<$BlogRSDUrl$>

Friday, April 09, 2004

ராமன் பாலம் என்ற ஆதாம் பாலம் - ஒரு மறு பார்வை

ராமன் பாலம்சில வருடங்களாய் ஆதாம் பாலம் என்ற ராமன் பாலம் பற்றி ஒரே பேச்சாய் இருக்கிறது ..எங்கோ இதைப் பற்றிப் பார்த்தவுடன் கொஞ்சம் சுவாரசியமாய் இருந்ததால் ஒரு தடவை முன்பே எழுதியிருந்தேன். இந்தப் பாலத்தைப் பற்றி அல்லது பாலம் போன்ற நிலப்பரப்புப் பற்றி ராமேஸ்வரம் பகுதியில் இருக்கும் நிறையப் பேருக்கு எத்தனையோ வருடமாய்த் தெரியும் என்றாலும் நாலைந்து வருடங்களுக்கு முன்னர் இதன் புகைப்படங்களை நாசா வெளியிட்டு இதைத்தாங்கள் கண்டறிந்ததாய் உலகிற்குப் பறை சாற்றிக் கொண்டது. இது ராமாயண காலப் பாலம்தான் என ஒரு சாரார் சொல்ல, ஒன்னொரு பிரிவினர் இல்லையென மறுக்க சில ஆண்டுகளாய்ச் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. இது பற்றி நாசா மிக எச்சரிக்கையாகக் கருத்துச் சொல்லியிருக்கிறது.

"...... விவாதம் நடைபெற்றுவரும் படங்களை வெளியிட்டதென்னவோ நாங்கள்தான், ஆனால் இது பற்றி வெளிவந்த எந்தக் கருத்தும் எங்கள் சொந்தக் கருத்து அல்ல..., வெறும் செயற்கைக் கோள் புகைப்படங்களைக் கொண்டு அதன் வயது மற்றும் அது மனிதனால்தான் கட்டப்பட்டதா என்றும் தீர்மானிப்பது இயலாத காரியம்.."

நாசா விண்வெளி நிறுவனம் "ஆதாம் பாலம்" என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தற்கு காரணம் பைபிளில் கூறப்படும் ஆதாம் , ஏவாள் வாழ்ந்த தோட்டம் இலங்கையில்தான் இருந்தது என்ற நம்பிக்கைத்தான் காரணமாம். இப்பாலம் பற்றிப் பல சர்ச்சைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. சென்றவருட இறுதியில் ஒரு அறிவியல் இதழில் ஒரு தொலையுணர்வு மைய இயக்குனராய் இருக்கும் ஒரு பேராசிரியர் ராமாயணத்துக்கும் இதற்கும் தொடர்பிருக்கலாம் என்பதுபோல ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு இன்னொரு பேராசிரியர் மாற்று கருத்துச் சொலியிருக்கிறார்.

2004 ஆம் வருட என்சைக்ளோபீடியாவில் இந்தப் பாலம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதைப் பாருங்கள்...

" ....ஆதாம் பாலம் அல்லது ராமன் பாலம் , இது 18 மைல் (30 கி.மீ) நீளமுடையதாய் இருக்கிறது, அதிக பட்சமாய் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 அடி ஆழத்தில் இருக்கிறது. இந்தியப் புராண நம்பிக்கையின்படி, இப்பாலம் ராமன் என்ற ராமாயண காவியநாயகனால், அசுர அரசன் ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட தனது மனைவி சீதையை மீட்க இப்பாலத்தைக் கட்டினார்."

இந்தப் பாலம் செயற்கைக் கோள் புகைப்படத்துக்குக்கு மட்டும்தான் தெரியும் என்பதில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து கொஞ்ச தூரம் படகில் போனால் இப்பாலத்தைப் பார்க்கலாம். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் மீன் பிடிப் படகுக்காரர்களிடம் 50 ரூபாய் கொடுத்து பார்த்து வந்த இங்கிருக்கும் எனது நணபர் மோகன் சொன்னது,

"...கிட்டத்தட்ட 3 மீட்டர் அகலத்தில் பல கி.மீ நீளத்துக்குத் தெரிகிறது. படகில் போனால் அருகில் போய் தெளிவாகப் பார்க்கலாம் , அதன் சீரான அமைப்பைப் பார்க்கும்போது அது இயற்கையாய் உருவானதுபோல் இல்லை. தேவையில்லாமல் நம்மூர் அரசியல்வாதிகள் பிரச்சனை செய்து கொண்டிருப்பதற்குப் பதில் ஆக்கபூர்வமாய் இதுபோல் விஷயங்களை தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்தலாம் , குறைந்த பட்சம் இதைச் சுற்றுலா மையமாகவாவது ஆக்கலாம் .. "

நம் நணபர்கள் யாராவது தற்செயலாய் அந்தப் பக்கம் போனால் ஒரு வாட்டி பார்த்துவந்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.. இப்போது இது பற்றி விவாதம் செய்பவர்கள் எல்லோரும் இதைப் பார்த்துவிட்டுத்தான் செய்கிறார்களா என்று யாரும் கேட்கவேண்டாம். நானும் ஊருக்குப் போகும்போது முடிந்தால் ஒரு முறை போய்ப்பார்க்க வேண்டும். இன்னும் பார்க்காததால் இது பற்றி நான் எனது கருத்து என எதுவும் சொல்லவில்லை. ( இதுவரை சொன்னது எல்லாம் ஏதோ நம்மால் முடிந்ததைக் கொளுத்திப் போடுவோம் என்ற நல்ல(?) எண்ணத்தில்தான். ).

ஆர்வமுடையவர்களுக்காக..

என்சைக்ளோபீடியா
பிரிட்டானிகா
விக்கிபீடியா
யாகூ.கல்வி
| | |
Comments:
காகா பிரியன்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி.
 

நம்ம ஊர்ல நம்பிக்கைக்கா பஞ்சம். வேப்ப மரத்தில மாரியாத்தா வர்றதும், குளத்துக்கரையில பிள்ளையாரப்பாவும், ரோட்டு வளைவுல திடீர் அய்யனார்கள் தோன்றுவதும் மத நம்பிக்கைகள்னா, ராமர் பாலமோ, ஆதாம் பாலமோ, இன்னோரு மத நம்பிக்கையா இருந்துட்டுப் போகட்டும். அதுக்காக, நடுரோட்டுல சாமி சிலை இருந்தா ஒதுக்கமா சிலைக்கு இடம் கொடுக்குறதில்லையா அது மாதிரி, இந்த நம்பிக்கைக்கும் ஒரு பக்கமா ஒதுக்கிக் கொடுத்துட்டு, சேதுக் கால்வாய் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தான் இந்தியதேசமாதாவுக்குச் செய்கிற வணக்கமாகும்.
 

Post a Comment

This page is powered by Blogger. Isn't yours?Weblog Commenting and Trackback by HaloScan.com