையிலே இருந்து ஆங்கிலம் நேரடியாய் வரவேண்டும், சிந்தனை----&gt;தாய்மொழி---&gt;பிறமொழி என்று நம்மையறியாமல் கணநேரப் பரிமாற்றம் வரும்போது சரளம் என்றுமே ஒரு குறைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலேயே ஜெர்மன் உள்ளிட்ட எந்தப் பிறமொழியையும் கற்பிக்கும் "திறமையான" ஆசிரியர்கள் அதைப் பிறமொழிகளின் உதவியில்லாமல், இடைமுகமில்லாமல் நேரடியாய் அதேமொழியில் கற்பிக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113986704434104545?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113986704434104545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113986704434104545' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113986704434104545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113986704434104545'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_13.html' title='நம் சிந்தனை எந்த மொழி?'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113934188528673501</id><published>2006-02-07T20:44:00.000+01:00</published><updated>2006-02-13T03:27:46.366+01:00</updated><title type='text'>பாட்டிலைத் திறப்பது எப்படி?</title><content type='html'>ஒரு ஒளித்துண்டில் ஒரு பிரகஸ்பதி "&lt;a href="http://video.google.com/videoplay?docid=-2253180893873082031&amp;amp;q=tamil"&gt;ஒரு விஷயத்தை&lt;/a&gt;" செயல்முறை விளக்கத்தோடு தமிழில் சொல்லித் தருகிறார். கூகிள் வீடியோவில் &lt;a href="http://video.google.com/videosearch?q=tamil"&gt;தமிழ்&lt;/a&gt; என்று தேடியபோது உடனே கிடைத்தது இது. அனுபவமில்லாத நண்பர்களுக்கு உதவட்டுமே என்று ஒளித்துண்டாய்ப் போட்டு வைத்திருக்கிறார் போலும் :-).  என்னவோ ஏதோ என்று குழம்பிவிடாதீர்கள், ஒரு பாட்டிலை எப்படித் திறப்பது என்றுதான் செய்து காட்டுகிறார்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113934188528673501?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113934188528673501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113934188528673501' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113934188528673501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113934188528673501'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_07.html' title='பாட்டிலைத் திறப்பது எப்படி?'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113925877623599903</id><published>2006-02-06T21:21:00.000+01:00</published><updated>2006-02-08T21:20:31.676+01:00</updated><title type='text'>வழுக்கிப் பழகு</title><content type='html'>அது உற்சாகமான அனுபவம்தான,   என்னைச் சுற்றி வேகமாய் 'விர்விர்' எனப்போய்க்கொண்டிருந்த வாண்டுகளுக்கு என்னைப் பார்ப்பதே உற்சாகமாய் இருந்தது. முதன்முதலில் நான் நடக்க ஆரம்பித்தபோதுகூட இப்படித்தான்&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.essen-on-ice.de/Bilder/kids.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 200px;" src="http://www.essen-on-ice.de/Bilder/kids.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt; கஷ்டப்பட்டிருப்பேன் என்று நினைக்கிறேன். கொஞ்ச தூரம் அழகாய் நகர்ந்து சந்தோஷப்படும் முன்னர் 'டமார்' என்று கீழே  விழுந்துகொண்டே  இருந்தேன். 4 வயது, 5 வயது வாண்டுகள் மட்டும் எப்படி வேகமாய்ப் போகிறார்களோ?. "மூத்த வலைப்பதிவாளர்" &lt;a href="http://anjalisplace.blogspot.com/2006/02/blog-post.html"&gt;அஞ்சலி&lt;/a&gt;கூட அவருடைய அனுபவம் பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். ஒருவேளை அவரும் முதன் முதலில் இதுபோல் கீழேவிழுந்து பழகியவராகத்தான் இருப்பாரோ என்னவோ?.  &lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://www.essen-on-ice.de/Bilder/classic2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 200px;" src="http://www.essen-on-ice.de/Bilder/classic2.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;ஒரே ஆறுதல் என்னை விட பெரிய ஆட்கள் பலரும் என்னைப் போல் கீழே விழுந்துகொண்டிருந்தார்கள். சென்ற சனிக்கிழமை மாலை நாங்கள் சறுக்கிய தளம் இதுதான்.&lt;br /&gt;என்னுடன் வந்த எனது நண்பருக்கும் இதுதான் முதல் தடவை. பல தடவை கீழே விழுந்து இதற்கு மேல் கீழே விழ உடம்பில் தெம்பில்லை என்று அந்த ஐஸ் ஸ்கேட்டிங் தளத்தைவிட்டு வெளியே வந்துவிட்டார். அவர் பின்னால் நானும் வந்துவிட்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113925877623599903?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113925877623599903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113925877623599903' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113925877623599903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113925877623599903'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_06.html' title='வழுக்கிப் பழகு'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113897276385148149</id><published>2006-02-03T14:17:00.000+01:00</published><updated>2006-02-14T02:23:26.936+01:00</updated><title type='text'>ராம் - பாகிஸ்தானிலிருந்து</title><content type='html'>கொஞ்ச நாட்களாய் அவரை எனக்குத் தெரியும். இங்கேதான் படிக்கிறார். அவ்வப்போது ராம் சொல்வார், '..நான் ஒரு பாகிஸ்தானி, அதன் பின்னர்தான் நான் இந்து..'.&lt;br /&gt;&lt;br /&gt;* முசாரப் செய்தவை அத்தனையும் சரியாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இதுவரை இருந்த ஆட்சியாளர்களுக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லை. சிறுபான்மையினரான இந்துக்கள், கிருத்துவர்கள் போன்றவர்களைப் பற்றிக் கொஞ்சமாவது சிந்திப்பவர் முசாரப்.&lt;br /&gt;&lt;br /&gt;* படிக்காத முஸ்லீம் பாகிஸ்தானிகள் பலரும் சிறுபான்மையினரைப் பொருத்தவரை எங்கள் நாட்டில் ஆபத்தானவர்கள், குறிப்பாய்க் கலவர நாட்களில்.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்தியாவில் மதம் சம்பந்தப்பட்ட அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் அது பாகிஸ்தானில் சிறுபான்மை இந்துக்கள் மீது கடுமையாக எதிரொலிக்கும். நாங்கள் எந்த வகையிலும் அதனோடு சம்பந்தப்படாதவர்கள் என்பது பல மூடர்களுக்குப் புரிவதே இல்லை. பாபர் மசூதி விவகாரம் கிளம்பியபோது எங்களுக்கு மறக்கமுடியாத பல கொடுமைகளைச் செய்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* குஜராத் கலவரம் இந்தியாவில் நடந்தபோது நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருந்தோம். ஆனால் கடவுள் புண்ணியத்தில் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் முசாரப்பின் நடவடிக்கைகள்தாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* 1950-களில் 20 சதவீதம் பேர் இந்துக்கள். இப்போது 4 சதவீதம் பேர்தான் எங்கள் நாட்டில் இந்துக்கள். அதுவும் சிறுபான்மையினர் எவ்வளவு என்பதைக் கணக்கெடுப்பதில் அரசாங்கம் போதிய நியாய உணர்வுடன் செயல்படுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிக்காலத்தை முழுவதும் நிறைவு செய்த பிரதமர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித்தான் பார்க்க வேண்டும். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்கள் அனைவருமே தங்களைப் பற்றித்தான் சிந்தித்தார்களே தவிர நாட்டை ஒருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆளாளுக்கு முடிந்தவரை சுருட்டத்தான் செய்தார்கள். நவாஸ் செரீப் உட்பட. புதிதாய் ஒருவரைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்து அவர் கையில் நாட்டைக் கொடுப்பதைவிட முசாரப்பே இருந்து விட்டுப் போகட்டும் என்று மக்கள் பலரும் நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஒரு நாடு பணக்கார நாடோ, ஏழை நாடோ அது உலக அளவில் கொஞ்சம் மதிப்புடன் இருக்க வேண்டும். பாகிஸ்தானில் இருந்து வருகிறேன் என்று எந்த நாட்டில் போய் சொன்னாலும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கிறார்கள். அப்பாவிக் குடிமக்களாகிய எங்களின் இந்தப் பரிதாபநிலை இதுபோன்ற அனுபவம் இல்லாமல் இருக்கும் இந்தியரான உங்களுக்குப் புரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;* எங்கள் நாட்டின் நிலை ஒன்றும் உற்சாகமளிப்பதாகவே இல்லை. கடவுள்தான் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். இந்தியா போல் எங்கள் நாடும் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113897276385148149?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113897276385148149/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113897276385148149' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113897276385148149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113897276385148149'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_113897276385148149.html' title='ராம் - பாகிஸ்தானிலிருந்து'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113892276631042121</id><published>2006-02-03T00:22:00.000+01:00</published><updated>2006-02-03T04:31:36.473+01:00</updated><title type='text'>காமசூத்ரா - எச்சரிக்கை</title><content type='html'>நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் இவைகள் பெருகிக்கொண்டே வருகின்றன, இவைகளால் பெரிய லாபம் என்று யாருக்கும் இல்லை - தடுப்புமருந்து விற்கும் மென்பொருள் நிறுவனங்களைத் தவிர. கணினி வைரஸ்கள் பற்றித்தான் சொல்கிறேன். இந்தத் தொல்லை கொடுக்கும் வைரஸ் பட்டியலில் லேட்டஸ்டாக வந்திருப்பது நம்ம காமசூத்ரா வைரஸ். இது டைம்பாம் வைரஸ் வகையைச் சார்ந்தது. ஒவ்வொரு மாதமும் 3 ஆம் தேதி மீண்டும் மீண்டும் கம்ப்யூட்டரைப் பதம் பார்க்கும்விதத்தில் இந்த வைரஸ் எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு 3 ஆம் தேதி. திரும்பவும் எத்தனை கம்ப்யூட்டர்கள் உலகம் முழுவதும் பாதிக்கப்படப்போகின்றனவோ தெரியவில்லை. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னால் இதே பெயரில் சில வைரஸ்கள் வந்தன. அவை&lt;a href="http://vil.nai.com/vil/content/v_100364.htm"&gt; 'W32/Mapson@MM'&lt;/a&gt;, மற்றும் &lt;a href="http://vil.nai.com/vil/content/v_100231.htm"&gt;'W32/Oror.ad@MM'&lt;/a&gt; வகையைச் சேர்ந்தவை, அவ்வளவு ஆபத்தில்லாதவை. இப்போது வந்திருப்பது 'Worm.Win32.VB.bi', மற்றும் &lt;a href="http://vil.nai.com/vil/content/v_138027.htm"&gt;'W32/MyWife.d@MM!M24'&lt;/a&gt; போன்ற வகையானவை.&lt;br /&gt;&lt;br /&gt;உங்களுக்குப் பாலியல் சம்பந்தப்பட்ட நிழற்படம், ஒளித்துண்டு மின்னஞ்சலில் வந்தால் எச்சரிக்கையாக இருக்கவும். சில சமயம் உங்கள் நண்பர்களின் பெயரிலேயே கூட வரக்கூடும். வைரஸ் மின்னஞ்சல் தலைப்புகளில் சில, 'The best video clip ever,' 'school girl fantasies gone bad,' 'a great video,' 'Kama Sutra pics,' 'Arab sex DSC-00465.jpg'. அனைத்து வைரஸும் மின்னஞ்சல் அட்டாச்மெண்டாகவே வரும். அதை இறக்கி இயக்குபவர்களுக்கு மட்டும்தான் பாதிப்பு. பெரும்பாலான கோப்புவகைகளைக் ( எ-கா. வேர்ட், எக்ஸல், அடோபி பிடிஎஃப்,.... ) கணியிலிருந்து அழிக்கும்படி இந்த வைரஸ் எழுதப்பட்டுள்ளது. அந்தக் கோப்பை அழித்துவிட்டு அதற்குப்பதிலாய் ஒரு கிலோபைட்டுக்கும் மிகக் குறைவான கோப்பாய் மாற்றி வைத்துவிடும். அதைத் திறந்து பார்த்தால் சின்னதாய் ஒரு எரர் மெசேஜ் மட்டுமே வந்து நிற்கும். இந்த வைரஸ் மிகப்பழைய உத்தியைக் கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் இந்த வாரத்தில் மட்டும் இதுவரை பல லட்சம் கணினிகளைப் பதம் பார்த்துவிட்டது. எனவே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113892276631042121?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113892276631042121/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113892276631042121' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113892276631042121'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113892276631042121'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_03.html' title='காமசூத்ரா - எச்சரிக்கை'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113881096324846907</id><published>2006-02-01T17:19:00.000+01:00</published><updated>2006-02-02T20:51:03.166+01:00</updated><title type='text'>ஆச்சரியம் + அதிர்ச்சி = கியூபா</title><content type='html'>கியூபா நாட்டு நண்ப, நண்பிகள் சிலரை எனக்குத் தெரியும். உடன் பயில்வோர் அவர்கள். அவர்கள் சொன்னவை மிகவும் ஆச்சரியமூட்டுபவையாகவும், அதிர்ச்சியளிப்பவையாகவும் இருந்தன, அவைகளைக் கேட்டால் உங்களுக்கும் அப்படியிருந்தால் அதில் பெரிய ஆச்சரியமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* நாட்டைவிட்டு கியூபாக் குடிமக்கள் வெளியேறுவது என்பது அவ்வளவு எளிதான விதயம் அல்ல. மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதும் இதில் அடக்கம். கியூபக் குடிமக்கள் தாங்கள் செல்லும் நாட்டின் விசா வாங்குவதைவிட வெளியேற கியூபாவின் அனுமதி கிடைப்பதுதான் மிகக் கடினம். அதுவும் அமெரிக்காவுக்கு என்றால் மூச்... 99.99 சதவீதம் உறுதியாய்ச் சொல்லிவிடலாம் அனுமதி கிடையவே கிடையாது. வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் ஒரு வருடத்துக்கு ஒருமுறை மீண்டும் கியூபாவுக்கு வந்து தங்களின் அனுமதியை மீண்டும் புதிப்பிக்க வேண்டும், தவறினால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* வெளிநாட்டுக்குப் போய் வருபவர்கள் மின்சாரத்தால் இயங்கும் எப்பொருளையும் உள்ளே கொண்டுவரக்கூடாது. பிரெட் டோஸ்டர் உட்பட. இது மின்சாரத்தைச் சேமிக்கச் சிக்கன நடவடிக்கையாம்.&lt;br /&gt;&lt;br /&gt;* கம்யூனிஸ்ட் கட்சியில் செல்வாக்கு இருந்தால் அரசாங்க வேலை கிடைப்பது மிக எளிது. பேராசிரியர் வேலை உட்பட. அவர் துறையில் மிகுந்த அறிவுடையவராய் இருக்கவேண்டுமென்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* கட்சியில் செல்வாக்குடையவரை எதிர்த்தால் அமெரிக்க உளவாளி எனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் தள்ளப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;* கடல்வழியாய் சிலபத்து மைல்கள் கடந்துவந்து அருகிலுள்ள அமெரிக்கக் கடற்கரையைத் தொட்ட மறுவினாடியே அவர்கள் விரும்பினால் அமெரிக்கக் குடிமகனாய் அங்கீகரிக்கப்படுவார்கள். ஆனால் இடையில் அமெரிக்கக் கடற்படை பிடித்தால் மீண்டும் கியூபாவுக்கே திரும்பியனுப்பப்படுவார்கள். இடையில் கியூபக்கடற்படை பிடித்தால் சொர்க்கமோ, நரகமோ உடனே கிடைக்கும். அவ்வாறு&lt;a href="http://etamil.blogspot.com/2006/02/blog-post.html"&gt; இறந்தவர்களின் எண்ணிக்கை&lt;/a&gt; பல்லாயிரம். அதிர்ஷ்டவசமாய் கரையைத் தொட்ட அடுத்த வினாடியே அமெரிக்கக் குடிமகனான யோகக்காரர்களும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;* கியூபாவின் அங்காடிகளில் அமெரிக்கக் கரன்ஸிகள் தாராளமாய் அங்கீகரிக்கப்பட்ட, புழங்கும் ஒன்று, இன்னும் சொல்லப்போனால் அதற்குத் தனி மதிப்பு உண்டு. அரசாங்கம் அதை எதிர்த்தாலும் அங்காடிகள் அதன் மதிப்பே தனி.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113881096324846907?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113881096324846907/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113881096324846907' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113881096324846907'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113881096324846907'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post_01.html' title='ஆச்சரியம் + அதிர்ச்சி = கியூபா'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113880061306738602</id><published>2006-02-01T14:28:00.000+01:00</published><updated>2006-03-25T15:10:53.763+01:00</updated><title type='text'>சாட் ரூமில் ஆன்லைன் சோதிடர்</title><content type='html'>அப்படி எதிர்பார்க்கவில்லைதான். அன்று சாட் ரூமில் பொழுதுபோக்காய்ச் சுற்றிக் கதைத்துக்கொண்டிருந்தேன். தமிழ்நாடு சாட் ரூம் அது. சோதிடம் பார்க்க விரும்புபவர்கள் தனிச்செய்தி அனுப்பவும் என்று பொதுரூமில் ஒரு விளம்பரம் வந்தது. சரி.. என்னதான் நடக்குமென்று பார்ப்போமே என்று அந்த ஐடிக்கு ஒரு PM அனுப்பினேன்.  யாஹூ வாய்ஸ் சாட் சரியாக அவருக்கு வேலை செய்யாததால் ஸ்கைப்பிக்கு வரச்சொன்னார். என்னுடைய ஸ்கைப்பி ஐடி ஞாபகம் இருந்தாலும், கடவுச்சொல்லை மறந்துவிட்டிருந்தேன். பிறகு அவரே எனக்கு ஒரு ஸ்கைப்பி ஐடி உருவாக்கித் தந்தார். ஸ்கைப்பியில் சோதிடரும் நானும் பேசத் துவங்கினோம். பிறந்த நேரம் துல்லியமாய்த் தெரியுமா?.. என்று கேட்டார் சோதிடர். தோராயமாய்ச் சொன்னேன். ஆனால் என்னுடைய ராசிக்கட்டத்தில் எந்தக் கிரகம் எங்கிருக்கும் என்பது எனக்குத் தெரியுமாகையால் சொன்னேன். அதை வைத்து சரியாய்ச் ஜாதகத்தைக் கணித்தார். எல்லாத்தும் இப்போ மென்பொருள் வந்துவிட்டது. இல்லையென்றால் நான் பிறந்த வருடத்துப் பஞ்சாங்கம் இல்லாமல் அவரால் ஒன்றும்  செய்ய இயலாது. இப்போது கிடைக்கும் இலவச மென்பொருட்களே கிட்டத்தட்ட 10,000 வருடத்துப் பஞ்சாங்கத்துடன் வருகின்றன. எனது ஜாதகத்தை வைத்து நிறையப் பலன்கள் சொன்னார். கிட்டத்தட்ட எல்லாமே சரியாக இருந்தன. எனக்கும் கொஞ்சம் ஜாதகத்தில், அடிப்படையில் பரிச்சயம் உண்டு. அவர் ஏதாவது ஒரு பலன் சொன்னால் அதை எப்படிச் சொன்னீர்கள் என்று மறக்காமல் கேட்டேன், அவரும் சளைக்காமல் காரணம் சொன்னார். ஜாதகத்தை வைத்துச் சொல்லும்போது இது ஒரு வசதி. தாம் நினைத்தையெல்லாம் சோதிடர் சொல்ல முடியாது. ஏன் அப்படிச் சொன்னார் என்று நீங்கள் கேட்கலாம், உங்களுக்கும் கொஞ்சம் அடிப்படை தெரிந்திருந்தால். ஒரு ஆன்லைன் சோதிடக்கம்பெனி ஆரம்பித்திருப்பதாயும், அது சோதனை ஓட்டத்தில் இருப்பதாயும் சொன்னார். அது வெற்றிகரமாய் இருந்தால் விரையில் கட்டணமாய் மாற்றலாம் என்று எண்ணியிருப்பதாகச் சொன்னார். கடைசியாய்த் திருமணம் பற்றியும் ஒன்று சொல்லியிருக்கிறார், பார்க்கலாம் அது எவ்வளவு தூரம் பலிக்குமென :-).&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113880061306738602?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113880061306738602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113880061306738602' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113880061306738602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113880061306738602'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/02/blog-post.html' title='சாட் ரூமில் ஆன்லைன் சோதிடர்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113700637028885999</id><published>2006-01-11T20:01:00.000+01:00</published><updated>2006-01-11T20:06:10.300+01:00</updated><title type='text'>சறுக்கும் பொம்மையும்</title><content type='html'>பனிச்சறுக்கு விளையாடுவதைப் பார்த்ததோடு சரி. இதுவரை முயற்சி செய்ததில்லை. சில வாரங்களுக்கு முன்னால் பனியில் சறுக்கிப் பார்க்கலாமே என்று நண்பி, நண்பர்களுடன் ஒரு கும்பலாய் அருகிலுள்ள பனிச்சறுக்குமிடமான ஊபர்ஸ்டோர்ப் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே போனபின்தான் தெரிந்தது மலையில் ஏறவே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகுமென்று. கொஞ்ச நேரம் ஏறிப் பாதி வழியில் விசாரித்தால் பனிச்சறுக்கும் நேரம் முடியப்போகிறது என்று இறங்கி வந்துகொண்டிருந்த நபர்கள் சொன்னார்கள். பிறகென்ன செய்வது?. நாங்களும் கீழே இறங்கிவிட்டோம். வந்ததற்காய் ஏதாவது செய்யலாமே என்று நினைத்து அடிவாரத்தில் குவிந்துகிடந்த பனிக்குவியலில் அனைவரும் சேர்ந்து ஒரு ஆளுயர பனிப்பொம்மை செய்ய ஆரம்பித்தோம். பெரிய பனிப்பொம்மையைப் பார்த்து இம்ப்ரெஸ் ஆன பக்கத்து ரெஸ்டாரெண்ட் ஆளொருவர் எங்களுக்குக் கேரட் தந்து உற்சாகப்படுத்தினார். கேரட் நாங்கள் திங்க இல்லை, பனிம்பொம்மைக்கு மூக்கு வைக்கத்தான். பொம்மையை ஒரு வழியாய் செய்து முடித்து, பொம்மைக்கு எங்களின் தொப்பி, துண்டு எல்லாவற்றையும் போட்டு சுற்றி நின்று புகைப்படம் எடுத்தோம். கிளம்பும்போது மறக்காமல் எங்கள் தொப்பி, துண்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வந்துவிட்டோம்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4379/219/1600/snowman_ubersdorf.jpg"&gt;&lt;img style="cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4379/219/320/snowman_ubersdorf.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது நாங்கள் செய்த பனிப்பொம்மையேதான்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113700637028885999?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113700637028885999/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113700637028885999' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113700637028885999'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113700637028885999'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/01/blog-post_11.html' title='சறுக்கும் பொம்மையும்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113694583964437111</id><published>2006-01-11T03:14:00.000+01:00</published><updated>2006-01-11T03:19:38.930+01:00</updated><title type='text'>காமெடியா?  கடினமா ? பரிசு ரூ 10,000,00</title><content type='html'>காமெடி நிகழ்ச்சியாக நாம் பார்ப்பது நிஜத்தில் நடப்பது சாத்தியமானதுதான். கோடீஸ்வரன் நிகழ்ச்சியை வைத்து பல நகைச்சுவைகள் கேள்விப்பட்டிருக்கலாம். இது நம்மூருக்கு மட்டும்தான் பொருந்தும் என்று நினைத்துவிடாதீர்கள். இத்தாலியில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி. நமது கோடீஸ்வரன் நிகழ்ச்சிக்கு இணையானது, வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு மில்லியன் யூரோ பரிசு கிடைக்கும். அதில் பல வேடிக்கையான கேள்விகளும், நிகழ்ச்சிகளும் நடப்பது மிக இயற்கை.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அந்த நிகழ்ச்சியில் அவர் சரியாக சில கேள்விகள் சொல்லி பல ஆயிரம் யூரோ வரை வென்றுவிட்டு அடுத்த கேள்விக்குப் போனார். ஆனால் அடுத்து அப்படி ஒரு கடினமான கேள்வி வரும் என்று அவர் எதிர்பாத்திருக்கமாட்டார். கொடுத்த நான்கு பதில்களில் சரியான பதில் எது எனக்கண்டறிய முடியாமல் திணறிவிட்டார். கடைசியாக ஒரு விசேட வசதியைப் பயன்படுத்தி நண்பர் ஒருவருக்குத் தொலைபேசி சரியான விடை எதுவாக இருக்கும் எனக் கேட்டார். அய்யோ பாவம், அவருக்கும் அது தெரியவில்லை. அது சரி.. இவ்வளவு கடினமான கேள்வியைக் கேட்டால் அவர் என்ன செய்வார்?. அந்தக் கேள்விக்கு மட்டும் சரியான பதிலை யூகித்துச் சொல்லியிருந்தால் இருபதாயிரம் யூரோ பணத்தை அள்ளியிருப்பார். பாவம்..கடைசியில் அவராகவே ரொம்ப யோசித்துத் தவறான பதிலைத் தேர்ந்தெடுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலருக்குச் சரியான விடை தெரிந்திருக்கு வாய்ப்புண்டு.&lt;br /&gt;கேள்வி இதுதான்.&lt;br /&gt;வீட்டுக்கு ஆங்கிலத்தில் என்ன பெயர் ?.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113694583964437111?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113694583964437111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113694583964437111' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113694583964437111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113694583964437111'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/01/1000000.html' title='காமெடியா?  கடினமா ? பரிசு ரூ 10,000,00'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113682589518196022</id><published>2006-01-09T17:49:00.000+01:00</published><updated>2006-01-09T17:58:15.233+01:00</updated><title type='text'>இந்தியாவில் ராபின் ஹுட்  ??</title><content type='html'>நண்பர் ஒருவர் இத்தாலியில் படிக்கிறார், அவர் நம்ம ஊர்க்காரர்தான். அவரிடம் கதை கேட்டபின் ஐரோப்பாவில் ஒரு பிடித்த இடமாய் இத்தாலி எனக்கு மாறிவிட்டது. சில மாதங்களுக்கு முன்னால் வெனிஸ் போயிருந்ததால் ஒரு முறை நேரடியாய்ப் பார்த்தும் வந்தேன். வெளிநாட்டுக்காரர்கள், வெள்ளைக்காரர்கள் என்றால் மிகவும் வித்தியாசமாய் நடந்துகொள்வர் என்று யாராவது எண்ணினால் இத்தாலி போய் வாருங்கள். எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்டத்தட்ட இத்தாலி ஒரு மினி இந்தியா, மக்களின் நடவடிக்கைகளில். மக்கள் மிகவும் கனிவாக, உதவும் குணத்துடன் நடந்துகொள்வதாய்ப் பலமுறை நண்பர் சொல்லியிருக்கிறார். இந்தியாவில் எல்லாரும் இப்படியா இருக்கிறார்கள் என்று யாரும் தயவு செய்து கேட்கவேண்டாம் :-). ஒருமுறை அங்கு டெலிபோன் பூத் எங்கு இருக்கிறது என்று கேட்ட அந்த நண்பருக்கு 10 நிமிஷம் கூடவே வந்து டெலிபோன் பூத்தைக் காட்டி, தனது டெலிபோன் கார்டைக்கூட கொடுக்க முன்வந்த இத்தாலியர் ஒரு சின்ன உதாரணம். இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் பெரிய வித்தியாசமாய் மக்களின் நிறத்தைச் சொல்லலாம், அடுத்தத்து பெரும்பாலும் ஆங்கிலம் யாரும் பேசமாட்டார்கள். எந்த ஒரு டிகிரி முடித்தாலும் அவருக்குப் பேர் அங்கே "டாக்டர்", அதுவும் ரொம்பப் பெருமையான விஷயம். அதற்காய் ஊசி போட்டு மருந்து மாத்திரை கொடுக்கும் டாக்டராக முடியாது, அது ஒரு பெயர் அவ்வளவுதான். பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுபவர்களுக்குக் கிடைக்கும் பதில், "...சாரி.. ஐ ... நோ.. இங்கிலிஸ்". இந்த நோ know இல்லை, இந்த no.&lt;br /&gt;&lt;br /&gt;20 வருடம், 30 வருடத்துக்கு முன்னால் இத்தாலி ரொம்பவும் கட்டுப்பெட்டியான நாடு. இங்கே டிஸ்கோத்தே கிளப்கள்கூட ஒரு 15 வருடங்களுக்கு முன்னால்தான் வந்ததாம். ஆணும், பெண்ணும் சகஜமாய்ப் பழகுவதுகூட ஒரு விதக் கட்டுப்பாடுடன்தான் இருந்திருக்கிறது, சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை. இத்தாலியில் ஒரு அரசாங்க அலுவலகத்துக்குப் போய்வந்தால் நம்மூர் கவர்மெண்ட் ஆபீஸ் எவ்வளவு சிறப்பாக நடக்கிறது என்று புரிந்துகொள்வீர்கள். நம்மூர் பஸ், ரயில் ஓரளவுக்காவது குறித்த நேரத்துக்கு வருகிறது என்பதையும் இத்தாலியில் பயணம் செய்தால் உணர்வீர்கள். ரோட்டில் எச்சில் துப்புவதிலிருந்து, அசுத்தம் செய்வது வரை நம்மூருக்கும் இத்தாலிக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா இத்தாலியில் ரொம்பப் பிரபலம். சந்தன வீரப்பன் இறந்தது "... இந்திய ராபின் ஹுட் இறந்தார்.." என்று  சில பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாக வந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இவற்றைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் பல பதிவுகள் போடவேண்டி வரும். அதனால் மீண்டும் அவற்றை ஒருநாள் எழுதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113682589518196022?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113682589518196022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113682589518196022' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113682589518196022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113682589518196022'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/01/blog-post_113682589518196022.html' title='இந்தியாவில் ராபின் ஹுட்  ??'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113676398985446192</id><published>2006-01-09T00:08:00.000+01:00</published><updated>2006-01-09T01:31:44.240+01:00</updated><title type='text'>ஐஸ் வீடும்,  நானும்</title><content type='html'>ஐஸ் வீட்டுக்குப் போயிருந்தேன் சில நாட்களுக்கு முன்னர். "ஐஸ் " என்று செல்லமாய் அழைக்கப்படுபவர் நமக்கு நன்றாக அறிமுகமானவர்தான். இதைக் கேட்டவுடன் ஐஸ்வர்யாராய் நினைவுக்கு வருவது நியாயமானதுதான். காதல் பட நாயகிகூட இவ்வாறு அழைக்கப்படுவதாய்க் கேள்வி.&lt;br /&gt;&lt;br /&gt;நுழைவுக்கட்டணம் ஏதுமில்லை. உள்ளே வருபவர்களுக்குச் சாக்லேட் கொடுத்து உபசரித்தார்கள். ஐஸ் வீடு உள்ளே ரொம்பக் குளிராய் இருக்கும் இருக்குமென எதிர்பார்த்தால் வெளியே இருப்பதைவிட உள்ளே வெதுவெதுப்பாய்த்தான் இருந்தது. எஸ்கிமோக்கள் பனிவீடு நினைவுக்கு வந்தது. சுவரில் ஆரம்பித்துக் குளியல் தொட்டி, கட்டில் என வீட்டுக்கான பல ஐட்டங்கள் பனிக்கட்டியால் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைபவர்களிடம் வீட்டிலுள்ள எதையும் தொடவேண்டாம் என்று அறிவித்து உள்ளே அனுப்புகிறார்கள். உள்ளே போகுமளவுக்குப் பாதுகாப்பாய் இருக்குமா என்றெண்ணிக் கொண்டே உள்ளே போனோம், நல்லவேளை மேற்கூரை பனியால் செய்யப்படவில்லை. ஐஸ் வீடு பார்க்க அழகாய்த்தான் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4379/219/1600/eishaus_2.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4379/219/320/eishaus_2.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://photos1.blogger.com/blogger/4379/219/1600/eishaus_1.jpg"&gt;&lt;img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer;" src="http://photos1.blogger.com/blogger/4379/219/320/eishaus_1.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில வரிகளைப் படித்தவுடன் உங்கள் கற்பனைக் குதிரையை வேகமாய்த் தட்டிவிட்டு யாரும் ஒரு அவசர முடிவுக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். விளம்பரத்துக்காக ஒரு நிதி நிறுவனம் இப்படிப் பனிக்கட்டியால் வீட்டைக்கட்டி பார்வைக்கு வைத்துள்ளனர். ஜெர்மனி- கொலன் நகரில் ரைஹ்ன் நதிக்கரையில் நண்பர்களுடன் உலாவிக்கொண்டிருந்தபோதுதான் தற்செயலாய் இதைப் பார்த்தோம். ஐஸ் வீடு பார்க்க அழகாய்த்தான் இருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113676398985446192?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113676398985446192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113676398985446192' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113676398985446192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113676398985446192'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/01/blog-post_09.html' title='ஐஸ் வீடும்,  நானும்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-113665129520778318</id><published>2006-01-07T16:57:00.000+01:00</published><updated>2006-01-07T17:28:15.433+01:00</updated><title type='text'>கணவரின் தம்பி=தம்பி</title><content type='html'>நாட்டுக்கு நாடு  பழக்க வழக்கங்கள் எந்த அளவுக்கு மாறுகின்றன என்று நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.  தெரிந்த தோழி ஒருவர் கலிங்க நாட்டைச் சேர்ந்தவர். அவர் சொன்ன பல விதயங்கள் மிக சுவாரசியமாக இருந்தன. அவற்றில் ஒன்று உறவுமுறை கொண்டாடும் விதம் மற்றும் திருமணத்துக்குப் பையன் தேடும்   விதம். &lt;br /&gt;&lt;br /&gt;சொந்தத்தில்  அங்கு யாரும் திருமணம் செய்வதில்லையாம், காரணம் மிக சுவாரசியமானது. திருமணம் முடித்தால் கணவரின் உறவுக்காரர்களை கணவர் எப்படிக்கூப்பிடுவாரோ அதேபோல்தான் மனைவிக்குமாம்.  கணவர் தனது அப்பாவை அப்பா என்று அழைப்பதால் மனைவியும் அவரை அப்பா என்றுதான் கூப்பிட வேண்டுமாம்.  மனைவியின் தம்பியை மனைவி தம்பி என்று அழைப்பதால், கணவரும் அவரை தம்பி என்றுதான் கூப்பிட வேண்டுமாம். மிக எளிய முறையாய் இருந்தாலும் இது  எனக்குப் புரியவே கொஞ்ச நேரம் ஆனது.  விசித்திரமாக இருக்கிறது என்று சொன்னதற்குத் தோழி சொன்னார், "..திருமணம் முடித்தபின் இருவரும் ஒருவராவதால் உறவு மட்டும் எப்படி இருவகையாக இருக்க முடியும் ..?". கேள்வி நியாயம்தான், ஆனால் எனக்குத்தான் சத்தியமாய்ப் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உறவுமுறையில் குழப்பம் வரும் என்பதால் தூரத்து உறவினர்களுக்குக்கூடப் பெண் கொடுப்பது, எடுப்பது இல்லையாம். ஒரே வீட்டில் பெண் கொடுத்துப் பெண் எடுப்பதும் நடவாத காரியமாம்.  இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன.  திருமணத்தன்று மாப்பிள்ளை தாலி கட்டமாட்டாராம்,  மாலை மாற்றுவதுடன் கல்யாணம் முடிந்துவிடுமாம்.  நம்மூரில் வரும் முதலிரவு அங்கே நாலாம் இரவாம். அதுவரை பெண்ணும், மாப்பிள்ளையும் சந்திக்க மாட்டார்கள். நாலாம் நாள் இரவில் முதல் சம்பிரதாயம் தாலி கட்டுவதில் இருந்து ஆரம்பிக்கிறது, மற்றதெல்லாம் நமக்குத் தெரிந்ததுதான். ஆனால் என்ன தாலி கட்டுவதை மூன்றாம் நபர் யாரும் பக்கத்தில் இருந்து ஆசீர்வாதம் செய்ய அருகில் இருக்க மாட்டார்கள். &lt;br /&gt;அது போகட்டும், கலிங்க நாடு எது தெரியுமா?, நம்ம ஒரிசாதான்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-113665129520778318?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/113665129520778318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=113665129520778318' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113665129520778318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/113665129520778318'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2006/01/blog-post.html' title='கணவரின் தம்பி=தம்பி'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-112946808016270362</id><published>2005-10-16T15:00:00.000+02:00</published><updated>2005-10-16T15:11:01.943+02:00</updated><title type='text'>விமானப் பணிப்பெண், வெஜ் பர்கர், நான்</title><content type='html'>இங்கிருந்து சென்னைக்கு நான் போய்வந்தது டெல்டா ஏர்லைன்ஸில். விமானப் பயணம் சவுகர்யமாகவே இருந்தது. போகும்போது அஜித் நடித்த "ஜி" படம் விமானத்தில் திரையிட்டார்கள். அறிவிப்புக்கள் தமிழிலும் சொல்லப்பட்டன. விமானப் பணிப்பெண்கள் தமிழிலும், டமிலிலும் பேசினார்கள், இரண்டுமே நன்றாக இருந்தது :).&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விஷயத்தைக் கட்டாயம் இங்கே சொல்லியே ஆக வேண்டும். அடுத்த நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில் தமிழ் சகஜமாய் இருக்கும்போது, சென்னையிலிருந்து மதுரைக்குப் போகும் உள்நாட்டு விமானத்திலும் அதைவிட அதிகமாய்ப் புழக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. அதில் அறிவிப்புக்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டில் மட்டுமே இருந்தன. அட.. சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் போகும் மக்கள் யாரும் தமிழ்பேசுபவர்கள் இல்லையோ என்று சந்தேகம்கூட வந்தது. இத்தனைக்கும் நான் வந்த விமானம் ஜெட் ஏர்வேஸ் என்ற தனியார் விமானம்தான். இதேபோன்ற ஏர்டெகான் உள்நாட்டு விமானத்திலும் இதே கதைதான். அவர்களுக்கு இதுபற்றி ஒரு வரி எழுதிப்போடலாம் என்று நினைத்தேன், இதுவரை எழுதவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வரும்போது ஒரு சுவாரசியமான சம்பவம். டெல்டா விமானத்தில் நுழையும் முன்னர் பணிப்பெண்கள் பயணிகளிடம் புதிதாய் வாங்கிய பொருட்கள் பற்றி விசாரிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னிடம் ஒரு பணிப்பெண் வந்து ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"...நீங்கள் எதில் பேசுவீர்கள், தமிழா?, ஆங்கிலமா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"..இரண்டும்..", இது நான்.&lt;br /&gt;&lt;br /&gt;"..விமானநிலையத்தில் புதிதாய் இப்போது ஏதாவது  வாங்கினீர்களா ?"&lt;br /&gt;&lt;br /&gt;"..ஆமாம்.."&lt;br /&gt;&lt;br /&gt;".... அதை நான் பார்க்கலாமா?, அதன் விலை என்ன?",  கொஞ்சம் சீரியஸாகவே கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"... விலை அதிகமில்லை, ஆனால் உங்களுக்கு அதை இப்போது உங்களிடம் காட்ட முடியாது..",  நானும் சீரியஸாகவே.&lt;br /&gt;&lt;br /&gt;இவன் கொஞ்சம் பிரச்சனை செய்யும் ஆளாக இருப்பான்போல என்று அவர் யூகிப்பதைப் பார்க்க முடிந்தது. அவர் ஏதும் பிரச்சனை செய்யும் முன்னர் நாமே சொல்லிவிடுவது நல்லது என்று நான் வாங்கியதைச் சொல்லிவிட்டேன். சொல்லி முடித்ததும் டக் என்று சிரித்து, விமானத்துக்குள் அனுப்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சிரிப்பில் இவன் சரியான குறும்புக்கார ஆள்தான் என்று நினைப்பது தெளிவாய்த் தெரிந்தது. அப்படி என்னதான் வாங்கினாய் என்று கேட்கிறீர்களா?. அதுதான் தலைப்பிலேயே இருக்கிறது. தலைப்பில் முதலில் இருப்பது இல்லை :-), இரண்டாவதாக, வெஜ் பர்கர். அதுவும் சாப்பிட்டு முடித்தபின்னர் யாரிடம் மீண்டும் காட்ட முடியும் ?, நீங்களே சொல்லுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-112946808016270362?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/112946808016270362/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=112946808016270362' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/112946808016270362'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/112946808016270362'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/10/blog-post_16.html' title='விமானப் பணிப்பெண், வெஜ் பர்கர், நான்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-112941387110758640</id><published>2005-10-15T23:58:00.000+02:00</published><updated>2005-10-16T00:06:58.373+02:00</updated><title type='text'>உன் ஐஸ் கிரீமாய் நானிருந்தால்...</title><content type='html'>அன்று கொஞ்சம் கவலையில் இருந்தார் அந்த நண்பர். என்னவென்று விசாரித்தேன். அவருக்குத் தெரிந்த ஒரு பெரிய மனிதர் பற்றி வருத்தத்தில் இருப்பதாய்ச் சொன்னார். நண்பர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். கவலைக்குக் காரணம் சிரியா நாட்டின் அமைச்சராம், சிலநாட்களுக்கு முன்னால் தற்கொலை செய்து இறந்துவிட்டாராம். சரி, நண்பரின் மூடை மாற்ற எண்ணி, உங்கள் நாட்டின் மக்கள் எப்படி?, குறிப்பாய் இளைய வயது ஆண்கள், பெண்கள் எப்படி என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;".. எங்கள் சிரியா மக்கள் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை, கலகலப்பானவர்கள்தாம், பெண்களையும் சேர்த்துத்தான். ஆனால் அதற்காய் இங்கே ஜெர்மனி போல் ஒரு பெண்ணிடம் அவர் அழகைப் புகழ்ந்து அவருக்கு ஐஸ் வைப்பது சாத்திமில்லை... "&lt;br /&gt;&lt;br /&gt;"..நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதுபோல் அங்கே பலமுறை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள் போலத் தெரிகிறதே..", என்றேன் சுவாரசியமாய்.&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் புன்னகையுடன் தொடர்ந்தார். ".... சில ஆண்டுகளுக்கு முன்னால் கல்லூரியில் படிக்கும்போது பலமுறை முயன்றதுண்டு. ஒரு அனுபவத்தைக் கேளுங்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இந்த ஐஸ்கிரீமாய் நானிருந்தால் என்று சொல்லிப் புன்னகைத்தேன். நான் முழுதும் என்று சொல்லிக்கூட முடிக்கவில்லை, அந்தப் பெண் ஐஸ்கிரீமைக் கீழே வீசி "நச்" என்று நாலு மிதிவிட்டார், ஐஸ்கிரீமைத்தான். ஆளைவிட்டால் போதுமென ஓடிவந்துவிட்டேன்..., அதுசரி இந்தியாவில் எப்படி?..."&lt;br /&gt;&lt;br /&gt;"...இந்தியாவில் பெண்கள், ஆண்கள் எல்லாரும் நல்லவர்கள்தாம். என்றாலும் இதுவரை நான் பெண்களிடம் வம்பு எதுவும் செய்ததில்லையாதலால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று எனக்குத் தெரியாது..", என்றேன் நல்ல பிள்ளையாய் :-).&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-112941387110758640?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/112941387110758640/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=112941387110758640' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/112941387110758640'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/112941387110758640'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/10/blog-post_15.html' title='உன் ஐஸ் கிரீமாய் நானிருந்தால்...'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-112937978159294328</id><published>2005-10-15T14:32:00.000+02:00</published><updated>2005-10-15T14:42:59.220+02:00</updated><title type='text'>துளசியக்கா தினமலரில்</title><content type='html'>எல்லோரும் நல்லா இருக்கீங்களா?. எழுதி சில மாதங்களாகிவிட்டது. இன்னும் கொஞ்ச நாள் போனால் எனது பிளாக்கர் பாஸ்வேர்டே மறந்தாலும் மறந்துவிடும்போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;போனமாதம் கடைசிவரை ஊரில் இருந்தேன், சொந்த ஊரில். மூன்று வருடம் கழித்து சொந்தக் கிராமத்துக்குப் போனால் நிறைய மாற்றங்கள், குறிப்பாய் சிறுவர்களிடம். வீட்டுக்குப் போகும்போது எனது மடிக்கணினியையும் கொண்டுபோயிருந்தேன். ஆயிரக்கணக்கான புகைப்படங்களைக் கணினியில் சேமித்திருந்தேன். கொஞ்சம் ஒளித்துண்டுகளும் கூட உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பல சிறுவர்கள் மடிக்கணினியைப் பார்த்திருக்கவே மாட்டார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். புகைப்படங்களை மடிக்கணியிலிருந்து அவர்களுக்குக் காட்டிக்கொண்டிருக்கும்போது சடாரெனக் கேட்கிறார்கள், கம்ப்யூட்டர் இருக்கு, ஆனா மவுஸ் எங்கே ?. மவுஸை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டேன், தொடும்பலகை வைத்துச் சமாளித்துக்கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம ஊர் வடை, இட்லி, சட்னி, சாம்பார் என ஒரு ரவுண்ட் வந்தேன். சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி என ஒன்றையும் விடாமல் தினமும் சீரியல், சினிமா என்று ஒரு மாதம் பொழுதுபோனதே தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் நாளிதழ்களை கடினப் பதிப்பாய்ப் படித்தேன். தினமலரில் தினமும் ஒரு தமிழ் வலைப்பூ பற்றி எழுதி வாசகர்கள் வாசிக்க வசதியாய் வலைப்பதிவின் இணைய முகவரியையும் கொடுக்கிறார்கள். ஒருநாள் தற்செயலாய்ப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, தனது வலைப்பூவுக்கு வருபவர்களை இவர் விருந்தாளியாகக் கருதுகிறார் என்று ஒரு வலைப்பதிவாளரைப் பற்றி எழுதியிருந்தார்கள். அட.. நமக்கு நன்றாய்த் தெரிந்தவர்போலத் தெரிகிறதே என்று கவனித்துப் பார்த்தால், அது நம்ம துளசியக்கா :). சில வாரங்களுக்கு முன்னால் என்றாவது ஒருநாள் &lt;a href="http://thulasidhalam.blogspot.com/"&gt;துளசியக்காவின்&lt;/a&gt; பதிவில் ஹிட்ஸ் எகிறியிருந்தால் அது தினமலரின் உபயம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜெர்மனிக்கு வந்த புதிதில் வாங்கும் ஒவ்வொரு பொருளின் விலையையும் ஐம்பதால் பெருக்கிப் பார்த்தது நன்றாய் நினைவிருக்கிறது. இப்போது கிராமத்துப் போனால் அங்கே வாங்கிய பொருட்களின் விலைகளை ஐம்பதால் வகுத்துப் பார்த்துச் சந்தோசப்படத் தோன்றுகிறது. உண்மையில் எந்த விலையும் பெரிதாய் மாறிவிடவில்லை, ஆனாலும் இப்படி ஒரு அற்பச் சந்தோசம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளூர் விமானங்களில் பயணம் செய்வது மலிவான ஒன்றாயிருக்கிறது. சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரைக்கு டாக்ஸியில் வருவதைவிட உள்ளூர் விமானத்தில் வந்திறங்குவது மிக மலிவான ஒன்றாகிவிட்டிருப்பது&lt;br /&gt;வசதியாயிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குப் போய்வந்ததைப் பற்றி நிறைய எழுத வேண்டும், சமயம் கிடைக்கும்போது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-112937978159294328?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/112937978159294328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=112937978159294328' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/112937978159294328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/112937978159294328'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/10/blog-post.html' title='துளசியக்கா தினமலரில்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-112006385869848289</id><published>2005-06-29T18:44:00.000+02:00</published><updated>2005-06-29T18:52:04.316+02:00</updated><title type='text'>அப்துல்கலாமின் கல்லூரி நண்பர்</title><content type='html'>இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமுடன் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர் திரு.சம்பத்குமார். இவர் விடுதியில் கலாமுடன் ஒரே அறையில் தங்கியும் இருந்திருக்கிறார். அடுத்த வாரம் கோவைக்கு வரும் கலாம் இவரின் வீட்டில் விருந்து சாப்பிடப் போகிறார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் கலாமுக்குத் திருமணம் செய்யும் எண்ணம் இருந்ததாம்.  அவர் சொல்லும் பழைய நினைவுகள் சுவாரசியமாய் இருக்கின்றன. படிக்க விரும்புபவர்களுக்கு &lt;a href="http://dinamalar.com/2005june29/imp33.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-112006385869848289?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/112006385869848289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=112006385869848289' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/112006385869848289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/112006385869848289'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_29.html' title='அப்துல்கலாமின் கல்லூரி நண்பர்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111919131216097052</id><published>2005-06-19T16:10:00.000+02:00</published><updated>2005-06-19T17:11:57.900+02:00</updated><title type='text'>முத்தொட்டில் - யாருக்காவது தெரியுமா?</title><content type='html'>அந்தக் காலத்துல இந்த முத்தொட்டிலுக்கு ஆசைப்பட்டவர்கள் பலர். அந்தக் காலம் என்றால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இல்லை. ஒரு ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னால்தான். பலர், குறிப்பாய் ஆண்கள் இதைப் பெரிய பெருமையாய்க் கருதினர், பெண்களும்தான். இம்மாதிரி முத்தொட்டில் போடுவது மிகவும் அபூர்வமான ஒன்றாய்க் கருதப்பட்டதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். இதில் பெருவிருப்பம் கொண்டிருந்தோரில் பலர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது வருந்தத்தக்கது :-).&lt;br /&gt;&lt;br /&gt;சரி. முத்தொட்டில் என்பது என்னவென்று சொல்லாமலே நீட்டி முழக்கிக்கொண்டு போகிறாயே என நீங்கள் நினைப்பது புரிகிறது. முத்தொட்டில் என்பது வீட்டில் மூன்று தொட்டில் கட்டியிருப்பதுதான். இதில் என்ன பெரிய விஷேசம் என்று நினைக்கத் தோன்றலாம். யார் நினைத்தாலும் மூன்று தொட்டில் வீட்டில் கட்டிக்கொள்ளலாமே எனக் கேட்க நினைப்பவர்கள் அடுத்தவரியைப் பார்த்துவிட்டுக் கேளுங்கள். மூன்று தொட்டிலிலும் குழந்தை இருக்கவேண்டும். அதுவும் மூன்றுபேரின் குழந்தைகளாய். அம்மா, மகள், மருமகள் என மூன்று பேரும் அவரவர் கணவர்மார்களுடன் ஒரே சமயத்தில் தத்தமது குழந்தையைத் தாலாட்டுவதே இதன் சிறப்பம்சம். ஆண்கள் ஏன் இந்த முத்தொட்டில் மீது ஆர்வமாய் இருந்தனர் என்று இப்போது புரியும். இந்தியாவின் மக்கள்தொகை இந்த அளவுக்கு இன்று இருப்பது ஏனென்றும் கொஞ்சம் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. அது போகட்டும். இப்போதும் யாராவது இந்தியாவில் முத்தொட்டிலில் ஈடுபாடு கொண்டிருக்கிறார்களா என்றுதான் தெரியவில்லை.  வெளிநாட்டில் இது பெரிய விதயமில்லை. ஆனால் வெளிநாட்டுப் பெண்கள் ஐம்பது வயதுக்குமேல் குழந்தை பெறுவதைப் பெருமையாய் நினைக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111919131216097052?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111919131216097052/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111919131216097052' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111919131216097052'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111919131216097052'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_19.html' title='முத்தொட்டில் - யாருக்காவது தெரியுமா?'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111911304110425655</id><published>2005-06-18T18:19:00.000+02:00</published><updated>2005-06-18T18:49:04.606+02:00</updated><title type='text'>டாவின்ஸி</title><content type='html'>கீழேயுள்ளவர்தான் மோனலிசா வரைந்தவர். இத்தாலியின் மிலனோ நகரில் பல காலம் தங்கியிருந்திருக்கிறார். நாங்கள் நண்பர்களுடன் கொஞ்ச நாட்களுக்கு முன்னர் மிலனோ சென்றிருந்தபோது எடுத்த புகைப்படம் இது. ஆங்.. சொல்ல மறந்துவிட்டேன், திருமதி சோனியாவின் சொந்த ஊர் இதுதான். சொந்த ஊர் என்றால் இந்த ஊர் முழுவதும் அவருக்குச் சொந்தமென அர்த்தம் கொள்ளவேண்டாம், அவர் பிறந்து வளர்ந்தது இங்கேதான் என்று சொல்ல வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v226/muthukmuthu/davinci.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v226/muthukmuthu/davinci2.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியங்கள் தவிர பொறியியல், மருத்துவம், அறிவியல் என பல துறைகளிலும் புகுந்து விளையாடிய டாவின்ஸி ஒரு விஞ்ஞானியாக அக்காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லை, காரணம், அவர் கணிதம், லத்தீன் ஆகியவற்றில் முறையான கல்வித்தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்பதுதானாம். இது எல்லாக்காலத்திலும் நடக்கக்கூடியதான், இன்றைய இந்தியக் குடியரசுத் தலைவர் திரு. கலாம் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய அறிவியல் கழகம், பெங்களூரில் பேராசிரியராக வர விரும்பியபோது அங்கு பேராசிரியராய் வருவதற்கு என நிர்ணயிக்கப்பட்டிருக்கும் முறையான தகுதிகள் பற்றிச் சில பேராசிரியர்கள் கேள்வி எழுப்பியதால் அவர் அங்குப் பேராசிரியராய் வருவதில் தடங்கல் ஏற்பட்டதாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் கலாமைப் பேராசிரியராய்ப் பெற்று அந்தப் பெருமையைத் தட்டிச் சென்றுவிட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111911304110425655?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111911304110425655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111911304110425655' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111911304110425655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111911304110425655'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_111911304110425655.html' title='டாவின்ஸி'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111906748515971935</id><published>2005-06-18T05:55:00.000+02:00</published><updated>2005-06-18T06:07:28.123+02:00</updated><title type='text'>அன்னியன்</title><content type='html'>இப்போதுதான் இப்படத்தைத் தியேட்டரில் பார்த்துவிட்டு வருகிறேன். கிட்டத்தட்ட சந்திரமுகி கதைதான். ஷங்கர் ஏன் சந்திரமுகி படத்துடன் இதை வெளியிடவில்லை என்பது இப்படத்தைப் பார்த்தவுடன் அனைவருக்கும் புரியும். நம்ம அல்வாசிட்டி &lt;a href="http://halwacity.blogspot.com/2005/06/blog-post_18.html"&gt;விஜய்&lt;/a&gt; ஏற்கனவே கதையைச் சொல்லிவிட்டார். திரும்ப அதையே நானும் சொல்லிப் போரடிக்க விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்துக் கொதித்த அம்பி என்ற சாதுவான விக்ரம் அன்னியன் என்ற மனிதனாய் பிளவாளுமை கொள்கிறார். தவறு செய்தவர்களை நரகத்தில் கொடுக்கும் தண்டனைகள் என கருடபுராணத்தில் சொல்லியிருக்கும் தண்டனைகளைக் கொடுத்துக் கொல்கிறார். ஒருத்தரை மசால்பூசி எண்ணெயில் வறுத்தெடுக்கிறார். இன்னொருத்தரை அட்டைப்பூச்சிகளை விட்டு ரத்தத்தை உறிஞ்சவைத்துக் கொல்கிறார். எருமை மாடுகளை மிதிக்க வைத்தும் ஒருவரைக் கொல்கிறார். இப்படி விதவிதமாய்க் கொலை செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொலை செய்வதைக்கூட ஒத்துக்கொள்ளாலாம், ஆனால் பலவற்றை இன்னும் கொஞ்சம் யதார்த்தமாய்க் காட்டியிருக்கலாம். பிளவாளுமையிலிருக்கும்போது அன்னியன் கிட்டத்தட்ட 100 கராத்தே(?) வீரர்களை தூக்கிப் பந்தாடி அவர்களைப் பறக்கவிடுவது எல்லாம் ரொம்ப ஓவர். ரஜினி அவ்வாறு பறந்து பறந்து அடிப்பதில் நியாயம் இருக்கிறது. எல்லாரும் இதையே செய்தால் எப்படி? :-).&lt;br /&gt;&lt;br /&gt;சதாவைக் காதலிக்க ரெமோ என்ற இன்னொரு பிளவாளுமையாகவும் உருவெடுக்கிறார். ஐஸ்-க்குள் உறைந்திருக்கும்போது ( அட.. இது நிஜ ஐஸ் கட்டிங்க) திடீரென அப்பாவி அம்பி அன்னியனாய் மாறி கட்டியைத் தூள்தூளாய் உடைத்துக்கொண்டு வெளியே வந்து பிரகாஷ்ராஜின் எலும்பை உடைத்து மாவுக்கட்டுப் போடவைப்பது எல்லாம் கூட கொஞ்ச அதிகம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசில் கோர்ட் அவரைச் சட்டப்படி தண்டிக்கமுடியாததால் குணப்படுத்தும்வரை பாதுகாப்பாய் வைத்திருக்கிறார்கள். இரண்டு வருடத்தில் குணமாகிவிட்டார் என்று நினைத்து வெளியே விடும்போது இதுபோல் இன்னொரு குற்றம் செய்த நபரை ஓடும் ரயிலில் கொன்று வீசுவதுடன் அல்லது வீசிக்கொல்வதுடன் படம் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஏகப்பட்ட காசைக் கொட்டி எடுத்திருக்கிறார்கள். விவேக் காமெடி ரசிக்கும்படி இருக்கிறது. பிரகாஷ் ராஜ் வழக்கம்போல நன்றாய் நடித்திருக்கிறார். சதாவின் நடிப்பும் பரவாயில்லை. கதை மொத்தமே அரைப்பத்திதான். இந்தியன், ஜெண்டில்மேன், நான் சிவப்பு மனிதன் என இதே கதையை இன்னும் எத்தனைநாள்தான் புதுமொந்தையில் பழைய கள்ளாய்த் தருவார்களோ தெரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111906748515971935?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111906748515971935/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111906748515971935' title='29 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111906748515971935'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111906748515971935'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_18.html' title='அன்னியன்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>29</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111887711121617756</id><published>2005-06-16T00:49:00.000+02:00</published><updated>2005-06-16T01:11:51.223+02:00</updated><title type='text'>தென்னிந்தியச் சந்தேகங்கள்</title><content type='html'>இந்தியாவின் வடமாநில மக்களுக்குக் கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வருவோர் எல்லாமே ஒன்றுதான். எல்லோரையும் மதராஸி என்றுதான் அழைப்பது வழக்கம்.  இன்னும் நிறையப் பேர் அங்கு மெட்ராஸ் என்பது ஒரு மாநிலம் என்றே நம்பிக்கொண்டிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த மத்தியப் பிரதேச நண்பர் ஒருவர் தென்னிந்தியர் என்றாலே தமிழர்கள் என்றுதான் பொருள் என்பார், தென்னிந்தியா என்றால் தமிழகத்தைத் தவிர ஆந்திரா, கர்நாடகா, கேரளா என மூன்று மாநிலங்கள் இருக்கின்றன என்ற உண்மை ஆய்வு செய்துகொண்டிருக்கும் அவருக்குக்கூட உணரப்படுவதில்லை. ஏன் இப்படி என்று எனக்குப் புரியவேயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சரி. கிட்டத்தட்ட இதுபோல் இன்னொரு சந்தேகமும் எனக்கு உண்டு.  ஈழத்து நண்பர்களில் பெரும்பாலோர் தமிழகத் திரைப்படங்கள் பற்றிச் சொல்லும்போது தென்னிந்தியப் படங்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். தென்னிந்தியப் படங்கள் என்றால் அது மலையாள, கன்னட, தெலுங்கு மொழிப் படங்களையும் சேர்த்தே குறிக்குமென  அவர்கள் உணர்ந்தே சொல்கிறார்களா என்று தெரியவில்லை.  இன்னும் சில ஈழத்து நண்பர்கள்  "தென்னிந்தியத் தமிழ்த்திரைப்படங்கள்"  என்று ஒருகுழப்பம் தரும் வகையில் கூறுகிறார்கள்.  "வடஇந்தியத் தமிழ்த்திரைப்படம்"  என்ற ஒரு பிரிவு இருந்தால்தானே  இப்பெயர்  சரியானது?, அல்லது தமிழ்நாட்டைத் தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் எங்காவது தமிழ்த் திரைப்படம் தயாரிப்பார்களானால் இப்பெயர் சரிதான். ஆனால் அப்படி ஏதுமில்லாதபோது  "இந்தியத் தமிழ்த்திரைப்படங்கள்"  அல்லது "தமிழகத் திரைப்படங்கள்" என்ற பெயர்தானே சரியாய் வரும்?.  ஈழத்தவர்கள்    மேற்கூறியவாறு சொல்லாமல் ஏன் முதலில் சொன்னவாறு சொல்கிறார்கள் என்ற பெரிய  குழப்பம் வெகுநாட்களாகவே  எனக்கு உண்டு.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111887711121617756?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111887711121617756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111887711121617756' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111887711121617756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111887711121617756'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_16.html' title='தென்னிந்தியச் சந்தேகங்கள்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111885948580901517</id><published>2005-06-15T19:55:00.000+02:00</published><updated>2005-06-16T06:25:04.253+02:00</updated><title type='text'>புதுப் பார்வை - தமிழ்நாடும் சினிமா மோகமும்</title><content type='html'>தமிழக மக்கள் சினிமாக்காரர்களின் மீது தீவிர மோகம் கொண்டவர்கள் என்ற ஒரு கருத்து நெடுங்காலமாய் நம்பப்பட்டுவருகிறது. அது உண்மைதானா?. சினிமாவில் பிரபலமானால் மட்டும் தமிழ்நாட்டின் முதல்வராக ஆகிவிடமுடியுமா?- இதற்குக் கொஞ்சம் ஆழ்ந்து நிதானமாய்ச் சிந்தித்துப்பார்த்தால் "இல்லை" என்பதே பொருத்தமான விடையாக வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்படித்தவுடன் இன்றைய, நேற்றைய தமிழக முதல்வர்களை எடுத்துக்காட்டாய்ச் சொல்லி இதை மறுக்கத் தோன்றலாம். ஆனால் உண்மையின் மறுபக்கத்தைத் தவறவிட்டுவிடுகிறோம். அந்த உண்மைதான் என்ன?. முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர் அனைவரின் அரசியல் செல்வாக்கும் ஒரு கட்சியிடமிருந்து வந்ததேயாகும். அரசியல் செல்வாக்கு என்பதும் மக்களுக்குத் தெரிந்த பிரபலம் என்பதும் வேறு வேறு. இதைப் புரிந்துகொண்டவர்கள் மிக அதிகமானோர் அல்லர். ரஜினி எவ்வளவு பிரபலமோ அதே அளவுக்குச் செந்திலும், கவுண்டமணியும் பிரபலம். அதே அளவுக்குப் பழைய நடிகர்கள் அத்துணை பேரும் பிரபலம். ஆனால், இவர்களின் அரசியல் செல்வாக்கு என்பதற்கு இந்தப் பிரபலத் தன்மை பெரும்பாலும் உதவுவதில்லை. இதை ஏன் பெரும்பாலோர் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள்?.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆர் தமிழக மக்களிடம் புகழ்பெற்றது திரைப்படத்தால் மட்டுமே. இதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அவர் அரசியலில் செல்வாக்குப் பெற்றது திரையால் மட்டுமே அல்ல. முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் பின்புலம் மட்டுமே அவரின் அரசியல் செல்வாக்கிற்கு முதுகெலும்பாய் இருந்தது என்பதைப் பலரும் தவறவிட்டுவிடுகிறோம். ஏனென்றால் எம்ஜிஆர் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரின் சினிமாக்கள்தான். இதுவே உண்மையை நம்மையறியாமல் நமக்கு திரையிட்டு மறைத்துவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்குக் காரணம் திரைப்படங்கள்தாம். ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு எம்ஜிஆர் என்ற முன்னாள் முதல்வரின் செல்வாக்கிலிருந்து வந்ததேயாம். சந்தேகமிருப்பவர்கள் ஜெயலிதா சந்தித்த முதல் தேர்தலை நினைத்துப்பாருங்கள். அதில் ஏன் அவரால் வெற்றி பெறமுடியவில்லை?. ஏனென்றால் எம்ஜிஆரின் அரசியல் பின்புலம் அன்று இரண்டாய்ப் பிரிந்திருந்தது, அதுவே தோல்விக்குக் காரணம். ஆனால், ஜெயலலிதாவின் அடுத்த தேர்தல் வெற்றிக்கு அவருக்குக் கிடைத்த எம்ஜிஆரின் இரட்டை இலையும், அதிமுக என்ற எம்ஜிஆரின் கட்சிப் பெயரும்தான் அடிப்படை. இன்று அவர் அரசியலில் ஆழ வேருன்றியதால் அவருக்கு எம்ஜிஆரின் பெயர் தேவையில்லை. ஆனாலும் இந்த அதிமுக என்ற பெயரும், இரட்டை இலை என்ற சின்னமும் மிக முக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே ஜெயலிதா அதிமுக என்ற பெயரில்லாமல், எம்ஜிஆர் என்ற பின்புலமில்லாமல் தனிக்கட்சி ஆரம்பித்திருந்தால் அவரின் நிலை என்னவாயிருக்கும்?. சந்தேகமே வேண்டாம். மற்ற நடிகர்களுக்கு ஏற்பட்ட கதிதான். அவரின் அரசியல் வெற்றிக்குச் சினிமா காரணமில்லை, எம்ஜிஆரின் பின்புலம்தான் காரணம் என்பது இப்போது நன்றாகவே விளங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சரியான அரசியல் பின்புலமில்லாமல் சினிமாப் பிரபலத்தனமை மட்டுமே போதுமென நினைத்து அரசியலில் இறங்கிய யாரும் தமிழகத்தில் வெற்றி பெற்றதே இல்லை. ஏனென்றால் சினிமாப் பிரபலத் தன்மை என்பது வேறு, அரசியல் செல்வாக்கு என்பது வேறு. இதை மறந்தோரின் கதி கதோகதிதான். அவ்வாறு இறங்கிப் பட்டவர்கள் பலர் தமிழ்நாட்டில் உண்டுதானே?.&lt;br /&gt;&lt;br /&gt;எம்ஜிஆர் அளவுக்கு திரையில் பிரபலமான சிவாஜி கணேசன்( இன்னும் சொல்லப்போனால் எம்ஜிஆரை விட இவருக்குப் பல மட்டத்தில்  சினிமா ரசிகர்கள் அதிகம்), பிரபல கதாநாயகர்களான ராஜேந்தர், பாக்யராஜ் இன்னும் பலர் ஏன் வெற்றி பெற முடியவில்லை?. காரணம் அவர்கள் திரையால் வந்த பிரபலத் தன்மை போதுமென நம்பிக் காலைவைத்தார்கள். இத்தனைக்கும் இவர்களில் சிவாஜி காங்கிரஸ் கட்சியின் அரசியல் பின்புலத்தைக் கொஞ்சம் கொண்டிருந்தார். தமிழகத்தில் காங்கிஸுக்கு எந்த அளவுக்குச் செல்வாக்கு இருந்ததோ அதில் ஒரு பகுதி மட்டுமே அவருக்கு அரசியலில் கிடைத்தது. அதைவிட அதிகமாய் அவருக்குக் கிடைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவிலேயே தனது சினிமாப் பிரபலத்தன்மையை மட்டும் வைத்து அரசியல் செல்வாக்குப் பெற்றவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர். அவர் சினிமா நடிகர் என்ற நிலையைவிட்டு மேலேற்றப்பட்டுக் கடவுளாகவே வணங்கப்பட்டவர், அது ஒரு காலம் :-). அவருக்குப் பின்னால் வந்த சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்குக் காரணம் என்டிஆரின் பின்புலம்தான் என்று சொல்லத் தேவையில்லை. இந்த ஒரு உதாரணத்தைத் தவிர்த்துத் தமிழ்நாடு உள்ளிட்ட வேறு எந்த மாநிலத்திலும் சினிமாவை மட்டும் வைத்து இதுவரை யாரும் வந்ததில்லை. இனிமேலும் யாராவது வரமுடியுமா என்பதும் சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் கருணாநிதியை எடுத்துக்கொண்டால், அவர் இன்றுவரை எந்தத் தேர்தலிலும் அவரின் தொகுதியில் தோற்றதில்லை. காரணம், அவரின் பலமான அரசியல் பின்புலம் மட்டுமே. வைகோ சினிமாவில் இல்லாவிட்டாலும் அவரால் பல தொகுதிகளில் வெற்றிபெற இயலுவது அவரின் அவரின் அரசியல் பின்புலத்தால்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சினிமாப் பிரபலம் என்ற மாயையை நம்பி அரசியலில் இறங்கும் நடிகர் யாராயிருந்தாலும் தமிழகத்தில் அரசியலில் வெற்றி பெறுதல் என்பது குதிரைக் கொம்பே. இதுவே வரலாறு சொல்லும் உண்மை. வரலாறு சொல்லும் உண்மைகளை, அந்தத் தவறுகளை மறந்தவர்கள் மீண்டும் தானே அத்தவறுகளைச் செய்யச் சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111885948580901517?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111885948580901517/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111885948580901517' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111885948580901517'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111885948580901517'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_15.html' title='புதுப் பார்வை - தமிழ்நாடும் சினிமா மோகமும்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111868812670959560</id><published>2005-06-13T20:28:00.000+02:00</published><updated>2005-06-13T20:56:52.400+02:00</updated><title type='text'>இலங்கைக்கு இந்தியாவின் ராணுவ உதவி</title><content type='html'>வலைப்பதிவுகளில் சில சமயம் முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்படுவது கொஞ்சம் மகிழ்ச்சியைத் தருகிறது. &lt;a href="http://mugamoodi.blogspot.com/2005/06/blog-post_12.html"&gt;முகமூடி&lt;/a&gt; தனது வலைப்பதிவில் இந்தியா இலங்கை அரசுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தனது கருத்தையும், அதற்கான காரணங்களையும் தெரிவித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா இலங்கைக்கு ஆக்கப்பூர்வமான உதவி செய்யவேண்டும்(இலங்கை அரசுக்கு மட்டுமல்ல). மக்களைக் கொன்று குவிக்கும் ஆயுதங்களை எந்த நாடு யாருக்குக் கொடுத்தாலும் அது பெரும் கொடுஞ்செயலேயாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது நாட்டின் மக்கள் அனைவரையும் சமமாய்ப் பார்க்கத் தெரியாத ஒரு அரசாங்கத்தின் குரூரமுகம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இலங்கையை விட சிறந்த உதாரணத்தைத் தேடித்தான் பார்க்கவேண்டும். இலங்கை அரசின் மனதை இந்தியா குளிர்விக்க செய்த உதவிகள் பலவற்றுக்கு இலங்கை அரசு செய்த கைம்மாறுகள் சின்னக்குழந்தைக்குக்கூடத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவுக்கு உதவும் வாய்ப்புக்கிடைத்தபோதெல்லாம் இலங்கை அரசு எதிர்நிலையையே எடுத்திருக்கிறது. இதற்குத் தொடர்ந்து பல உதாரணங்களைக் கூறமுடியும். 1971 போரின்போது நடுநிலை வகிப்பதாய்க் கூறிக்கொண்டே பாகிஸ்தானியப் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப வசதி செய்துகொடுத்ததில் இருந்து, இந்தியா ஒவ்வொரு நாளைக்கும் பல கோடிரூபாய் செலவுசெய்து அனுப்பிய அமைதிப்படையைத் திறம்படக் காய்நகர்த்தி இந்தியாவை, ஈழத்தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதுபோல மாற்றியது, சுனாமி நிவாரணம் என்ற பெயரில்  இலங்கையில் அமெரிக்க ராணுவ தளம் அமைக்க முயற்சிநடப்பதுபோல் பலவற்றைச் சொல்ல இயலும். இந்திய உதவியால் உருவான வங்கதேசத்தைக் கடைசியாய் அங்கீகரித்த நாடுகளில் இலங்கை முதலிடம் வகித்தது என்பதும் இங்கு சொல்லத் தேவையில்லை. இந்தியா கச்சுத் தீவை இலங்கைக் கொடுத்தது, அதற்குக் கைம்மாறாய் நூற்றுக்கணக்கான இந்திய மீனவர்களை இதுவரை இலங்கை அரசு கொன்றிருக்கிறது(இன்னும் கொல்லும்).&lt;br /&gt;&lt;br /&gt;இது மிக எளிய கணக்குத்தான். சின்னக் குழந்தைகளுக்குக்கூடப் புரியக்கூடியதுதான். நேற்று, இன்று, நாளை என என்றுமே இலங்கை அரசு இந்தியாவின் நலனுக்கு எதிரானதாக மட்டுமே இருக்கும். ஏனென்றால் இலங்கை அரசோ அதன் பெரும்பான்மை மக்களோ (இரண்டும் வேறு வேறானதா ? ) இன்றைய இந்தியாவுடன் எந்த விதத்திலும் தொடர்புடையவர்களாய் இல்லை. ஆனால் இலங்கையின சிறுபான்மைத் தமிழ்மக்கள் இந்தியாவுடன் நீண்டகாலத் தொடர்பினைக் கலாச்சார ரீதியாக, மொழி ரீதியாகக் கொண்டிருப்பவர்கள். ஈழத்தமிழர்களுக்கும், இந்திய அரசுக்குமிடையில் நிகழ்ந்த பெரிய பெரிய தவறுகள் இலங்கை அரசின் ராசதந்திரத்துக்கு மிகப் பெரிய உதாரணம். ஒரே கல்லில் பல மாங்காய் என்பதாய் அவ்வரசு நகர்த்திய காய் நகர்த்தல் தந்திரத்துக்குப் பலியானது இந்தியா மட்டுமல்ல, ஈழத்தமிழர்களும்தான். கொஞ்சம் நிதானமாய்ச் சிந்திக்கும் எவராலும் இதை எளிதாய்ப் புரிந்துகொள்ள இயலும். இவ்வளவு ஏன்?, அமைதிப்படை இலங்கையில் இருந்த காலத்திலேயே அன்றைய இலங்கை அதிபர் இதை வெளிப்படையாய்ச் சிரித்துக்கொண்டே சொன்னார்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா இலங்கை அரசுக்கு ராணுவ உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும், நாளை இந்தியாவுக்கென ஒரு இக்கட்டான நிலை வந்தால் இலங்கை அரசு எதிர்நிலையையே எடுக்கும் என்பது கடந்த காலத்தைக் கொஞ்சம் திருப்பிப் பார்த்த எவருக்கும் புரியும்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111868812670959560?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111868812670959560/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111868812670959560' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111868812670959560'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111868812670959560'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_13.html' title='இலங்கைக்கு இந்தியாவின் ராணுவ உதவி'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111826742977525421</id><published>2005-06-08T23:41:00.000+02:00</published><updated>2005-06-08T23:50:29.780+02:00</updated><title type='text'>பையனுக்குக் காது குத்தினா தப்பா?</title><content type='html'>குழந்தை நடக்க ஆரம்பிக்கும் முன்பே அதற்குக் காதுகுத்தி கடுக்கன் போட்டுப் பல நூற்றாண்டாய் அழகு பார்த்துக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒருத்தர் தன்னோட  2 வயது பையனுக்குக் காதுகுத்த ஆசைப்பட்டுச் செய்ய அது பலரின் விமர்சனதுக்குள்ளாகியிருக்கிறது. குழந்தை அனுமதியில்லாமல் அதற்கு காதுகுத்துவது நியாயமானதல்ல என்று நிறையப் பேர் விமர்சிக்கிறார்களாம். இது நடந்தது பிரபல கால்பந்தாட்ட வீரர் பெக்காமிற்குத்தான்( அடடே.. Bend it Like Beckham அப்படின்னு ஒரு படம்கூட வந்ததே).&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவாரத்துக்கு முன்னால் தலைமுடியை பின்னால் இழுத்துக் கட்டிப் பையன் காதில் இருக்கும் கடுக்கன் தெரியுமாறு பத்திரிக்கையில் வந்த நிழற்படம்தான் இவற்றுக்கெல்லாம் காரணமாய் இருந்திருக்கிறது. இதுபோல் காதுகுத்துவது சரியா தவறா என இணையத்தில் &lt;a href="http://news.bbc.co.uk/cbbcnews/hi/newsid_4590000/newsid_4598600/4598623.stm"&gt;வாக்கெடுப்பு&lt;/a&gt;க்கூட நடக்கிறது,  இதுவரை ஆறாயிரம்பேருக்கு மேல் ஓட்டும் போட்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகத்துல ஒருசில இடத்துல பையன், பொண்ணுக்குக் கல்யாணம் முடிக்கக்கூட அவங்க சம்மதத்தைக் கேட்குறதில்லை, இதைப்போய் ஒரு பெரிய விஷயமாய் பேசுறாங்களே அப்படின்னு நீங்க நினைக்கலாம். இருந்தாலும் குழந்தைக்கு அதோட சம்மதம் இல்லாம காதுகுத்துறது தப்புத்தானோன்னு சந்தேகம் வர ஆரம்பிக்குது. அது போகட்டும், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு மறக்காம  ஒரு வரி சொல்லுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.scotsman.com/latest.cfm?id=4630507"&gt;சுட்டி 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.channelnewsasia.com/stories/entertainment/view/150507/1/.html"&gt;சுட்டி 2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111826742977525421?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111826742977525421/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111826742977525421' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111826742977525421'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111826742977525421'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_08.html' title='பையனுக்குக் காது குத்தினா தப்பா?'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111807677938823437</id><published>2005-06-06T18:49:00.000+02:00</published><updated>2005-06-06T18:52:59.396+02:00</updated><title type='text'>முற்றுகையிடப்பட்ட ஜெயகாந்தன்</title><content type='html'>தமிழில் பேசாமல் சமஸ்கிருதத்தில் பேசுமாறு ஜெயகாந்தன் முற்றுகையிடப்பட்டார். கோயம்புத்தூரில் நடந்த பாராட்டுவிழாவில் இச்சம்பவம் நடந்தது.  &lt;a href="http://thatstamil.indiainfo.com/news/2005/06/06/jeyakanthan.html"&gt;தட்ஸ் தமிழ்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111807677938823437?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111807677938823437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111807677938823437' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111807677938823437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111807677938823437'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_06.html' title='முற்றுகையிடப்பட்ட ஜெயகாந்தன்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111799805650673258</id><published>2005-06-05T20:36:00.000+02:00</published><updated>2005-06-05T21:06:25.033+02:00</updated><title type='text'>பேய்கள் நடமாடும் இரவில் நான்....</title><content type='html'>பேய்களும், காட்டேறிகளும் வந்திருந்த ஒரு இரவு விருந்தில் நான் கலந்துகொண்டேன். கீழேயுள்ள படம் கொஞ்ச நாட்களுக்கு முன்னால் அங்கே எடுத்தது. ஹலோவீன் விருந்து என்ற பெயரில் இப்படியான கூத்துகள் நடக்கின்றன. நீங்கள் காணும் படத்தில், நடுவில் சக ரத்தக் காட்டேறியுடன் இருக்கும் பேய் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான். :-).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;img src="http://img.photobucket.com/albums/v226/muthukmuthu/muthu_arnt_sugu.jpg" alt="Image hosted by Photobucket.com" /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111799805650673258?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111799805650673258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111799805650673258' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111799805650673258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111799805650673258'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_05.html' title='பேய்கள் நடமாடும் இரவில் நான்....'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111791389520415125</id><published>2005-06-04T21:34:00.000+02:00</published><updated>2006-04-01T20:57:46.186+02:00</updated><title type='text'>ஆழ்மனதின் ஆழத்தில்</title><content type='html'>&lt;img src="http://img.photobucket.com/albums/v226/muthukmuthu/deep1.jpg" alt="Image hosted by Photobucket.com" align="left" /&gt;ஒட்டுதல், கலத்தல், பரிமாற்றமடைதல் போன்ற சுவாரசியமான அம்சங்கள் உலகை அர்த்தமுள்ளதாய் ஆக்குகின்றன. இரண்டு தனியான பொருட்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டுவது மட்டுமல்ல ஈங்கு குறிப்பது. மாறாக, பாலில் கலந்திருக்கும் நீரைவிடுத்து பாலை மட்டும் தனியாய்ப் பிரித்தெடுத்துக்கொள்ளும் அன்னப்பறவையின் இயல்பை ஒத்து, கருத்துக்களும், எண்ணக்குவியல்களிலிருந்து சில பிறரிடமிருந்து நம்மின் மனத்தில் ஒட்டுதலே இங்கு குறிக்கப்படுவது.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த ஒரு மனிதனும் தன்னந்தனியானவனே அல்லன். தானாக வந்த சுயம்புவும் அல்லன். ஒவ்வொரு மனிதனும் ஒரு அதிசயக் கலவை. எல்லா மனிதனிலும் எல்லாமும் இருக்கிறது. ஆனால் கலவையின் சாரத்தின் விகிதாச்சாரம் ஒவ்வொருவருக்கும் மிக வேறுபடுகிறது. அவற்றில் ஆதிக்கம் செலுத்தும் குணமே அம்மனிதனின் இயல்பைப் பெரும்பான்மையாகத் தீர்மானிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தான் பழகிய நண்பர்கள், பகைவர்கள், அன்னியர்கள், கேள்விப்பட்டவர்கள், கேள்விப்படாதவர்கள், குழந்தைகள், விலங்குகள், புத்தகங்கள் என அனைவரின் இயல்பிலும், அனைத்தின் தொகுப்பிலிருந்தும் எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சம் மெதுவாய் நம்மை அறியாமலே நம்மில் கலக்கிறது. ஆழமாய் நம்மை நாமே ஊடுருவிப்பார்த்தால் இதைத் தெளிவாய் உணர இயலும். ஒருவரின் பெரும்பான்மையான குணங்கள், பழக்கங்கள் தாயிடமிருந்தும், தந்தையிடமிருந்தும், நெருங்கிய நண்பர்களிடமிருந்தும், நமது மனம்கூட அறியாமல், திருட்டுத்தனமாய்ப் பாலைக் குடிக்க வரும் பூனையின் நிதானத்துடன் நேரடியாகவும், மறைமுகமாயும் வந்து சேர்ந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு வந்து சேர்ந்த குவியல்களில் விலைமதிக்கமுடியாத வைரங்களும், மாணிக்கங்களும், தங்கப்பேழைகளும் அடக்கம். பட்டை தீட்டப்படாத வைரங்களும் நிறையவே உண்டு. குப்பைகளும், முகஞ்சுளிக்க வைக்கும் நாற்றம் தரும் அழுகிய பொருட்களும், எதற்குமே உதவாத, ஆபத்தில்லா பொருட்களும் குறிப்பிடத் தகுந்த அளவில் சேர்ந்திருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;முழுவதும் சாப்பிட்டு முடித்தாலும் தட்டில் ஒட்டியிருக்கும் துண்டுப் பருக்கைகள்போல், நாம் கடந்துவந்த பாதையின் சுவடுகளும், அது ஏற்படுத்திய தாக்கங்களும் மனதில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில கண்ணிவெடிகள்போல ஆபத்தானவை, இன்னும் சிலவற்றை தூங்குகின்ற எரிமலைகளுடன் ஒப்பிடலாம். இன்னும் சில மிக இனிமையானவை, மனம் மயக்கும் வாசம் தருபவை. கொஞ்சம் சுவாரசியமற்ற வஸ்துக்களும் இங்கே உண்டுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுவடுகள் மட்டுமல்லாமல், நமது வயதின் ஒவ்வொரு பருவமும் மீதமாய் நம்முள்ளே கலந்திருக்கிறது. ஒவ்வொருவனுக்குள்ளும் கள்ளங்கபடில்லாக் குழந்தை இருக்கிறது. மழலைமொழி பேசும் இன்னொரு குழந்தையைப் பார்த்தவுடன் மெதுவாய் விழித்தெழுந்து அதுவே மழலை மொழிபேசுகிறது. எத்தனைக் கடுமையானவனும் தனது குழந்தையைக் கொஞ்சும்போது பார்த்திருக்கிறீர்களா?, அங்கே கொஞ்சிக்கொண்டிருப்பதும், பொருளில்லா மழலைமொழியைப் பேசிக்கொண்டிருப்பதும் அவனல்ல. அது அவனில் மிச்சமிருக்கும் குழந்தை, விழித்தெழுந்து சகவயதுத் தோழனுடன் விளையாட வந்த குழந்தை.&lt;br /&gt;&lt;br /&gt;மிக முதிர்ந்த மனிதனுக்குள்ளும், குழந்தைப் பருவம் மட்டுமல்லாது அவனின் விளையாட்டுப் பருவமும், துணைதேடும் துடுக்குத்தனமான வாலிபப் பருவமும்கூடக் கடைசிவரை கொஞ்சம் மிச்சமாகவே இருக்கிறது. உங்களுக்குள் அவை அவ்வப்போது மெதுவாய் உள்ளிருந்து குரல்கொடுத்து தமது இருப்பை உணர்த்தும். துடுக்குத்தனமான வாலிப மிச்சம் குடும்பப் படகினைக் கவிழ்க்கும்  சுறாமீன்களாய் மாறுவது  மிகச் சாத்தியம், இதற்கான உதாரணங்கள் சிலவற்றையாவது ஒவ்வொருவரும் அறிந்திருப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அழகிய, மனம் தைக்கும் கவிதையைப் படித்தவுடன் உங்கள் மனதின் ஓரத்திலிருந்து தெறிக்கும் மெல்லிய பொறாமையின் வாசத்தை உணர்ந்ததுண்டா?. இதற்கு இல்லையென பதில் சொல்பவர்கள் கவிதை படியாதவர்களாகத்தான் இருக்கவேண்டும். ஆம் என பதில் சொல்வோரே, அந்தப் பொறாமைத் துளி உங்களுக்குள் ஒளிந்திருக்கும் நீங்கள் உணரா கவிஞனிடமிருந்து வந்தது. ஆம், அது சக கவிஞனின் படைப்பைப் பார்த்து நாம் ஏன் இதைப்போல் சிந்திக்கவில்லை என்று ஏங்கும் ஒரு கவிஞனின் ஆதங்கத்தின் வாசம். இனிய  படைப்புக்கள்  எவற்றை ரசிக்கும்போதும்  நீங்கள் விழிப்பாயிருந்தால் உங்களுக்குள் ஒளிந்திருக்கும்  படைப்பாளியின் சுவடையும் உணர இயலும். (இன்னும் வரும்..)&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111791389520415125?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111791389520415125/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111791389520415125' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111791389520415125'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111791389520415125'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_04.html' title='ஆழ்மனதின் ஆழத்தில்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111782332163648943</id><published>2005-06-03T20:19:00.000+02:00</published><updated>2005-06-03T21:46:30.813+02:00</updated><title type='text'>உளவியல் - Role Confusion</title><content type='html'>உலகத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் முக்கியக் காரணம் ஒன்றே ஒன்றுதான். உளவியலில் அதன் பெயர் " Role Confusion".&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனிதரும் உலகில் தினம்தினம் நடக்கும் நாடகத்தில் நடிகராய் நடிக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் உண்டு. சில சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட வேசம் கட்டுவதும் உண்டு. வேடம் கட்டுவதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரச்சினை ஆரம்பிக்கும் இடம் வேடத்தைத் தீர்மானிக்கும் நபர்கள்தாம். பெரும்பாலும் வேடத்தை விருப்பப்பட்டு நாமே தேர்வு செய்கிறோம், அது அவரின் உரிமை. ஆனால், நம்மில் பெரும்பாலோர் அடுத்தவரின் வேடத்தின்மீது ந்மது கவனத்தைத் திருப்பும்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவர் போட்டிருக்கும் வேடத்தின் தன்மை மற்றொருவருக்குப் பிடிக்காததால் வேடத்தை மாற்ற வேண்டும் என்று உடன் நடிப்பவர் அடம் பிடிக்கிறார். அதற்கு இரண்டு பேர் ஆமாம் போடுகிறார்கள். இன்னும் ரெண்டு பேர் எதிர்த்து நிற்கிறார்கள். இப்போது இருவரின் வேடத்தை மட்டும்தான் கணக்கில் எடுத்திருக்கிறோம். ஒரு பத்துப் பேரைக் கணக்கில் எடுத்தால் பெர்முடேஷன், காம்பினேஷன் என கணிதத்தினை பயன்படுத்தி கணக்கிட்டால் வரும் எண்ணிக்கையை விட பிரச்சினை பல மடங்காய் மாறியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேடத்தின் தோற்றத்துக்கே இத்தனை பிரச்சினை வரும்போது ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்போது எப்படி நடிக்கவேண்டும், என்னவாய் நடிக்கவேண்டும் என்பதை அனைவரும் அவர்களுக்குள் தனித்தனியாய்த் தீர்மானிக்கும்போது பிரச்சினைகளின் எண்ணிக்கை உலகமக்கள்தொகையை விடப் பலமடங்கு அதிகமாகியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகில் தினம்தினம், நொடிக்கு நொடி எல்லா மூலையிலும் நடக்கும் பிரச்சினைகள் இந்தக் கதாபாத்திரக் குழப்பத்தால் வந்தவையே, ஆயிரம் வருஷத்துக்கு முன்னால் இது இருந்தது. இன்றைக்கும் இருக்கிறது. இன்னும் பத்தாயிரம் வருஷம் கழித்தும் இது இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தவரின் பாத்திரம் நம்மைப் பாதிக்காமல் இருந்தபோதிலும் தான் விரும்பியவாறு மாற்றச் சொல்லி அடம்பிடிக்கும் அக்கிரமக்காரர்கள் உலகின் அழிவுகளுக்கு ஆரம்பப்புள்ளியாய் இருப்பார்கள். உலகின் ஒவ்வொரு மனிதனின் மனநிம்மதிக்கும், அமைதியான வாழ்வுக்கும் இடையூறுகளாய் இருப்பவர்களும் இவர்களே. அடுத்தவரின் பாத்திரத்தைத் தீர்மானிக்கும் உரிமை தனக்கிருப்பதாய் மூர்க்கத்தனமாய், கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் செய்யும் செயல்கள்தாம் நாம் தினம் தினம் பார்ப்பது, படிப்பது, கேட்பது, சில சமயம் &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;நாம்&lt;/span&gt; &lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;செய்வதும்&lt;/span&gt;.&lt;br /&gt;&lt;br /&gt; நமக்குத் தெரிந்த, அறிந்த, செய்த, புரிந்த பிரச்சினைகளை இப்போது கொஞ்சம் ஒரு கணம் நமக்குள்ளேயே எண்ணிப்பார்த்து இந்த உளவியல் தத்துவத்தை நாமாகவே மதிப்பீடு செய்துகொள்ளலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111782332163648943?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111782332163648943/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111782332163648943' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111782332163648943'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111782332163648943'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/role-confusion.html' title='உளவியல் - Role Confusion'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111773118081918872</id><published>2005-06-02T18:37:00.000+02:00</published><updated>2005-06-02T18:53:00.826+02:00</updated><title type='text'>ஹாலிவுட்- கல்லா கட்டும் இந்திய சினிமா</title><content type='html'>ஹாலிவுட் திரைப்படங்களின் அவுட் சோர்ஸிங்  வேலைகள் இந்தியா பக்கம் வர ஆரம்பித்துள்ளன. குறைந்த சம்பளம், திறமையான ஆட்கள் போன்ற பல சாதகமான அம்சங்களால் பல துறைகளின் வேலைகள் வளர்ந்த நாடுகளிலிருந்து அடுத்த நாடுகளுக்கு  அனுப்பப்படுவது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த அவுட் சோர்ஸிங் வேலைகளுக்குக் கவர்ச்சிகரமான இடமாய்  இந்தியா  இருந்து வருகிறது.  இந்த வகையில் இப்போது  ஹாலிவுட் சினிமா சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வேலைகள் இந்திய மென்பொருள் நிறுவனங்களுக்கு வரத் துவங்கியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியப் பாரம்பரிய கதாபாத்திரங்களின் அனிமேசன் படங்களும்  ஹாலிவுட்டின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில்  பல பில்லியன் டாலர் வருமானம் இவ்வகையில்  வரும் சாத்தியம் பிரகாசமாய் இருப்பதாய்க் கணிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்வமுடையவர்களுக்காக&lt;br /&gt;&lt;a href="http://us.rediff.com/money/2005/mar/21spec1.htm"&gt;ரெடீஃப்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://dinamalar.com/2005june02/imp17.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.atimes.com/atimes/South_Asia/GD21Df05.html"&gt;சுட்டி3&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://malagigi.cddc.vt.edu/pipermail/icernet/2004-February/002787.html"&gt;சுட்டி4&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111773118081918872?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111773118081918872/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111773118081918872' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111773118081918872'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111773118081918872'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post_02.html' title='ஹாலிவுட்- கல்லா கட்டும் இந்திய சினிமா'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111768290062060506</id><published>2005-06-02T05:20:00.000+02:00</published><updated>2006-03-15T05:57:15.380+01:00</updated><title type='text'>கலைஞர் கருணாநிதிக்கு  நோபல் பரிசு ??</title><content type='html'>மிகச் சுவாரசியமான விதயங்கள் அவ்வப்போது ஆங்காங்கே தென்படுவதுண்டு. &lt;a href="http://dinakaran.com/daily/2005/Jun/02/others/thagaval.html"&gt;தினகரன் - இன்று ஒரு தகவலில்&lt;/a&gt;    வந்திருக்கும் கட்டுரை இது.  படித்துப் பயன் பெருக :-)).&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111768290062060506?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111768290062060506/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111768290062060506' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111768290062060506'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111768290062060506'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/06/blog-post.html' title='கலைஞர் கருணாநிதிக்கு  நோபல் பரிசு ??'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111756808551254166</id><published>2005-05-31T21:17:00.000+02:00</published><updated>2005-05-31T21:34:45.550+02:00</updated><title type='text'>ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி இல்லை</title><content type='html'>" ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானியா ?  விஞ்ஞானிக்கு எதிர்ப்பதமாக இவரைவிட ஒருவரைக் கற்பனை செய்வது மிகக் கடினமானது.  ஐன்ஸ்டீன்  கொஞ்சம் நன்றாய் வயலின் வாசிக்கக்கூடியவர், வரும் 1940 ஆம் ஆண்டுகளுக்குள் ரிலேடிவிடி தத்துவம் ஒரு நகைச்சுவையாகக் கருதப்படும். கதைகளில் வரும்  ஆண்டர்சன், கிரிம் மற்றும் மட் ஹட்டர் இவர்களுடன் ஐன்ஸ்டீன் ஏற்கனவே இறந்து அவர்களுக்குப் பக்கத்திலேயே புதைக்கப்பட்டுவிட்டார்..."&lt;br /&gt;-  George Francis Gillette, creator of the "backscrewing theory of  gravity,"1929.&lt;br /&gt;&lt;br /&gt;கதையைப் பாருங்கள்.  ஐன்ஸ்டீன் காலத்தில் வாழ்ந்த சகவிஞ்ஞானியின் கருத்துத்தான் இது  :-).&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111756808551254166?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111756808551254166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111756808551254166' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111756808551254166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111756808551254166'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_31.html' title='ஐன்ஸ்டீன் ஒரு விஞ்ஞானி இல்லை'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111741114441982342</id><published>2005-05-30T01:52:00.000+02:00</published><updated>2005-05-30T01:59:04.426+02:00</updated><title type='text'>கொச்சி விமான நிலையம் - கூடுதல் பாதுகாப்பு</title><content type='html'>இந்தியப் புலனாய்வு அமைப்புக்குக் கிடைத்த தகவலின்படி கொச்சி விமான நிலையத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.  கொச்சி விமானநிலையம்  முழுவதும் மத்தியத் தொழில்பாதுகாப்புத் துறையினரின் பல அடுக்குப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாய் UNI செய்திகளை  மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.deepikaglobal.com/search_newsdetail.asp?newscode=105299"&gt;சுட்டி 1&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://dinamalar.com/2005may30/fpnews1.asp"&gt;சுட்டி 2&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111741114441982342?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111741114441982342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111741114441982342' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111741114441982342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111741114441982342'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_30.html' title='கொச்சி விமான நிலையம் - கூடுதல் பாதுகாப்பு'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111730337530425942</id><published>2005-05-28T19:54:00.000+02:00</published><updated>2005-05-28T20:19:14.683+02:00</updated><title type='text'>அனாமதேயப் பிரச்சினைகள் - யோசனைகள்</title><content type='html'>தற்காத்துக் கொள்ளல் என்பது பிரச்சினையைத் தற்காலிகமாய்த் தவிர்க்க மட்டுமே உதவும். நோயின் தீவிரத்தைக் குறைத்து அதன் தொல்லையிலிருந்து அப்போதைக்கு விடுபடுவது போன்றது அது. அது சரியான தீர்வல்ல என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். நோயின் அடிவேர் கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவது அவசியம்; அது சில சமயம் அறுவைச் சிகிச்சையாகவும் இருக்கலாம். தற்காத்தலை விட எதிர்த்தாக்குதல் சிறந்த பலனிக்கும் என்பதால் இரண்டாவதைச் சிறந்த முறையாகவே கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும், அனாமதேயமாய் அசிங்கங்களயும், அபாண்டங்களையும் தெளிக்கும் அந்த நபர்(கள்) தொடர்புடைய விதயங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(1)ஒரு தமிழராகத்தான் இருக்க வேண்டும், அல்லது குறைந்த பட்சம் தமிழ் நன்றாய் எழுதப்படிக்கக்கூடியவர் என்பதில் சந்தேகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;(2)இதுபோல் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருப்பது மிகச் சாத்தியமானதே.&lt;br /&gt;&lt;br /&gt;(3) வலைப்பதிவுகள் அவருக்கு மிகப் பரிச்சயம் என்பதோடு, அவர் தமிழ்வலைப்பதிவோர் பலருக்கும் அறிமுகமானவராயும்  இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;(4)அவர் ஒவ்வொரு முறை பின்னூட்டமிடும்போதும் தனது அசிங்கமான சொற்களுடன் தனது ஊர், நாடு, ஐ.பி முகவரி ஆகியவற்றையும் அவருக்குத் தெரியாமல் சேர்த்தே பதிகிறார் ( மறைமுகமாய்).&lt;br /&gt;&lt;br /&gt;(5) இதுபோல் வந்த சில பின்னூட்டங்களின்மூலம் நண்பர்கள் சிலர் துப்பறிந்து அவ்வாறு செய்தவரின்(களின்) ஐபி முகவரியை(களை) கண்டறிந்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;(6) இதுபோன்ற பின்னூட்டங்களை இடுபவர்களின் ஐபி முகவரிகளைக் கண்டறியத் தமிழ்மணம் உதவுவது சாத்தியமானதா என்று உறுதியாய்த் தெரியவில்லை. காசியின் கருத்து இங்கே முக்கியமானது.&lt;br /&gt;&lt;br /&gt;(7) இலவசமாய்க் கிடைக்கும் extreme track, nedstat மற்றும் இன்ன பிறவும் இவ்விதயத்தில் உதவிகரமாய் இருக்கும். இதுபோன்றவற்றைப் பயன்படுத்துபவர்களின் கருத்தும், அவற்றில் எது சிறந்ததாய் இருக்கும் என்ற யோசனையும் வரவேற்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;(8) இதுபோன்ற பின்னூட்டமிடுவது குற்றமென சட்டமியற்றப்பட்டிருப்பது அவ்வாறு பின்னூடமிடுபவர்களுக்குத் தெரிந்ததுதானா என்று தெரியவில்லை. ஒரு சகவலைப்பதிவாளரளின் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதென்பது மிகக் கசப்பான ஒன்று, அதை நம்மில் பலரும் விரும்பவில்லை, அவரின் ஐபி முகவரியோ அல்லது அவர் யாரெனத் தெரிந்தாலோ இப்பிரச்சினையின் பெரும்பகுதி தீர்க்கப்பட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;(9) சில தளங்களில் ஒவ்வொரு முறை பின்னூட்டமிடும்போதும் முதலில் அவரின் ஐபி முகவரியும் அதையடுத்து நாம் எழுதுவதும் பதிவாகும் ( உதாரணம்: forum hub ). அதேபோல் அனைத்து வலைப்பதிவுகளிலும் செய்வது சாத்தியமானதா என்பது ஆராயப்படவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;(10) இதுவரை வந்த இத்தகைய பின்னூட்டங்களின் ஐபி முகவரிகளைப் பட்டியலிடுவது மிகப் பயனுள்ளதாய் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற பதிவின் தொடர்ச்சியாய் இதை எழுதியிருக்கிறேன். இன்னும் இது தொடர்பான யோசனைகள் நண்பர்களிடம் வரவேற்கப்படுகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111730337530425942?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111730337530425942/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111730337530425942' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111730337530425942'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111730337530425942'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_28.html' title='அனாமதேயப் பிரச்சினைகள் - யோசனைகள்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111714424058800293</id><published>2005-05-26T23:45:00.000+02:00</published><updated>2005-05-27T01:03:31.396+02:00</updated><title type='text'>அனாமதேயப் பின்னூட்டங்கள் வலைப்பதிவில்</title><content type='html'>பிரபஞ்சத்தின் சீர்மையற்ற தனமை(&lt;a href="http://www.google.com/url?sa=U&amp;start=4&amp;amp;q=http://www.chiark.greenend.org.uk/%7Esbleas/creative/entropy/&amp;e=7388"&gt;&lt;b&gt;Entropy&lt;/b&gt;&lt;/a&gt;) தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்பது அறிவியல் விதிகளுள் ஒன்று. இதில் விலக்காவது எதுவும் இல்லை. தமிழில் சில பத்து வலைப்பதிவுகள் இருந்தவரை பெரிய பிரச்சினை என எதுவும் இல்லை. இன்றைக்குப் பல நூறு என்ற எண்ணிக்கையைத் தொட்டவுடன், மேலே குறிப்பிட்ட அறிவியல் விதிக்கு உட்பட்டு நடக்கிறது. இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஒரு நாடு என எடுத்துக்கொண்டால் மக்கள்தொகைதான் பலம்; அதுதான் பலவீனமும்கூட. வலைப்பதிவுக்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சநாட்களாய் அனாமதேயப் பின்னூட்டங்கள் மூலம் தொந்தரவு கொடுக்கும் நபர்(கள்) வேலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார்(கள்). &lt;a href="http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html"&gt;டோண்டு&lt;/a&gt; ஒரு பதிவு இதுபற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு மட்டுமல்லாமல் மேலும் பல நண்பர்களுக்கும் இதே பிரச்சினை இருந்து வருகிறது. ஒரு முறை &lt;a href="http://wandererwaves.blogspot.com/2005/05/blog-post_06.html"&gt;பெயரிலியின்&lt;/a&gt; பதிவில் அனாமதேயமாய்த் திட்டி ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அவர் அதை எழுதியவரின் ஐபி முகவரியைத் துப்பறிந்து எழுதியிருந்தார். &lt;a href="http://karupu.blogspot.com/2005/03/blog-post_26.html"&gt;கறுப்பி&lt;/a&gt;, துளசி, ரோசாவசந்த், காஞ்சி பிலிம்ஸ் தவிர இன்னும் பலருக்கு இந்த மாதிரியான அனுபவம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அனாமதேயமாய்க் கருத்தெழுவது ஒரு பிரச்சினையே இல்லை, ஆனால் அது பிறரின் மூக்கைத் தொடும் அளவுக்கு நீள்கிறது என்பதுதான் பிரச்சினை. அனாமதேயமாய் எழுதும்போது தனது கருத்தை மட்டும் சொன்னால் யார்தான் தவறாய் எடுத்துக்கொள்ளப்போகிறார்கள். தனது கருத்தைச் சொல்லும்போது அவர் அடுத்தவரின் பெயர் என்ற போர்வையில் வந்தாலோ, பின்னூட்டம் என்ற பெயரில் அருவருப்பைத் தெளித்தாலோ அது வரவேற்கத்தக்கதல்ல; கடுமையாகக் கண்டிக்கத் தக்கது. அவர் யாரென்ற உண்மை வெளியில் அனைவருக்கும் காட்டப்பட வேண்டியது மிக அவசியம். அது தமிழ் வலைப்பதிவுலகின் இடையூறுகளைக் களைவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விதயம் நிகழும்போது அது பிடிக்கவில்லையென்றால், அது தவறாக இருந்தால் அது நிறுத்தப்பட வேண்டும் என்று பாதிக்கப்படுபவர் வலியுறுத்துவது மிக நியாயமான ஒன்று, அது அவரின் ஆதார உரிமை. இதற்கு ஒரு சரியான தீர்வைக் காண்பது மிக அவசியமான ஒன்று. இத்தகைய அனாமதேயப் பின்னூட்டங்கள் தமிழ் வலைப்பதிவின் நலத்திற்கு பெருந்தீங்கு செய்யக்கூடியவை- நேரடியாயும் , மறைமுகமாயும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகம் மிக வேகமாய் முன்னேறி வருகிறது. மின்வெளியில் ஒவ்வொருவரும் யாரென்று தெரியாத நபர்கள்தாம் என்பதுபோல் தெரிந்தாலும் அது உண்மையில்லை. ஒவ்வொருவரும் எந்த ஊரில் இருந்து மின்வெளியில் கலக்கிறார் என்பது ஒவ்வொரு விநாடியும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. நமக்கு வரும் &lt;a href="http://muthukmuthu.blogspot.com/2003/12/ip.html"&gt;மின்னஞ்சல்களில்&lt;/a&gt; இருந்து, நம்முடன் மின்னரட்டை செய்வோர் வரைக்கும் இது பொருந்தும். ஒவ்வொருவர் இடும் பின்னூட்டத்திலும் அவரின் கருத்துக்கள் மட்டும் பதிவாவதில்லை, அத்துடன் அவர் எந்த நாட்டில், எந்த ஊரில், எந்த நேரத்தில், எந்த நிறுவனம் வழங்கும் இணைய வசதியைப் பயன்படுத்தி்ப் பதிகிறார் என்ற தகவல் ஒவ்வொரு நொடியும் துல்லியமாய்ப் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. இணைய வசதி வழங்கும் நிறுவனம் அவர் யாரென மிகத் துல்லியமாய் காட்டும் வசதி கொண்டது என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்ற மொழிகளை விட தமிழ் வலைப்பதிவுகளுக்குப் பல சாதகமான, அருமையான அம்சங்கள் உள்ளன. அதில் முண்ணனி வகிப்பது மொத்தப் பதிவுகளின் ஒருங்கிணைப்பு என்பதே. உலகில் ஒரு மொழியின் நூற்றுக் கணக்கில் இருக்கும் மொத்த வலைப்பதிவுகளையும் முழுவதும் ஒருங்கினைக்கும் வசதி தமிழைத்தவிர வேறு மொழிக்கு இருக்குமா என்பது சந்தேகமே, பெரும்பாலும் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். இவ்வசதி தமிழார்வமுடைய, அர்ப்பணிப்புச் சிந்தனையுடைய சிலரால் மிகத் திறம்பட நேரம், பொருள், சொந்த உழைப்பு ஆகியவை மூலம் படிப்படியாய்க் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. அனைவரும் தமிழ் வலைப்பதிவுகளின் வளர்ச்சிக்கு, உதவாவிட்டாலும் அதன் வளர்ச்சிக்குத் தடையாய் எவரும் இருக்கக்கூடாது என்று கட்டாயப்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை.&lt;br /&gt;&lt;br /&gt;அனாமதேயத் தொந்தரவுகளுக்கான தீர்வுகள், பிரச்சனையைத் தீர்ப்பதறகான யோசனைகள் நண்பர்களிடம் எதிர்பார்க்கப்படுகின்றன. எனது யோசனைகள் மற்றும் கருத்துக்கள் கொஞ்சம் பெரிதாய் இருப்பதுபோலத் தெரிவதால் அதை அடுத்த பதிவாய்ப் பதிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111714424058800293?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111714424058800293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111714424058800293' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111714424058800293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111714424058800293'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_26.html' title='அனாமதேயப் பின்னூட்டங்கள் வலைப்பதிவில்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111672743623637900</id><published>2005-05-23T02:29:00.000+02:00</published><updated>2005-05-23T01:50:08.783+02:00</updated><title type='text'>நவீன பாமர ரசிகர்கள்</title><content type='html'>தமிழர்களுக்கு என்று சில சிறப்பம்சங்கள் உண்டு. இந்தச் சிறப்பம்சங்களைத் தமிழர் என்ற சிறிய வட்டத்தைத் தாண்டிப் பிற மொழி, நாடு, இனம் ஆகியவற்றுக்கும் நீட்டிப்பது சாத்தியமானதாயும் இருக்கலாம். புகழ்பெற்ற ஒருவர் என்ன சொன்னாலும் அதற்குத் தேவைக்கதிகமான முக்கியத்துவம் கொடுப்பது, அவருக்குச் சற்றும் சம்பந்தமில்லாத துறைகளிலும் அவரின் கருத்துக்களை எதிர்பார்ப்பது எனப் பட்டியல் பெரிதாய் நீளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வகையில் திரைப்பட நடிகர்களை நிஜத்திலும் கதாநாயகர்களாய், சொர்க்கத்தில் இருந்து குதித்தவர்களாய்ப் பார்க்கும் பாமர ரசிகர்களின் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த வகைப் பாமர ரசிகர்கள் படிப்பினால் மட்டுமே தீர்மானிக்கப்படுபவரல்லர் - கல்வியறிவு குறைந்த பாமர ரசிகர்களின் எண்ணிக்கையே மிக அதிகம் என்ற போதிலும். பட்டம் பல பெற்ற படிப்பாளிகளும் கூடச் சிலசமயம் இந்தவகை ரசிகர்களாய் இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;திரை தவிர்த்த பல துறைகளிலும் இந்தப் பாமரரசிகர்களின் எண்ணிக்கை குறைந்ததில்லை. ஒருவகையில் திரைசார் பாமர ரசிகர்கள் எளிதாய்ப் புரிந்துகொள்ளப்படுபவர்கள். ஆனால் இதர சில துறைகளின் இப்படிப்பட்ட ரசிகத்தன்மைகள் புரிந்துகொள்ள மிகக் கடினமானவை. இந்த வகை ரசிகர்கள் சமுதாயத்தில் மிக மேல்தட்டில் இருப்பவர்கள். ஆன்மீகத்துறையில் பாமர ரசிகர்களாய் ஏமாறுபவர்களின் தகுதிகள் அதிரவைக்கும் அளவுக்கு உயரியவை. விஞ்ஞானி, பேராசிரியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி என ஆரம்பித்துச் சிலசமயம் நாட்டின் மிக உயரிய பதவிவரை எதுவும் விடுபட்டவையாய் இருப்பதில்லை. சமயங்களில் இது கசப்பாய் இருந்தாலும் இதுதான் யதார்த்தமாய் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு துறையில் புகழ்பெற்ற ஒருவர் அத்துறையின் ஒரு சிறுதுளி மட்டுமே என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து அவருக்கும், முழுமையான அத்துறைக்குமுள்ள மிகப்பெரிய வித்தியாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் நகர்த்திக் கடைசியில் அவர்தான் அந்தத் துறை என்பதுபோல் நம்பும் அளவுக்குப் போய்விடும் ரசிகனைப் பாமர ரசிகன் என்று மட்டுமே சொல்லுவது சரியானதா என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்படியான கூத்துகள் நடப்பதில் இலக்கியம், எழுத்து போன்ற துறைகள் விதிவிலக்குகளாய் இருப்பதில்லை என்பது சமீபகாலமாய் மீண்டும் நிரூபணமாகிவருகிறது. வளரும் ஒருவரை வளர்த்தெடுக்கச் சொல்லப்படும் பாராட்டுக்களுக்கும், வளர்ந்த ஒருவரின் திறமையை அங்கீகரிக்கும் புகழுரைக்கும், வளர்ந்த ஒருவரின் கருத்தைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதற்குமான வேறுபாட்டைக் காட்டும் எல்லைக் கோடுகள் மிகமிக மெல்லியவை. அவை மிக மெல்லியவை என்பதாலேயே கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ரசிகன், வாசகன் தன்னுடைய படைப்புக்கு ரசிகன் என்பதால் அவன் படைப்பாளிக்கு எந்த விதத்திலும் குறைந்து போய்விடுவதில்லை என்ற குறைந்த பட்ச உண்மையைக் கூடப் படைப்பாளி மறந்திருந்தாலும் இந்தப் பாமர ரசிகர்கள் அதை உணரமாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளியிடம் தரமான படைப்பை மட்டுமே எதிர்பார்ப்பதில் தவறே இல்லை. தரமான அவரின் படைப்பை அங்கீகரித்துப் பாராட்டுவதிலும் தவறே இல்லை; அது அவசியமான ஒன்று. ஆனால் படைப்பாளியிடம் எதை எதையோ எதிர்பார்த்துக் கடைசியில் அவையெல்லாம் நம்மிடமிடமிருக்கிறதுபோலும் என்று படைப்பாளியை நம்பவைக்குமளவுக்குத் தள்ளுவது படைப்பாளிக்கும், அத்துறைக்கும் ஆரோக்கியமான விதயமே இல்லை. இதனால் ரசிகனுக்கு நன்மையா, தீமையா என்பது வேறு விஷயம்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111672743623637900?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111672743623637900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111672743623637900' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111672743623637900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111672743623637900'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_23.html' title='நவீன பாமர ரசிகர்கள்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111677144546089706</id><published>2005-05-22T15:54:00.000+02:00</published><updated>2005-05-22T16:25:21.416+02:00</updated><title type='text'>ஜெ -  குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண்</title><content type='html'>தமிழகத் தேர்தல் நெருங்குகிறது. பல பரபரப்பான அறிக்கைகளை, சீரியஸான அறிக்கைகளை, நகைச்சுவையான அறிக்கைகளை, வாக்குறுதிகளை அடிக்கடி இனிமேல் கேட்க முடியும். கீழேயுள்ள அறிக்கை எந்தவகையைச் சார்ந்தது எனப் படிப்பவர்களே முடிவுசெய்துகொள்ளவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: left; color: rgb(0, 102, 0);"&gt;எனது உயிரைப் பறிக்கும் பொறுப்பை விடுதலைப் புலிகள், தற்கொலைப் படையை சேர்ந்த ஒரு வெடிகுண்டு பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனர் என்று தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டி பெட்ரோல், டீஸல், மருந்துகள் முதலிய பொருட்களை இலங்கைக்கு திருட்டுத்தனமாக கடத்துவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழக்தை தொடர்ந்து ஒரு தளமாக பயன்படுத்தி வருகிறது என்று சில பத்திரிகைகள் பிரதானமாக தலைப்பிட்டு செய்திகள் வெளியிட்டுள்ளன.&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பதைப் போன்று ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் சில பத்திரிகைகள் இதனைப் பெரிது படுத்தியுள்ளன. இது முற்றிலும் ஆதாரமற்றதாகும்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(0, 102, 0);"&gt;தமிழக அரசு, விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு எதிராக உறுதியான சமரசத்திற்கு இடமில்லாத நிலைப்பாட்டை எடுத்து வருகின்ற நிலையில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு தமிழகத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருப்பதை போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் தீயநோக்கிலான இந்த முயற்சி எனக்கு ஆழ்ந்த கவலையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது என்று உள்துறை அமைச்சருக்கு நான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். &lt;/span&gt;முழுவதும் படிக்க &lt;a href="http://thatstamil.indiainfo.com/news/2005/05/22/jaya.html"&gt;தட்ஸ் தமிழ் டாட் காம்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111677144546089706?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111677144546089706/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111677144546089706' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111677144546089706'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111677144546089706'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_111677144546089706.html' title='ஜெ -  குறிவைக்கும் வெடிகுண்டுப் பெண்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111671675957178635</id><published>2005-05-22T01:02:00.000+02:00</published><updated>2005-05-22T01:07:33.626+02:00</updated><title type='text'>சொர்க்கத்திலிருந்து நல்ல செய்தி</title><content type='html'>சுப்புவும் , குப்புவும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே கிரிக்கெட் பைத்தியங்கள். இன்று நேற்றல்ல 50 வருடங்களாக எந்த கிரிக்கெட் போட்டியையும் பார்க்காமல் தவற விட்டதில்லை. இருவருக்கும் இப்போது வயது மிக அதிகமாகிவிட்டது. அவர்களுக்கு இப்போதுள்ள கவலையெல்லாம் சொர்க்கத்திலும் கிரிக்கெட் இருக்குமா என்பதுதான். எனவே யோசித்து ஒரு முடிவுக்கு வ்ந்தார்கள் . முதலில் யார் இறந்தாலும் சொர்க்கத்தில் கிரிக்கெட் விளையாட்டு உண்டா என்பதை மற்றவருக்குச் சொல்லிவிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் ஒருநாள், இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்ற விளையாட்டைப் பார்த்துவிட்டு சுப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது மாரடைப்பு வந்து சந்தோஷமாக இறந்துபோனார். இது நடந்த சில சில நாட்கள் கழிந்து குப்பு தூங்கிக்கொண்டிருக்கும்போது அவர் தலைமாட்டில் ஒரு குரல்,&lt;br /&gt;&lt;br /&gt;" .... குப்பு ..! எழுந்திரு .. நான் சுப்பு வந்திருக்கிறேன் .."&lt;br /&gt;&lt;br /&gt;" ஆ... என்ன ஆச்சரியம் .. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை .. "&lt;br /&gt;&lt;br /&gt;"... சரி .. நான் உனக்கு ஒரு சந்தோஷமான விஷயமும் , வருத்தமான விஷயமும் சொல்லப்போகிறேன் , நீ  எதை முதலில் கேட்க விரும்புகிறாய் ...?"&lt;br /&gt;&lt;br /&gt;" .. அதெல்லாம் இருக்கட்டும்டா ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டா அதை முதலில் சொல் .. "&lt;br /&gt;&lt;br /&gt;" ... சொர்க்கத்தில் கிரிக்கெட் உண்டு ... அதுதான் நான் உனக்குச் சொல்ல வந்த சந்தோஷமான விஷயம் ... "&lt;br /&gt;&lt;br /&gt;"... சரி இப்போது அந்த சோகமான விஷயத்தையும் சொல் .... "&lt;br /&gt;&lt;br /&gt;" ... அது சோகமான விஷயம்தானா என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகமுண்டு. எப்படியிருந்தாலும் அது சந்தோஷமான விஷயமா அல்லது சோகமான விஷயமா என்பதை நீதான் முடிவு செய்யவேண்டும். அந்த விஷயம் என்னவென்றால், நாளைக் காலையில் சொர்க்கத்தில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன் ..... "&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111671675957178635?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111671675957178635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111671675957178635' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111671675957178635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111671675957178635'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_22.html' title='சொர்க்கத்திலிருந்து நல்ல செய்தி'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111663216730107709</id><published>2005-05-21T01:31:00.000+02:00</published><updated>2005-05-21T01:36:53.266+02:00</updated><title type='text'>உள்ளாடையுடன் சதாம் ஹூசைன்</title><content type='html'>விநாயகர் படத்தை பீர் பாட்டிலில் பயன்படுத்தியது, குரானை அவமதித்தது என்று பிரச்சினைகள் கிளம்பி ஒரு கலக்குக் கலக்கிவரும் நிலையில் இப்போது புதித்தாய் இன்னொரு பூதம் கிளம்பியுள்ளது. சதாம் ஹுசைன் உள்ளாடையுடன் தனது பேண்டைத் துவைத்துக்கொண்டிருக்கும் படம் பிரிட்டன் நாளிதழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சதாம் மிக ரகசியமான இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் படம் எப்படி எடுக்கப்பட்டது எனப் பலரும் வியப்புத் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்டகன் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும்போதிலும் நாளை மீண்டும் இதே போன்ற படங்களை வெளியிடப்போவதாய் அந்த நாளிதழ் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://msnbcmedia.msn.com/j/msnbc/Components/Photos/050520/050520_saddam_hmed_330a.h2.jpg"&gt;சதாமின் போட்டோ பார்க்க&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://dinamalar.com/2005may21/imp7.asp"&gt;தினமலர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.google.com/news?hl=en&amp;ned=us&amp;amp;q=Saddam+Photos&amp;amp;btnG=Search+News"&gt;கூகிள் செய்தித் தேடல்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111663216730107709?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111663216730107709/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111663216730107709' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111663216730107709'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111663216730107709'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_21.html' title='உள்ளாடையுடன் சதாம் ஹூசைன்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111652006546481371</id><published>2005-05-19T18:20:00.000+02:00</published><updated>2005-05-19T19:26:17.103+02:00</updated><title type='text'>சில வித்தியாசங்கள்</title><content type='html'>மின்னஞ்சலில் வந்த சுவாரசியமான படம் இது. இதில் படத்தைவிட செய்திக்கே முக்கியத்துவம் அதிகம். இரண்டும் ஒரே நாளில் ஒரே நாட்டில் பேசும் வேறுபட்ட இருவரின் பேச்சுக்கள். படத்தைப் படிக்கப் படத்தின் மீது சுட்டவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/new_page_1.htm"&gt;&lt;img src="http://homepage.rub.de/muthu.karuthadurai/weblog/difference1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111652006546481371?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111652006546481371/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111652006546481371' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111652006546481371'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111652006546481371'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_19.html' title='சில வித்தியாசங்கள்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111643337493873389</id><published>2005-05-18T17:35:00.000+02:00</published><updated>2005-05-18T18:35:06.523+02:00</updated><title type='text'>ஒரு  உண்மைக் கதை</title><content type='html'>ஒரு ஊரில் ஒரு காகம் இருந்தது. சுற்றியுள்ள பறவைகளுடன் சேர்ந்து ஆடிப்பாடியும், சில சமயம் பாட்டி சுடும் வடையைத் திருடியும் சந்தோசமாய்ப் பொழுதைக் கழித்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே நாட்கள் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு சக்திவாய்ந்த முனிவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது காகம். சந்தர்ப்பவசத்தால் காகத்தை முனிவருக்கு மிகப் பிடித்துவிட்டது. அந்த ஊரைவிட்டு முனிவர் போகும்முன் ஒரு மந்திரத்தைச் சொல்லிக்கொடுத்த்தார். அந்த மந்திரத்தால் காகத்தை நினைத்ததையெல்லாம் சாத்தியப்படுத்திக்கொள்ள இயலும். ஆனாலும் அந்த மந்திரம் மூன்று முறை மட்டுமே பயன்படுத்தச் சாத்தியப்படும். இதைச் சொல்லிவிட்டு முனிவர் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மந்திரத்தை எதற்குப் பயன்படுத்தலாம் எனக் காகம் யோசித்தது. அந்த நேரத்தில் அது நினைவுக்கு வந்தது. நமது காகத்துக்குக் குயிலைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு தாழ்வுமனப்பான்மை வரும்; அதன் இனிய குரலை அடுத்தவர் பாராட்டுவதால். குயிலின் குரல் எனக்கு வேண்டும் என்று சொல்லி மந்திரத்தைச் சொன்னது. என்ன ஆச்சரியம். அடுத்த நிமிடம் காகத்தின் குரல் குயிலின் குரலைப் போல் மாறிவிட்டது. நமது காகத்துக்கு ஒரே ஆனந்தம் , கூ...கூ.... எனக் குயிலைப்போலக் கூவி ஆனந்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் இருமுறை மந்திரத்தை எப்படிப் பயன்படுத்தலாம், நமக்குத் தேவையானவை என்ன என்று சிந்தித்தது. அந்த நேரத்தில் நினைவுக்கு வந்தவை எல்லாமே அழகானவைகள்தான், அவை எல்லாமே நமக்கும்கூட ரொம்பப் பிடிக்கும். கிளியின் மூக்கு, மயிலின் அழகிய இறகு இன்னும் சிலவும் அந்தப் புத்திசாலிக் காகத்திற்கு நினைவுக்கு வந்தது. ஆனால், மந்திரத்தை அதற்கு மேல் பயன்படுத்த இயலாதென்பதால் இவற்றை மட்டும் வேண்டி மந்திரத்தைச் சொன்னது. அடுத்த விநாடி அனைத்தும் காகத்துக்கு வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது காகத்துக்குப் பெருமை பிடிபடவில்லை. உலகிலேயே அற்புதமான, அழகான பறவை நான்தான், நான்தான் என்று திரும்பத் திரும்பப் பலமுறை தானாகவே சொல்லிக் குதூகலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நேரத்தில் ஒரு பெண்காகம் அந்த வழியாய்ப் பறந்துபோனது. அதைக் கவர எண்ணி அழகிய குயில் குரலில் கூவியது. பெண் காகம் நமது காகத்தை விநோதமாய்ப் பார்ப்பதுபோலப் பார்த்துவிட்டுப் பறந்துவிட்டது. காகத்துக்குக் கொஞ்சம் ஏமாற்றம். இருந்தாலும் அதற்குப் பெரிதாய் வருத்தமில்லை, ஏனென்றால் காகங்களைவிடத் தான் மிக மிக அழகாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டதால் இப்போது சக காகங்கலின் மீது அதற்கு அந்தளவுக்கு மதிப்பு இல்லை. குயிலின் கூட்டத்துடன் சேர்ந்துவிட நினைத்து அங்கு சென்றது. அங்கு இந்தக் காகத்தைப் பார்த்தவுடன் அனைத்துக் குயில்களும் கொத்தி விரட்டிவிட்டன. கிளிகளும் கண்டுகொள்ளவில்லை. மயில்கள் இதைப் பார்த்துச் பார்த்துச் சிரித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாய், ஒரு பெரிய உண்மை நமது காகத்துக்குப் புரிந்தது. காகம் காகமாயும், குயில் குயிலாயும் , மயில் மயிலாயும் இருப்பதுதான் பெருமை. ஆனால் என்ன செய்வது காலம்தான் கடந்துவிட்டதே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(204, 0, 0);"&gt;பின்குறிப்பு:&lt;/span&gt; மந்திரம், மாயம் ஆகியவற்றில் நம்பிக்கை இல்லாத உங்களில் சிலர் இந்தக் கதையைக் கற்பனை என நினைக்கலாம் . இதை உண்மை என நம்பாதவர்கள், புலம் பெயர்ந்து இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையாய் வாழும் எந்த நாட்டினரையும் கேட்டுப் பாருங்கள்.  இந்த அப்பாவிக் காகம் சோகத்துடன் பறந்துசெல்வதை அவர்கள் நிச்சயம்  பார்த்திருப்பார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111643337493873389?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111643337493873389/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111643337493873389' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111643337493873389'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111643337493873389'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_18.html' title='ஒரு  உண்மைக் கதை'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111628322455450306</id><published>2005-05-16T22:48:00.000+02:00</published><updated>2005-05-17T17:20:44.786+02:00</updated><title type='text'>நிலவு  - பூமியின் எதிர்காலம்</title><content type='html'>பூமியின் பெட்ரோலியப் பொருட்கள் தீர்ந்துபோகப் போவதை விரைவிலேயே நாம் காணப்போகிறோம். யுரேனியம் போன்ற கனக்கதிரியக்கத் தனிமங்கள் குறிப்பிடத் தக்க அளவில் மனிதனின் தேவையை பூர்த்திசெய்யத் துவங்கிவிட்டன. என்றாலும் இதற்கு அடுத்த ஆற்றல்மூலத்தைக் கண்டறிய வேண்டிய நிலையில் உலகம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போதைக்கு அணுக்கரு இணைவு மனிதனுக்கு நம்பிக்கை நடசத்திரமாக விளங்குகிறது, இது தொடர்பான ஆய்வுகள் மிகவும் ஆரம்பநிலையில் இருந்தபோதிலும். ஹீலியம்-3 அணுக்கரு இணைவில் எரிபொருளாக இருக்கிறது. ஹீலியம் சக்திமூலமாக மட்டுமன்றி, இன்றைக்கு அறிவியல் ஆய்வுகள், தொழில்நுட்பம் எனப்பலவற்றிலும் இன்றியமையாததாய் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீலியம்-3 யில் இருந்து கிடைக்கும் ஆற்றலின் அளவு மிக அதிகம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இது ஆபத்தில்லாதது. யுரேனியம் போன்ற கதிரியக்கத் தனிமங்களை எரிபொருளாய்ப் பயன்படுத்தும்போது உருவாகும் கதிரியக்க ஆபத்துக்கள் இதில் இல்லை. மனிதனுக்குத் தீங்கு விளைவிக்கும் கதிரியக்க உதிரிப்பொருட்கள் இதில் உருவாவதில்லை. இதன் மூலம் யுரேனிய, புளுடோனிய உலைக் கழிவுகளிடமிருந்து மனிதனுக்கு விடுதலை கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீலியம்-3 ன் மதிப்பு மிக அதிகம். உதாரணமாய், அமெரிக்கா நூற்றுக்கணக்கான F-16 ரக விமானங்களை விற்பதைவிட ஒரு டன் ஹீலியத்தை விற்பதன் மூலம் அதிகப் பணம் ஈட்டமுடியும். 25 டன் ஹீலியம்-3 ஐக் கொண்டு அமெரிக்காவின் ஒரு வருட முழுமைக்குமான ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இயலுமென்றால் அதன் மகிமையைக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இன்றைக்குப் பூமியில் கிடைக்கும் ஹீலியம்-3 யின் அளவு மிகச் சொற்பமே. நமக்குப் பக்கத்துக் கோளான நிலவில் இருக்கும் ஹீலியத்தின் அளவு மிக மிக அதிகம். நிலவில் இருக்கும் ஹீலியத்தின் அளவு பூமியின் ஆற்றல் தேவையைப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பூர்த்தி செய்துகொள்ளப் போதுமானது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விண்வெளி ஓடத்தால் ஒரே தடவையில் கிட்டத்தட்ட 25 டன் ஹீலியத்தை பூமிக்குக் கொண்டுவர இயலும். பூமியின் தேவை ஆண்டுக்கு 100 டன் ஹீலியத்துக்குமேல் இருக்கும். அமெரிக்க டாலர்களில் சொன்னால் 25 டன் ஹீலியம் இந்தியாவின் ஒரு ஆண்டு மொத்த பட்ஜெட் பணத்தைவிடவும் அதிகமானது. இதுவரை கவிஞர்கள் மட்டுமே காதலித்துக்கொண்டிருந்த நிலவைத் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட நாடுகள் காதலிக்க ஆரம்பித்திருப்பது ஏன் என இப்போது நமக்குத் தெளிவாய்ப் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் நிலவினைக் கவனிக்கத் தொடங்கி இருக்கின்றன. இந்தியா 2008 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிலவுக்கு செயற்கைக் கோள் அனுப்ப உள்ளது. சீனா இயந்திர மனிதனை அனுப்ப யோசித்து வருகிறது. இதுவரை பத்துக்கும் மேற்பட்ட மனிதர்களை நிலவுக்கு அனுப்பிய அமெரிக்கா புதிய நோக்கத்துடன் நிலவை ஆராய முனைந்துவருகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;?????? ????????????&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5693164-111628322455450306?l=muthukmuthu.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://muthukmuthu.blogspot.com/feeds/111628322455450306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5693164&amp;postID=111628322455450306' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111628322455450306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5693164/posts/default/111628322455450306'/><link rel='alternate' type='text/html' href='http://muthukmuthu.blogspot.com/2005/05/blog-post_111628322455450306.html' title='நிலவு  - பூமியின் எதிர்காலம்'/><author><name>Muthu</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_i1j_lceDO24/TMf5Hym3bVI/AAAAAAAAAAM/nBpt3TI5Z78/S220/muthu.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5693164.post-111626656918681422</id><published>2005-05-16T19:37:00.000+02:00</published><updated>2005-05-16T20:11:25.223+02:00</updated><title type='text'>இடைத்தேர்தல் வெற்றிகள்</title><content type='html'>கடைசியாய்க்  காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய  இரு தொகுதிகளிலும்  அதிமுக வென்றுவிட்டது.  &lt;a href="http://mayavarathaan.blogspot.com/2005/05/blog-post_16.html"&gt;மாயவ
